மேலும் அறிய

அரசுப் பொதுத்தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் எத்தனை பேர் தேர்வு எழுதுகிறார்கள் - முழு விவரம் இதோ

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வினை, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 69,263 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர்

விழுப்புரம்: 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 69,263 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.

அரசு பொதுத்தேர்வு 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடப்பு கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்...

தமிழ்நாடு முழுவதும் மேல்நிலைத் தேர்வு (முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2)) மற்றும் இடைநிலைப் (SSLC) பொதுத் தேர்வுகள் வரும் 01.03.2024 முதல் தொடங்கப்பட்டு 08.04.2024 வரை நடைபெற உள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வுகள் 01.03.2024 முதல் 22.03.2024 வரை நடைபெறவுள்ளது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 104 தேர்வு மையங்களில், 21,879 மாணவ/மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

104 தேர்வு மையங்கள்

மேல்நிலை முதலாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வுகள் 04.03.2024 முதல் 25.03.2024 வரை நடைபெறவுள்ளது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 104 தேர்வு மையங்களில் 22,165 மாணவ/மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

ஆயுதம் தாங்கிய காவலர்கள் மூலம் பாதுகாப்பு பணி

10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் 26.03.2024 முதல் 08.04.2024 வரை நடைபெறவுள்ளது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 58 தேர்வு மையங்களும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 68 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 126 தேர்வு மையங்களில் 25,219 மாணவ/மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்விற்கு 8 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், மண்டல அளவிலான 1 விடைத்தாள் சேகரிப்பு மையங்களும், 6 விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் (மேல்நிலை -3, இடைநிலை -3) 28 மேல்நிலை விடைத்தாள் எடுத்துச் செல்லும் வழித்தடங்களும், 34 இடைநிலை மையங்களுக்கு விடைத்தாள் எடுத்துச் செல்லும்  வழித்தடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய காவலர்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திடவும், தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களில் ஒருவர் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாட்கள் செல்வதை உறுதி செய்தல், விடைத்தாட்களை காப்பு மையங்களுக்கு கொண்டு செல்வதில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ளவும், தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், போக்குவரத்துத்துறை சார்பில், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றிட தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திடவும், தேர்வு மையங்களில் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
School Reopening: ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? புதுச்சேரி பெற்றோர் மத்தியில் நீடிக்கும் பெரும் குழப்பம்!
School Reopening: ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? புதுச்சேரி பெற்றோர் மத்தியில் நீடிக்கும் பெரும் குழப்பம்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
Embed widget