![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
School Special classes: தாமதமாக திறக்கப்படும் பள்ளிகள்.. சனிக்கிழமைதோறும் பள்ளிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு..
பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
![School Special classes: தாமதமாக திறக்கப்படும் பள்ளிகள்.. சனிக்கிழமைதோறும் பள்ளிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு.. Due to the late opening of schools, the School Education Department has decided to hold schools on Saturdays. School Special classes: தாமதமாக திறக்கப்படும் பள்ளிகள்.. சனிக்கிழமைதோறும் பள்ளிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/10/7b8ca01f79a1c7bd2d599c04db7d85c91686377324381589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 1 முதல் ஐந்தாம் வகுப்புக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
2022- 23ஆம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 28ஆம் தேதியுடன் முடிந்தன. இந்த மாணவர்களுக்கு பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாகத் தேர்வுகள் நடைபெற்றன. ஏப்ரல் 11ஆம் தேதி தேர்வு தொடங்கி, ஏப்ரல் 28ஆம் தேதி நிறைவு பெற்றது.
மாணவர்களுக்கு ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜூன் மாதம் 1-ம் தேதியும் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஜுன் 5-ம் தேதியும் (இன்று) பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இப்படி வெயில் சுட்டெரிகும் நிலையில் பள்ளி திறப்பு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்படு ஜூன் 12-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார், மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பண்டிகை காலம், மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் சனிக்கிழமை பள்ளிகள் இயங்குவது வழக்கமான ஒன்றுதான்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)