மேலும் அறிய

அண்ணாமலை பல்கலை. அயல்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரி ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்

அண்ணாமலை பல்கலை. அயல்பணி பேராசிரியர்களை அரசுக் கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பல்கலை. அயல்பணி பேராசிரியர்களை அரசுக் கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  

’’அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி அயல்பணி முறையில் அரசு கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், அவர்களின் பணிக்கான எந்தவித ஏற்பளிப்பும் வழங்கப்படாமல் பணியாற்றி வருகின்றனர். துறைத்தலைவர், ஆராய்ச்சி வழிகாட்டி போன்ற உயர்பதவிகளுக்கு தகுதி இருந்தும், அவர்கள் தற்காலிக ஆசிரியர்களைப் போல நடத்தப்படுவது அநீதி.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2012-ஆம் ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து தேவைக்கும் அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டவர்களில் 369 பேராசிரியர்கள் முதல் கட்டமாக அயல்பணி முறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டனர். அதன்பிறகும் படிப்படியாக அனுப்பப்பட்டவர்களையும் சேர்த்து இது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அரசு கல்லூரிகளில் அயல்பணியில் பணியாற்றுகின்றனர்.

எந்த நிர்வாகப் பொறுப்பும் இல்லை

அயல் பணியில் அனுப்பப்பட்ட பேராசிரியர்கள் அனைவரும் அடுத்த 3 ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் அழைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.  ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 2016ஆம் ஆண்டில் அயல்பணி முறையில் அரசு கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட பேராசிரியர்கள், 7 ஆண்டுகளாக அயல்பணி முறையிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணியமர்த்தியது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்பதாலும், அவர்கள் அனைவரும் அயல்பணி முறையில் மட்டுமே பணி செய்து வருவதாலும் அவர்களுக்கு அரசு கல்லூரியில் எந்த நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்படுவதில்லை. அயல்பணி பேராசிரியர்கள் அதிக பணி அனுபவம் கொண்டவர்கள் என்றாலும் கூட, அவர்களை விட குறைவாக பணி அனுபவமும், வயதும்  கொண்ட அரசு கலை  கல்லூரிகளின் பேராசிரியர்கள் தலைமையின்கீழ் தான் செயல்பட வேண்டியுள்ளது.

அதுமட்டுமின்றி, அரசு கல்லூரிகளில் முனைவர் பட்ட மாணவர்களுக்கு ஆராய்ச்சி வழிகாட்டிகளாக  இருக்கவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மதிப்புடனும், பொறுப்புடனும் பணியாற்றி வந்த பேராசிரியர்கள், இப்போது அரசுக் கல்லூரிகளில் எந்த பொறுப்புகளும் இல்லாமல், கிட்டத்தட்ட கவுரவ விரிவுரையாளர்கள் போன்று பணியாற்றி வருகின்றனர். அதற்குக் காரணம், அவர்களுக்கான பணியிடங்கள் எதுவும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏற்படுத்தப்படாததுதான். இது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.

பேராசிரியர்கள் காரணமல்ல!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடிக்கு அதன் பேராசிரியர்கள் எந்த வகையிலும்  காரணம் அல்ல. ஆனாலும், அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில், அரசின் ஆணையை மதித்து அவர்கள் அனைவரும் அரசு கல்லூரிகளில் பணிக்கு சேர்ந்தனர். அரசு அளித்த வாக்குறுதிப்படி 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கே  அழைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றால், அண்ணாமலை  பல்கலைக்கழகச் சீரமைப்பு குறித்து இப்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், அப்போதைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சிறப்பு அதிகாரியுமான சிவதாஸ் மீனா அளித்த பரிந்துரைப்படி,அயல்பணி பேராசிரியர்களை அவர்கள் பணியாற்றும் அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாகவே அறிவிக்க முடியும். அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் அனைத்து சிக்கல்களும் தீரும்.

ஆனால், இதுகுறித்த கோரிக்கையை அயல்பணி பேராசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அயல்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரிகளின்  பேராசிரியர்களாக அறிவிப்பதால் அரசுக்கு எந்த வகையிலும் நிதிச்சுமை ஏற்படாது. அதே நேரத்தில் அயல்பணி பேராசிரியர்களின் உழைப்பை அரசு கல்லூரிகளால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும். பேராசிரியர்களும் கண்ணியத்துடன் பணி செய்ய முடியும். இதை உணர்ந்து அண்ணாமலை  பல்கலைக்கழக அயல்பணி பேராசிரியர்கள் அனைவரையும் அவர்கள் பணியாற்றும் அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget