புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி
ஆன்லைன் செமஸ்டர் தேர்வை ரத்து செய்த அண்ணா பல்கலைகழகம், அதற்கு பதிலாக புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த முறையில் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்.
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் மே மாதம் நடைபெற உள்ளது . கொரோனோ தொற்று காரணமாக கடந்த முறை பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளை கொண்டு ஆன்-லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இந்த முறை ஆன்லனை் தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் கைவிட்டுள்ளது.
மே மாதம் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. கேள்விகள் நேரடியாக கேட்கப்படாமல் மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளது. அதன்படி விடை எழுதும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து அறிந்து விடை அளிக்கலாம். அதே போல தேர்வின்போது இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets