மேலும் அறிய

Suicide : புது செல்போன் கேட்ட கணவன்.. வாங்கி தர மறுத்த மனைவி.. ஈரோட்டில் ஒரு சோக சம்பவம்..

ஈரோடு மாவட்டத்தில் புது செல்போன் கேட்டு மனைவி வாங்கி தராததால் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் புது செல்போன் கேட்டு மனைவி வாங்கி தராததால் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள ராஜீவ் நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது மனைவி பிரியதர்ஷினியுடன் வசித்து வந்தார். இவர்களது திருமணம் காதல் திருமணமாகும். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் வைஷ்ணவன் என்ற மகன் உள்ளார். 

இதனிடையே  முருகேசனுக்கு கடந்த 2 மாதங்களாக  நிரந்தர வேலை இல்லாததால் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.அதேசமயம் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் முருகேசன் வீட்டில் இருந்த நகை மற்றும் பொருட்களை விற்று மது குடித்து வந்ததாகவும்  சொல்லப்படுகிறது. 

இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி முருகேசன் தனக்கு புதிதாக செல்போன் வாங்கி தரவேண்டும்  என்று பிரியதர்ஷினியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ வாங்கி தர முடியாது என கூறியுள்ளார். இதன் காரணமாக முருகேசன், பிரியதர்ஷினி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த முருகேசன், மனைவி, மகனை வீட்டை விட்டு வெளியேற்றி கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து பிரியதர்ஷினி தனது மகனுடன் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதற்கிடையில் சிறிது நேரம் கழித்து முருகேசன் பிரியதர்ஷினியை செல்போனில் அழைத்து வீட்டுக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார். ஆனால் மன வருத்தத்தில் இருந்த பிரியதர்ஷினி அப்பா வீட்டுக்கு வந்து நீங்களே என்னை அழைத்து செல்லுங்கள் என கூறியதாக சொல்லப்படுகிறது. கிட்டதட்ட பிப்ரவரி  7 ஆம் தேதி வரை பிரியதர்ஷினி தனது கணவர் முருகேசன் வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளார். ஆனால் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் முருகேசன் வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் பிரியதர்ஷினிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரும் தன் பெற்றோருடன் வந்து கதவை தட்டிப் பார்த்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். இதில் மின்விசிறியில் துப்பாட்டாவால் முருகேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது.

அவரது உடலும் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. அவரது உடலை பார்த்து பிரியதர்ஷினி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று முருகேசன் உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060.

தலைப்பு செய்திகள்

" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget