மேலும் அறிய

Suicide : புது செல்போன் கேட்ட கணவன்.. வாங்கி தர மறுத்த மனைவி.. ஈரோட்டில் ஒரு சோக சம்பவம்..

ஈரோடு மாவட்டத்தில் புது செல்போன் கேட்டு மனைவி வாங்கி தராததால் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் புது செல்போன் கேட்டு மனைவி வாங்கி தராததால் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள ராஜீவ் நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது மனைவி பிரியதர்ஷினியுடன் வசித்து வந்தார். இவர்களது திருமணம் காதல் திருமணமாகும். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் வைஷ்ணவன் என்ற மகன் உள்ளார். 

இதனிடையே  முருகேசனுக்கு கடந்த 2 மாதங்களாக  நிரந்தர வேலை இல்லாததால் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.அதேசமயம் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் முருகேசன் வீட்டில் இருந்த நகை மற்றும் பொருட்களை விற்று மது குடித்து வந்ததாகவும்  சொல்லப்படுகிறது. 

இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி முருகேசன் தனக்கு புதிதாக செல்போன் வாங்கி தரவேண்டும்  என்று பிரியதர்ஷினியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ வாங்கி தர முடியாது என கூறியுள்ளார். இதன் காரணமாக முருகேசன், பிரியதர்ஷினி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த முருகேசன், மனைவி, மகனை வீட்டை விட்டு வெளியேற்றி கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து பிரியதர்ஷினி தனது மகனுடன் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதற்கிடையில் சிறிது நேரம் கழித்து முருகேசன் பிரியதர்ஷினியை செல்போனில் அழைத்து வீட்டுக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார். ஆனால் மன வருத்தத்தில் இருந்த பிரியதர்ஷினி அப்பா வீட்டுக்கு வந்து நீங்களே என்னை அழைத்து செல்லுங்கள் என கூறியதாக சொல்லப்படுகிறது. கிட்டதட்ட பிப்ரவரி  7 ஆம் தேதி வரை பிரியதர்ஷினி தனது கணவர் முருகேசன் வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளார். ஆனால் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் முருகேசன் வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் பிரியதர்ஷினிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரும் தன் பெற்றோருடன் வந்து கதவை தட்டிப் பார்த்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். இதில் மின்விசிறியில் துப்பாட்டாவால் முருகேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது.

அவரது உடலும் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. அவரது உடலை பார்த்து பிரியதர்ஷினி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று முருகேசன் உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060.

தலைப்பு செய்திகள்

அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Kawasaki KLX230S: ஆன்ரோடு, ஆஃப்ரோடு காதலர்களே.. கவாஸாகி KLX230S இந்தியாவில் அறிமுகம்: விலை, உயரம், சிறப்பம்சங்கள்
Kawasaki KLX230S: ஆன்ரோடு, ஆஃப்ரோடு காதலர்களே.. கவாஸாகி KLX230S இந்தியாவில் அறிமுகம்: விலை, உயரம், சிறப்பம்சங்கள்
Sreethar Vembu: அஞ்சமாட்டேன்! திமுக கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்
Sreethar Vembu: அஞ்சமாட்டேன்! திமுக கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்
இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகும் மழை: எங்கெல்லாம் கொட்டப்போகுது? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகும் மழை: எங்கெல்லாம் கொட்டப்போகுது? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Avore Electric: அட்டகாசமான அவோர் எலக்ட்ரிக் பைக்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச், அசத்தல் வடிவமைப்பு, அம்சங்கள்
Avore Electric: அட்டகாசமான அவோர் எலக்ட்ரிக் பைக்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச், அசத்தல் வடிவமைப்பு, அம்சங்கள்
Embed widget