மேலும் அறிய

Suicide : புது செல்போன் கேட்ட கணவன்.. வாங்கி தர மறுத்த மனைவி.. ஈரோட்டில் ஒரு சோக சம்பவம்..

ஈரோடு மாவட்டத்தில் புது செல்போன் கேட்டு மனைவி வாங்கி தராததால் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் புது செல்போன் கேட்டு மனைவி வாங்கி தராததால் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள ராஜீவ் நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது மனைவி பிரியதர்ஷினியுடன் வசித்து வந்தார். இவர்களது திருமணம் காதல் திருமணமாகும். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் வைஷ்ணவன் என்ற மகன் உள்ளார். 

இதனிடையே  முருகேசனுக்கு கடந்த 2 மாதங்களாக  நிரந்தர வேலை இல்லாததால் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.அதேசமயம் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் முருகேசன் வீட்டில் இருந்த நகை மற்றும் பொருட்களை விற்று மது குடித்து வந்ததாகவும்  சொல்லப்படுகிறது. 

இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி முருகேசன் தனக்கு புதிதாக செல்போன் வாங்கி தரவேண்டும்  என்று பிரியதர்ஷினியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ வாங்கி தர முடியாது என கூறியுள்ளார். இதன் காரணமாக முருகேசன், பிரியதர்ஷினி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த முருகேசன், மனைவி, மகனை வீட்டை விட்டு வெளியேற்றி கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து பிரியதர்ஷினி தனது மகனுடன் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதற்கிடையில் சிறிது நேரம் கழித்து முருகேசன் பிரியதர்ஷினியை செல்போனில் அழைத்து வீட்டுக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார். ஆனால் மன வருத்தத்தில் இருந்த பிரியதர்ஷினி அப்பா வீட்டுக்கு வந்து நீங்களே என்னை அழைத்து செல்லுங்கள் என கூறியதாக சொல்லப்படுகிறது. கிட்டதட்ட பிப்ரவரி  7 ஆம் தேதி வரை பிரியதர்ஷினி தனது கணவர் முருகேசன் வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளார். ஆனால் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் முருகேசன் வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் பிரியதர்ஷினிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரும் தன் பெற்றோருடன் வந்து கதவை தட்டிப் பார்த்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். இதில் மின்விசிறியில் துப்பாட்டாவால் முருகேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது.

அவரது உடலும் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. அவரது உடலை பார்த்து பிரியதர்ஷினி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று முருகேசன் உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்
குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்" - ₹5,000 லஞ்சம் கேட்டு சிக்கிய அரசு ஊழியர்கள்...
EMI பிரச்சினை கொலைவழக்காக மாறியது – கோவை நீதிமன்றம் கடும் தீர்ப்பு
EMI பிரச்சினை கொலைவழக்காக மாறியது – கோவை நீதிமன்றம் கடும் தீர்ப்பு
பேருந்தில் சினிமா ஸ்டைல் திருட்டு... Fevi kwik ஒட்டி ₹5.20 லட்சம் திருட்டு...
பேருந்தில் சினிமா ஸ்டைல் திருட்டு... Fevi kwik ஒட்டி ₹5.20 லட்சம் திருட்டு...
கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் திகில்: ரத்தம் சொட்ட சொட்ட டிடிஆரை தாக்கிய வட மாநில வாலிபர்- நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் திகில்: ரத்தம் சொட்ட சொட்ட டிடிஆரை தாக்கிய வட மாநில வாலிபர்- நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
Embed widget