மேலும் அறிய

Suicide : புது செல்போன் கேட்ட கணவன்.. வாங்கி தர மறுத்த மனைவி.. ஈரோட்டில் ஒரு சோக சம்பவம்..

ஈரோடு மாவட்டத்தில் புது செல்போன் கேட்டு மனைவி வாங்கி தராததால் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் புது செல்போன் கேட்டு மனைவி வாங்கி தராததால் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள ராஜீவ் நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது மனைவி பிரியதர்ஷினியுடன் வசித்து வந்தார். இவர்களது திருமணம் காதல் திருமணமாகும். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் வைஷ்ணவன் என்ற மகன் உள்ளார். 

இதனிடையே  முருகேசனுக்கு கடந்த 2 மாதங்களாக  நிரந்தர வேலை இல்லாததால் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.அதேசமயம் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் முருகேசன் வீட்டில் இருந்த நகை மற்றும் பொருட்களை விற்று மது குடித்து வந்ததாகவும்  சொல்லப்படுகிறது. 

இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி முருகேசன் தனக்கு புதிதாக செல்போன் வாங்கி தரவேண்டும்  என்று பிரியதர்ஷினியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ வாங்கி தர முடியாது என கூறியுள்ளார். இதன் காரணமாக முருகேசன், பிரியதர்ஷினி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த முருகேசன், மனைவி, மகனை வீட்டை விட்டு வெளியேற்றி கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து பிரியதர்ஷினி தனது மகனுடன் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதற்கிடையில் சிறிது நேரம் கழித்து முருகேசன் பிரியதர்ஷினியை செல்போனில் அழைத்து வீட்டுக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார். ஆனால் மன வருத்தத்தில் இருந்த பிரியதர்ஷினி அப்பா வீட்டுக்கு வந்து நீங்களே என்னை அழைத்து செல்லுங்கள் என கூறியதாக சொல்லப்படுகிறது. கிட்டதட்ட பிப்ரவரி  7 ஆம் தேதி வரை பிரியதர்ஷினி தனது கணவர் முருகேசன் வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளார். ஆனால் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் முருகேசன் வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் பிரியதர்ஷினிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரும் தன் பெற்றோருடன் வந்து கதவை தட்டிப் பார்த்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். இதில் மின்விசிறியில் துப்பாட்டாவால் முருகேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது.

அவரது உடலும் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. அவரது உடலை பார்த்து பிரியதர்ஷினி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று முருகேசன் உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget