மேலும் அறிய

Crime: நடுரோட்டில் துடிதுடிக்க மனைவியை கொலை செய்த நபர்.. பரமக்குடியில் பயங்கரம்

பரமேஸ்வரனை மேகலா பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் மேகலா வசித்து வந்தார். இப்படியான நிலையில் மணிகண்டன் என்பவருடன் மேகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் இரண்டாவது கணவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் லெனின் தெருவைச் சேர்ந்தவர் மேகலா. 25 வயதான இவருக்கு பரமேஸ்வரன் என்பவருடன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரனை மேகலா பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் மேகலா வசித்து வந்தார். இப்படியான நிலையில் மணிகண்டன் என்பவருடன் மேகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இருவருமிடையே நெருக்கம் அதிகரித்து பின்னர் திருமணமும் செய்துக் கொண்டனர். மணிகண்டன், மேகலா இருவரும் பரமக்குடி பாரதிநகர் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த ஒரு மாதமாக இந்த தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மேகலா மணிகண்டனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் அவர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். மணிகண்டன், மேகலா இருவரையும் தனித்தனியாக அழைத்து போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். 

இப்படியான நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் மேகலா தனது தாயார் வேலை பார்த்து வரும் பெரிய கடை பஜாரில் உள்ள கடையில் விற்பனைக்காக பணியாரம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன், என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய், சேர்ந்து வாழ மறுக்கிறாய் என கேட்டு தகராறு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மேகலாவை சரமாரியாக முதுகில் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் கடை வாசலிலேயே சரிந்தார். உடனடியாக மணிகண்டன் அப்பகுதியில் இருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அப்பகுதி மக்கள் துணிச்சலாக செயல்பட்டு அவரை விரட்டி பிடித்தனர். பின்னர் அங்குள்ள கம்பம் ஒன்றில் கட்டி வைத்தனர். மேலும் உயிருக்கு போராட்டிய மேகலா சற்று நேரத்தில் உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த பரமக்குடி போலீசார் விரைந்து வந்து மேகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மணிகண்டனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தலைப்பு செய்திகள்

காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget