மேலும் அறிய

Crime: நடுரோட்டில் துடிதுடிக்க மனைவியை கொலை செய்த நபர்.. பரமக்குடியில் பயங்கரம்

பரமேஸ்வரனை மேகலா பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் மேகலா வசித்து வந்தார். இப்படியான நிலையில் மணிகண்டன் என்பவருடன் மேகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் இரண்டாவது கணவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் லெனின் தெருவைச் சேர்ந்தவர் மேகலா. 25 வயதான இவருக்கு பரமேஸ்வரன் என்பவருடன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரனை மேகலா பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் மேகலா வசித்து வந்தார். இப்படியான நிலையில் மணிகண்டன் என்பவருடன் மேகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இருவருமிடையே நெருக்கம் அதிகரித்து பின்னர் திருமணமும் செய்துக் கொண்டனர். மணிகண்டன், மேகலா இருவரும் பரமக்குடி பாரதிநகர் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த ஒரு மாதமாக இந்த தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மேகலா மணிகண்டனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் அவர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். மணிகண்டன், மேகலா இருவரையும் தனித்தனியாக அழைத்து போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். 

இப்படியான நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் மேகலா தனது தாயார் வேலை பார்த்து வரும் பெரிய கடை பஜாரில் உள்ள கடையில் விற்பனைக்காக பணியாரம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன், என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய், சேர்ந்து வாழ மறுக்கிறாய் என கேட்டு தகராறு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மேகலாவை சரமாரியாக முதுகில் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் கடை வாசலிலேயே சரிந்தார். உடனடியாக மணிகண்டன் அப்பகுதியில் இருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அப்பகுதி மக்கள் துணிச்சலாக செயல்பட்டு அவரை விரட்டி பிடித்தனர். பின்னர் அங்குள்ள கம்பம் ஒன்றில் கட்டி வைத்தனர். மேலும் உயிருக்கு போராட்டிய மேகலா சற்று நேரத்தில் உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த பரமக்குடி போலீசார் விரைந்து வந்து மேகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மணிகண்டனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajyasabha MP Election: புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார்? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? திமுகவிற்கு 4, அன்புமணிக்கு ஆப்பு?
Rajyasabha MP Election: புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார்? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? திமுகவிற்கு 4, அன்புமணிக்கு ஆப்பு?
Brij Bhushan: ப்ரிஜ் பூஷன் நல்லவருங்க ”என் பொண்ணு தான் பொய் சொல்லிட்டா” - போக்சோ வழக்கு ரத்து
Brij Bhushan: ப்ரிஜ் பூஷன் நல்லவருங்க ”என் பொண்ணு தான் பொய் சொல்லிட்டா” - போக்சோ வழக்கு ரத்து
RCB Vs LSG: கடைசி லீக் போட்டி, முதல் இடத்தை பிடிக்குமா ஆர்சிபி? மும்பையை தலையில் தட்டி ஓரம் கட்டிய பஞ்சாப்
RCB Vs LSG: கடைசி லீக் போட்டி, முதல் இடத்தை பிடிக்குமா ஆர்சிபி? மும்பையை தலையில் தட்டி ஓரம் கட்டிய பஞ்சாப்
PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aartiஓய்வை அறிவித்த தோனி?” ஒவ்வொரு வருஷமும் சவால்..” குழப்பத்தில் ரசிகர்கள் | MS Dhoni Retirementதமிழ்நாட்டில் பவன் போட்டி? அதிமுக கூட்டணியில் ஜனசேனா! பாஜக பக்கா ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajyasabha MP Election: புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார்? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? திமுகவிற்கு 4, அன்புமணிக்கு ஆப்பு?
Rajyasabha MP Election: புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார்? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? திமுகவிற்கு 4, அன்புமணிக்கு ஆப்பு?
Brij Bhushan: ப்ரிஜ் பூஷன் நல்லவருங்க ”என் பொண்ணு தான் பொய் சொல்லிட்டா” - போக்சோ வழக்கு ரத்து
Brij Bhushan: ப்ரிஜ் பூஷன் நல்லவருங்க ”என் பொண்ணு தான் பொய் சொல்லிட்டா” - போக்சோ வழக்கு ரத்து
RCB Vs LSG: கடைசி லீக் போட்டி, முதல் இடத்தை பிடிக்குமா ஆர்சிபி? மும்பையை தலையில் தட்டி ஓரம் கட்டிய பஞ்சாப்
RCB Vs LSG: கடைசி லீக் போட்டி, முதல் இடத்தை பிடிக்குமா ஆர்சிபி? மும்பையை தலையில் தட்டி ஓரம் கட்டிய பஞ்சாப்
PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
Annamalai Vs Nainar: அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
IPL MI Vs PBKS: 185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
Embed widget