மேலும் அறிய

Crime: நடுரோட்டில் துடிதுடிக்க மனைவியை கொலை செய்த நபர்.. பரமக்குடியில் பயங்கரம்

பரமேஸ்வரனை மேகலா பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் மேகலா வசித்து வந்தார். இப்படியான நிலையில் மணிகண்டன் என்பவருடன் மேகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் இரண்டாவது கணவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் லெனின் தெருவைச் சேர்ந்தவர் மேகலா. 25 வயதான இவருக்கு பரமேஸ்வரன் என்பவருடன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரனை மேகலா பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் மேகலா வசித்து வந்தார். இப்படியான நிலையில் மணிகண்டன் என்பவருடன் மேகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இருவருமிடையே நெருக்கம் அதிகரித்து பின்னர் திருமணமும் செய்துக் கொண்டனர். மணிகண்டன், மேகலா இருவரும் பரமக்குடி பாரதிநகர் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த ஒரு மாதமாக இந்த தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மேகலா மணிகண்டனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் அவர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். மணிகண்டன், மேகலா இருவரையும் தனித்தனியாக அழைத்து போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். 

இப்படியான நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் மேகலா தனது தாயார் வேலை பார்த்து வரும் பெரிய கடை பஜாரில் உள்ள கடையில் விற்பனைக்காக பணியாரம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன், என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய், சேர்ந்து வாழ மறுக்கிறாய் என கேட்டு தகராறு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மேகலாவை சரமாரியாக முதுகில் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் கடை வாசலிலேயே சரிந்தார். உடனடியாக மணிகண்டன் அப்பகுதியில் இருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அப்பகுதி மக்கள் துணிச்சலாக செயல்பட்டு அவரை விரட்டி பிடித்தனர். பின்னர் அங்குள்ள கம்பம் ஒன்றில் கட்டி வைத்தனர். மேலும் உயிருக்கு போராட்டிய மேகலா சற்று நேரத்தில் உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த பரமக்குடி போலீசார் விரைந்து வந்து மேகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மணிகண்டனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
ABP Premium

வீடியோ

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Embed widget