மேலும் அறிய

Crime: நடுரோட்டில் துடிதுடிக்க மனைவியை கொலை செய்த நபர்.. பரமக்குடியில் பயங்கரம்

பரமேஸ்வரனை மேகலா பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் மேகலா வசித்து வந்தார். இப்படியான நிலையில் மணிகண்டன் என்பவருடன் மேகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் இரண்டாவது கணவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் லெனின் தெருவைச் சேர்ந்தவர் மேகலா. 25 வயதான இவருக்கு பரமேஸ்வரன் என்பவருடன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரனை மேகலா பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் மேகலா வசித்து வந்தார். இப்படியான நிலையில் மணிகண்டன் என்பவருடன் மேகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இருவருமிடையே நெருக்கம் அதிகரித்து பின்னர் திருமணமும் செய்துக் கொண்டனர். மணிகண்டன், மேகலா இருவரும் பரமக்குடி பாரதிநகர் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த ஒரு மாதமாக இந்த தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மேகலா மணிகண்டனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் அவர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். மணிகண்டன், மேகலா இருவரையும் தனித்தனியாக அழைத்து போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். 

இப்படியான நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் மேகலா தனது தாயார் வேலை பார்த்து வரும் பெரிய கடை பஜாரில் உள்ள கடையில் விற்பனைக்காக பணியாரம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன், என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய், சேர்ந்து வாழ மறுக்கிறாய் என கேட்டு தகராறு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மேகலாவை சரமாரியாக முதுகில் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் கடை வாசலிலேயே சரிந்தார். உடனடியாக மணிகண்டன் அப்பகுதியில் இருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அப்பகுதி மக்கள் துணிச்சலாக செயல்பட்டு அவரை விரட்டி பிடித்தனர். பின்னர் அங்குள்ள கம்பம் ஒன்றில் கட்டி வைத்தனர். மேலும் உயிருக்கு போராட்டிய மேகலா சற்று நேரத்தில் உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த பரமக்குடி போலீசார் விரைந்து வந்து மேகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மணிகண்டனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மனிதர்களை கொல்வது இலக்கல்ல.. .பொருட்சேதமே டார்க்கெட் - சிக்கிய குண்டு மிரட்டல் கடிதம்....
மனிதர்களை கொல்வது இலக்கல்ல.. .பொருட்சேதமே டார்க்கெட் - சிக்கிய குண்டு மிரட்டல் கடிதம்....
வீடு புகுந்த திருடன் தப்பி ஓட்டம்... பேரூரில் நள்ளிரவு பரபரப்பு...
வீடு புகுந்த திருடன் தப்பி ஓட்டம்... பேரூரில் நள்ளிரவு பரபரப்பு...
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
மனைவியை கொன்று தலைமறைவான முன்னாள் ராணுவ அதிகாரி: கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது சிக்கினார்
மனைவியை கொன்று தலைமறைவான முன்னாள் ராணுவ அதிகாரி: கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது சிக்கினார்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
Car Sales: மாஸ் காட்டிய மாருதி! மார்ச் மாசம் அதிகம் விற்ற கார் யாரோடது?
Car Sales: மாஸ் காட்டிய மாருதி! மார்ச் மாசம் அதிகம் விற்ற கார் யாரோடது?
Indigo Fare Inreased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
Indigo Fare Inreased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
MK Stalin: கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
Edappadi Palanisamy: கருணாநிதி, கனிமொழி சங்கியா? 5 ஆண்டில் 18 ஆயிரம் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்- ஆவேசமான ஈபிஎஸ்!
Edappadi Palanisamy: கருணாநிதி, கனிமொழி சங்கியா? 5 ஆண்டில் 18 ஆயிரம் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்- ஆவேசமான ஈபிஎஸ்!
Embed widget