மேலும் அறிய

ஆரணி : காதுகள், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பெண் கொடூரக்கொலை.. வியாபாரியின் பகீர் வாக்குமூலம்..!

தன்னை விட்டு இன்னொருவருடன் தொடர்பில் இருந்ததால், கொன்றதாக பால் வியாபாரி வாக்குமூலம்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இருசப்பன் இவருடைய மனைவி சாந்தி (47).  இருசப்பன் 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது சாந்தி மகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாந்தி கட்டிட வேலை பார்த்து வருகிறார் . கட்டிட வேலையை முடித்துவிட்டு கடந்த 3-ஆம் தேதி இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இரவு 8.30 மணிக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. சாந்தி உடனடியாக  வீட்டில் இருந்த தன்னுடைய மகளிடம் வெளியெ சென்று வருவதாகக் கூறி சென்றுள்ளார். மேலும் மறுநாள் காலையில் புதுப்பாளையம் அருகே உள்ள விவசாய நிலத்தில் சாந்தி சடலமாக உள்ளதாக தகவல் வந்தது. தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் கண்ணமங்கலம் காவல்துறையினர் சம்பவடத்திற்கு சென்று பார்த்தன. அப்போது சாந்தி 2 காதுகளும், கழுத்தும் அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமான நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.


ஆரணி : காதுகள், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பெண் கொடூரக்கொலை.. வியாபாரியின் பகீர் வாக்குமூலம்..!

மேலும், இந்த சம்பவம் குறித்து ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் தடயங்களை சேகரிக்கும் நுண்ணரிவு பிரிவு கைரேகை நிபுணர் டி.எஸ்.பி சுந்தர்ராஜ் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர்,  தனிப்படை அமைத்து, இறந்த சாந்தியின் செல்போனை மையமாக கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர் . அப்போது அதே பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து  புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி வேல்முருகன் (47) என்பவர் திடிரென நாம் மாட்டிக்கொள்வோமோ என்று எண்ணி புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத்திடம் சரணடைந்தார். அதனையடுத்து கோபிநாத் கண்ணமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் சசிகுமார் வேல்முருகனை கைது செய்தார்.

ஆரணி : காதுகள், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பெண் கொடூரக்கொலை.. வியாபாரியின் பகீர் வாக்குமூலம்..!

மேலும் சம்பவம் குறித்து  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், சம்பவடத்திற்கு குற்றவாளி வேல்முருகனிடம்  விசாரணை மேற்கொண்டார்.

குற்றவாளி வேலுமுருகன் விசாரணையில் கூறியதாவது, ”சாந்தி என்னிடம் கடந்த 4 வருடமாக தொடர்பில் இருந்தார். தற்போது என்னை தவிர்த்து விட்டு இன்னொருவரிடம் தொடர்பில் இருந்தார். இதனால் சாந்திக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து எப்போதும் தனிமையில் சந்திக்கும் இடத்திற்கு வருமாறு அழைத்தேன், சாந்தி வந்தவுடன் எனக்கும் சாந்திக்கும் அது சம்பந்தமாக சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. இதில் ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சாந்தியை கொலை செய்தேன்” என்றார். சம்பவ இடத்தில் கொலை செய்தது எப்படி என்று துல்லியமாக போலீசாரிடம் குற்றவாளி வேல்முருகன் நடித்து காட்டினார். பின்னர் கண்ணமங்கலம் காவல்நிலையத்திற்கு குற்றவாளியை அழைத்து சென்று வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடம் இருந்த,  12 கிராம் தங்க நகை, கொலைசெய்ய பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து, குற்றவாளியை ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

அரசு ஊழியர்கள் வீடுகளை குறி வைத்து அடுத்தடுத்து திருட்டு; 100 சவரன் தங்க நகை ‛அபேஸ்’

தலைப்பு செய்திகள்

15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
Embed widget