மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
காஞ்சிபுரம்: செல்போன் வாங்கி தராத கணவர்? - மன உளைச்சலில் மனைவி தற்கொலை!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கணவர் செல்போன் வாங்கி தராததால் மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![காஞ்சிபுரம்: செல்போன் வாங்கி தராத கணவர்? - மன உளைச்சலில் மனைவி தற்கொலை! woman hanged herself because her husband did not buy her a cell phone near Kanchipuram Sriperumbudur காஞ்சிபுரம்: செல்போன் வாங்கி தராத கணவர்? - மன உளைச்சலில் மனைவி தற்கொலை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/10/7dd7c35c44a55d4c51d1afc42c89fc7d1665366045023109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மணிமங்கலம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பெரியார் காலணியில் வசித்து வருபவர் முருகன். கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி வ/26. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சரஸ்வதி தன் கணவரிடம் தொடர்ந்து செல்போன் வாங்கி தரச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். கணவர் செல்போன் வாங்கி தர மறுத்து தகாத வார்த்தையில் திட்டி விட்டு வீட்டை விட்டு வெளியேறி சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது பெட் ரூம் உள்ளே தாழ்பாள் இட்டிருந்துள்ளது.
![காஞ்சிபுரம்: செல்போன் வாங்கி தராத கணவர்? - மன உளைச்சலில் மனைவி தற்கொலை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/10/773219d7221c5e8015141f70e0fe1ed21665366025304109_original.jpg)
கதவை வேகமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த முருகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது சரஸ்வதி மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சரஸ்வதி இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
![காஞ்சிபுரம்: செல்போன் வாங்கி தராத கணவர்? - மன உளைச்சலில் மனைவி தற்கொலை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/10/7dd7c35c44a55d4c51d1afc42c89fc7d1665366045023109_original.jpg)
தகவல் அறிந்து விரைந்து சென்றமணிமங்கலம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி இச்சம்பம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கணவரிடம் செல்போன் கேட்டு வாங்கி தர மறுத்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருந்தும் காவல்துறையினர் இந்த சம்பவத்திற்கு வேறு ஏதாவது உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion