மேலும் அறிய

காலையில் அக்காவிற்கு  திருமணம், இரவு தங்கை உயிரிழப்பு - மயிலாடுதுறையில் சோகம்

தனது மருமளின் அக்காவிற்கு செய்த சீர்வரிசையை பார்த்த  மாமியார் தனது மருமகளை கொடுமைப்படுத்தியதால் பெண் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை அருகே திருமண ஆன 3 மாதத்தில் பெண் உயிரிழந்ததை அடுத்து கோட்டாட்சியர் விசாரணையை மேற்கொண்டுள்ளார்.
 

காதல் திருமணம் செய்துக்கொண்ட பெண் 3 மாதத்தில் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யராஜ் - ஆரோக்கியசெல்வி தம்பதியினர். இவர்களுக்கு நான்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூன்றாவது மகள் 23 வயதான பட்டதாரி ஜெனிபர், இவரும்  இவர்களது உறவினரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா செங்குடி கிராமத்தை சேர்ந்த சவுரிராஜ் - இருதயமேரி தம்பதியினரின் மகன் மார்ட்டின் ராஜ் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார்.  இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் செய்ய மார்ட்டின் ராஜ் குடும்பத்தினர் பேசியபோது 2 -வது மகளுக்கு திருமணம் செய்யாமல் 3 -வது மகள் ஜெனிபருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அதற்கு பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும், சீர்வரிசை எதுவும் வேண்டாம் என்று கூறி மார்ட்டின் ராஜ் கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி ஜெனிபரை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மகள் திருமணம் முடிந்தவுடன் சீர்வரிசை செய்வதாக ஜெனிபரின் பெற்றொர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.


காலையில் அக்காவிற்கு  திருமணம், இரவு தங்கை உயிரிழப்பு - மயிலாடுதுறையில் சோகம்

சீர்வரிசை பொருட்களுடன் ஒப்பீடு செய்த மாமியார்

இந்நிலையில் திருமணம் முடிந்து பத்து நாட்கள் மட்டுமே மணப்பெண் ஜெனிபருடன் குடும்பம் நடத்திய மார்ட்டின்ராஜ் அப்போதே மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்த சூழலில் ஜெனிபரின் அக்காவுக்கு நேற்று முன்தினம் 19-ம் தேதி குடவாசல் அருகே பருத்தியூர் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு ஜெனிபர், அவரது மாமியார் இருதயமேரி, நாத்தனார் லவன்சியாமேரி ஆகியோர் சென்றுள்ளனர். அப்பொழுது ஜெனிபரின் அக்காவிற்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை அவர்களது செல்போனில் புகைப்படம் எடுத்த மாமியாரும், நாத்தனார் ஜெனிபரிடம் உனக்கு சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என்று அங்கேயே கடும் சண்டையிட்டு ஜெனிபரை ஊருக்கு அழைத்து சென்றுவிட்டனர்.


காலையில் அக்காவிற்கு  திருமணம், இரவு தங்கை உயிரிழப்பு - மயிலாடுதுறையில் சோகம்

அதனைத் தொடர்ந்து நேற்று இரவு தனது வீட்டிற்கு தொலைபேசியில் பேசிய ஜெனிபர் அக்காவிற்கு மட்டும் இவ்வளவு சீர்வரிசை பொருட்களை உன் குடும்பத்தார் செய்துள்ளனர், உனக்கு மட்டும் ஏன் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என சொல்லி கொடுமைப்படுத்தி தாக்கியதாக தொலைபேசியில் தெரிவித்துள்ளார். அப்போது ஜெனிபர் பேசிக்கொண்டு இருக்கும்போதே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த ஜெனிபர் குடும்பத்தினர் தங்கள் மகனை ஜெனிபர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அங்கு ஜெனிபர் பேச்சு மூச்சு இன்றி மயங்கி கிடந்துள்ளார். 


காலையில் அக்காவிற்கு  திருமணம், இரவு தங்கை உயிரிழப்பு - மயிலாடுதுறையில் சோகம்

கோட்டாச்சியர் விசாரணை

உடனே அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே ஜெனிபர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜெனிபரின் சாவுக்கு காரணமான அவரது மாமியார் இருதயமேரியை கைது செய்ய வலியுறுத்தி ஜெனிபரின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் மயிலாடுதுறை மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சீர்காழி கோட்டாட்சியர் பொறுப்பு அர்ச்சனா நேரில் ஜெனிபர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் ஜெனிபரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்ய அனுமதித்தனர். 2 வது மகள் திருமணநாளில் காதல் திருமணம் செய்த 3 -வது மகள் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
Embed widget