மேலும் அறிய

Crime: கோயில் குளத்தில் மிதந்த சடலம்.. திருமணத்தை மீறிய உறவால் கணவனை கொன்ற பெண் தற்கொலை.. நடந்தது என்ன?

கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இரவு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பக்குளத்தில் பெண் ஒருவரின் உடல் மிதப்பதை அப்பகுதியில் இந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை பார்த்தசாரதி கோயில் குளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இரவு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பக்குளத்தில் பெண் ஒருவரின் உடல் மிதப்பதை அப்பகுதியில் இந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஐஸ்அவுஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

வேலைக்கு சென்ற இடத்தில் தொடர்பு 

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் விஜயலட்சுமி என்பதும், இவர் சென்னை சூளைமேடு கண்ணகி தெருவை சேர்ந்த பெயிண்டர் செல்வத்தின் மனைவி என்பதும் தெரிய வந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி செல்வம் திடீரென மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் செல்வம் விஷம் கலந்த உணவு சாப்பிட்டார் என அறிக்கை அளித்தனர். 

இதனையடுத்து விஜயலட்சுமி தலைமறைவாகியுள்ளார். போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் அடுத்த சில நாட்களில் அவர் கைது செய்யப்பட்டார். விஜயலட்சுமியிடம் நடத்திய விசாரணையில், மெட்ரோ ரயில் வேலைக்கு செல்லும் போது ரவுடி முண்டக்கண்ணு என்ற மோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், கணவர் செல்வம் வேலைக்கு சென்ற பிறகு மோகனை வீட்டுக்கு அழைத்து இருவரும் தனிமையில் இருப்பதை வழக்கமாக்கி கொண்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் ஒருநாள் வேலைக்கு போகாமல் செல்வம் திடீரென மதியம் வீட்டுக்கு வந்த நிலையில் மோகனுடன் விஜயலட்சுமி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 

காட்டிக் கொடுத்த அறிக்கை 

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் மோகனை பார்க்க முடியாமல் தவித்த விஜயலட்சுமி போனில் அவரை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியுள்ளார். அதன்படி செப்டம்பர் 2 ஆம் தேதி உணவில் விஷம் கலந்து கொடுக்க, இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இறந்ததும் மதுபழக்கத்தால் இறந்ததாக விஜயலட்சுமி நாடகமாடியுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையால் விஜயலட்சுமி சிக்கிக்கொண்டார். 

இதனையடுத்து விஜி, மோகன் இருவரையும் சூளைமேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீண்ட நாட்களாக சிறை தண்டனை அனுபவித்த அவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். நேராக வீட்டுக்கு சென்ற விஜயலட்சுமியை மகள்கள், உறவினர்கள் யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த அவர், தனக்கு தானே பேசிக் கொள்வது என மனநிலை பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதனைப் பார்த்த மோகனும் விஜயலட்சுமியை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். 

இதனால் மனமுடைந்து போன அவர் கடந்த 45 நாட்களாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பக்குளத்தில் முன்பு உள்ள மண்டபத்தில் தங்கி பிரசாத உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் தீராத மன அழுத்தம் அவரை தற்கொலைக்கு தள்ளியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்தை மீறிய உறவு குடும்பத்தை இழந்தது மட்டுமல்லாமல் தற்கொலை எண்ணத்தை தேடும் அளவுக்கு சென்றது வேதனையளிப்பதாக விஜயலட்சுமி உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சுடுகாடு அருகே ரகசிய சாராய விற்பனை: சுமித்ராவை தட்டித்தூக்கிய போலீஸ்...
சுடுகாடு அருகே ரகசிய சாராய விற்பனை: சுமித்ராவை தட்டித்தூக்கிய போலீஸ்...
போதையில் கதவைத் திறந்து வைத்துத் தூக்கம்: புதுச்சேரியில் கார் திருடிய 'பக்கத்து அறை' வாலிபர் 24 மணிநேரத்தில் கைது!
போதையில் கதவைத் திறந்து வைத்துத் தூக்கம்: புதுச்சேரியில் கார் திருடிய 'பக்கத்து அறை' வாலிபர் 24 மணிநேரத்தில் கைது!
WhatsApp விளம்பரத்தை நம்பினால் இவ்வளவு ஆபத்தா? புதுச்சேரியில் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி!
WhatsApp விளம்பரத்தை நம்பினால் இவ்வளவு ஆபத்தா? புதுச்சேரியில் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி!
சேலத்தில் கொடூரம்: பள்ளி மாணவனைக் கொன்று வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் - காரணம் என்ன?
சேலத்தில் கொடூரம்: பள்ளி மாணவனைக் கொன்று வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் - காரணம் என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

ஜெ.வின் ஆன்மீக வழிகாட்டி இன்று விஜய்யின் சிறப்பு அதிகாரி! யார் இந்த ரிக்கி ரதன்
வேலுமணி CV சண்முகம் உட்பட 26 பேரின் பதவிகள் பறிப்பு எடப்பாடி அதிரடி
சட்டமன்றத்தில் விஜய்க்கு ஆதரவு அமமுக காமராஜ் நீக்கம் TTV அதிரடி!
DRUGS-க்கு END உளவுத்துறைக்கு புதிய ஐ.ஜி CM விஜய் அதிரடி மூவ் யார் இந்த அஸ்ரா கார்க்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரிலீஸ் ரத்து? தயாரிப்பாளரின் நள்ளிரவு விளக்கத்தால் ரசிகர்கள் ஷாக்
சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரிலீஸ் ரத்து? தயாரிப்பாளரின் நள்ளிரவு விளக்கத்தால் ரசிகர்கள் ஷாக்
CV Shanmugam: OPS-ஐ விரட்டிவிட்ட பாவத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம்.. சிவி சண்முகம் புலம்பல்
CV Shanmugam: OPS-ஐ விரட்டிவிட்ட பாவத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம்.. சிவி சண்முகம் புலம்பல்
CV Shanmugam: எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதிமுக.. சிவி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு
CV Shanmugam: எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதிமுக.. சிவி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு: வைகாசி மாத பூஜைக்கு 5 நாள் சிறப்பு வழிபாடு...
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு: வைகாசி மாத பூஜைக்கு 5 நாள் சிறப்பு வழிபாடு...
MK Stalin: இருக்கு சம்பவம் இருக்கு! திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
MK Stalin: இருக்கு சம்பவம் இருக்கு! திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
Vijay Slams Udhayanidhi: மக்கள் ஆதரவு இல்லையா.? புள்ளிவிவரத்துடன் உதயநிதியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்
மக்கள் ஆதரவு இல்லையா.? புள்ளிவிவரத்துடன் உதயநிதியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்
தேனிக்கு டூர் போறீங்களா? வைகை அணை பூங்காவை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!
தேனிக்கு டூர் போறீங்களா? வைகை அணை பூங்காவை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!
Amul Milk Price Hike: நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு; வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமுல்
நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு; வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமுல்
Embed widget