மேலும் அறிய

Crime: ’வேறொரு பெண்ணுடன் பேசுவியா..' லிவ் இன் ரிலேஷன்ஷிப் பார்ட்னரை குத்திக் கொலை செய்த காதலி.. பெங்களூருவில் ஷாக்!

பெங்களூரில் சந்தேகத்தால் லிவ் இன் பார்ட்னரை, பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Crime: சந்தேகத்தால் லிவ்இன் பார்ட்னரை, பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. சந்தேகம் காரணமாக பெண்களுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆண்களும் சந்தேகத்தில் பாதிக்கப்படுவதற்கு எடுத்துக்காட்டாக பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது.

சந்தேகத்தால் வெறிச்செயல்:

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேணுகா (24). இவர் பெங்களூருவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 15 வருடங்களாக பெங்களூருவில் இருக்கும் ரேணுகாவுக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிகிறது.  ரேணுகாவுக்கு அதே பகுதியில் வேலை பார்த்து வந்த ஜாவத் (29) என்ற நபரை காதலித்து வந்துள்ளார். ஜாவத்தின் சொந்த ஊரரான கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து வேலைக்கு வந்திருந்தார். ஜாவத் செல்போன் பழுது பார்க்கும் வேலையை செய்து வந்திருந்தார்.

இவர்கள் பப்பில் சந்தித்து காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலித்து வந்த நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். பெங்களூருவில் உள்ள அக்ஷயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து இவர்கள் இரண்டு பேரும் தங்கி இருந்தனர். இந்நிலையில், ஜாவத் வேறொரு பெண்ணுடன் நட்பாக இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த ரேணுகா அவரிடம் இதை பற்றி கேட்டு தொடர்ந்து சண்டையிட்டு வந்திருந்தார். இதனை பற்றி அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில், சம்பவத்தன்று ஜாவத்துக்கு அவரது தோழி போன் செய்துள்ளார். 

லிவ் இன் பார்ட்னரை கொன்ற பெண்:

இதனை அறிந்த ரேணுகா, ஜாவத்திடம் சண்டை போட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்கும் வாதம் நீடித்த நிலையில், அருகில் கிடந்த கத்தியை எடுத்து ஜாவத்தின் மார்பில் பலமுறை குத்தியுள்ளார்.  ஜாவத்தை குத்திவிட்டு, ரேணுகா அவரை மடியில்போட்டு அழுதுயுள்ளார். இதனை அறிந்த  காவலாளி உடனே சம்பவ இடத்திற்கு வந்து ஜாவத்தை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஜாவத்தை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் ஜாவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  லிவ்  இன் பார்ட்னரை கொலை செய்த ரேணுகாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget