மேலும் அறிய

கிரேன் ரோப் அறுந்து விழுந்து மேற்கு வங்க மாநில தொழிலாளி உயிரிழப்பு! போலீஸ் தடியடி!

சேதராப்பட்டு இரும்பு தொழிற்சாலையில் கிரேன் ரோப் அறுந்து விழுந்து மேற்கு வங்க மாநிலத் தொழிலாளி உயிரிழந்தார்.

புதுச்சேரி அருகே தனியார் தொழிற்சாலையில் கிரேன் ரோப் அறுந்து விழுந்து மேற்கு வங்க மாநிலத் தொழிலாளி உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட  கலவரத்தில் தொழிற்சாலைப் பொருட்கள், வாகனங்கள், போலீஸ் ஜீப் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸார், தொழிலாளர்கள் காயமடைந்தனர். புதுச்சேரி அருகே சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் செல்போன் டவர் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.


கிரேன் ரோப் அறுந்து விழுந்து மேற்கு வங்க மாநில தொழிலாளி உயிரிழப்பு! போலீஸ் தடியடி!

இங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உஸ்மான் மாலிக் மகன் ஜிகர் மாலிக் (32) என்பவரும் பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் தொழிற்சாலை அருகில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் ஜிகர் மாலிக் வழக்கம் போல் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தொழிற்சாலையில் கிரேன் உதவியுடன் இரும்பு உதிரிபாகங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றப்பட்டன. அச்சமயம் எதிர்பாராத விதமாக கிரேனின் ரோப் அறுந்து, அதிலிருந்த இரும்பு ராடு ஜிகர் மாலிக் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த ஜிகர் மாலிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டித்து சக தொழிலாளர்கள் ஜிகர் மாலிக்கின் உடலை  தரமறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கிரேன் ரோப் அறுந்து விழுந்து மேற்கு வங்க மாநில தொழிலாளி உயிரிழப்பு! போலீஸ் தடியடி!

இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேதராப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீஸார், தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தைக் கைவிட தொழிலாளர்கள் மறுத்ததால் போலீஸாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார், தொழிலாளர்கள் மீது தடியடி நடத்திக் கலைத்தனர்.


கிரேன் ரோப் அறுந்து விழுந்து மேற்கு வங்க மாநில தொழிலாளி உயிரிழப்பு! போலீஸ் தடியடி!

இதை தொடர்ந்து, இறந்த தொழிலாளியின் உடலை போலீஸார் மீட்டு, தொழிற்சாலையிலிருந்து வெளியில் எடுத்து வர முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போலீஸ் ஜீப்பைக் கவிழ்த்து அடித்து நொறுக்கினர். மேலும், தொழிற் சாலையில் இருந்த பொருட்கள் மற்றும் வாகனங்களைச் சூறையாடினர்.


கிரேன் ரோப் அறுந்து விழுந்து மேற்கு வங்க மாநில தொழிலாளி உயிரிழப்பு! போலீஸ் தடியடி!

இந்த கலவரத்தில் சப் இன்ஸ்பெக்டர் முருகன், காவலர் வெங்கடேஷ் உட்பட 5 போலீஸார், 5 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீஸார் தொழிற்சாலையில் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன் பிறகு இறந்த தொழிலாளியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையறிந்த சீனியர் எஸ்.பி. லோகேஷ்வரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
Embed widget