மேலும் அறிய

Vilupuram: அடுத்தடுத்து சிறுமிகளை கடத்தி திருமணம் செய்ய முயற்சி; விரட்டி விரட்டி தடுத்து கைது செய்த போலீசார்!

திருமணம் செய்து கொள்வதாக மைனர் பெண்ணை கடத்திய 19 வயது இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி நந்தகுமார் வயது (19) என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நந்தகுமார், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் வேலூர் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த அவரது நண்பர்கள் 2 பேருடன் மரக்காணம் சென்ற நந்தகுமார், அதனையடுத்து அதிகாலையில் சிறுமியை அவரது வீட்டிலிருந்து கடத்தி கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே வீட்டில் இருந்த மகள் காணாமல் போனதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 

மகளை பற்றி உறவினர் வீடுகள் மற்றும் அக்கம்பக்கம் என பல இடங்களில் தேடினர். அப்போது சிறுமி, 3 வாலிபர்களுடன் திருவண்ணாமலை செல்லும் பஸ்சில் சென்றது தெரிய வந்தது. உடனே சிறுமியின் பெற்றோர், திருவண்ணாமலையில் உள்ள உறவினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உறவினர்கள் திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு சென்று, பஸ்சில் இருந்து இறங்கிய சிறுமி மற்றும் நந்தகுமார், அவரது நண்பர்கள் 2பேரை மடக்கி பிடித்தனர்.இதனால் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.


Vilupuram: அடுத்தடுத்து சிறுமிகளை கடத்தி திருமணம் செய்ய முயற்சி; விரட்டி விரட்டி தடுத்து கைது செய்த போலீசார்!

இதில் சிறுமி காணாமல் போனது தொடர்பாக அவரது பெற்றோர், மரக்காணம் அருகில் உள்ள பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தது தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் பிரம்மதேச போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதன்பேரில்  திருவண்ணாமலைக்கு வந்த பிரம்மதேச போலீசாரிடம் சிறுமி மற்றும் அந்த 3 வாலிபர்களை திருவண்ணாமலை போலீசார் ஒப்படைத்தனர். மேல் விசாரணைக்காக அவர்களை பிரம்மதேச போலீசார் அழைத்து சென்றனர்.
Vilupuram: அடுத்தடுத்து சிறுமிகளை கடத்தி திருமணம் செய்ய முயற்சி; விரட்டி விரட்டி தடுத்து கைது செய்த போலீசார்!

 

இதனைத்தொடர்ந்து  திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சே.ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது வாய்ப்பிருக்கும்  தானிப்பாடியில் உள்ள ஒரு கோவில் திருமணம் நடைபெற இருப்பதாக தானிப்பாடி கிராம நிர்வாக அதிகாரி முத்துவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சனிக்கிழமை இரவு சிறுமியின் வீட்டிற்கு தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சமூக நல அலுவலர் அம்சவல்லி, சைல்டு லைன் அதிகாரிகள் சென்று பெற்றோரிடம் குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் சிறுமியை மீட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். தண்டராம்பட்டு தாலுகாவில் அடிக்கடி இதுபோன்ற குழந்தை திருமணங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கிராமப் பகுதிகளில் குழந்தைத் திருமணத்தை தடுக்கும் வகையில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னை வியாசர்பாடியில் பகீர் !! வாடகை வீட்டில் விபச்சாரம் - வாலிபர் கைது, பெண் மீட்பு
சென்னை வியாசர்பாடியில் பகீர் !! வாடகை வீட்டில் விபச்சாரம் - வாலிபர் கைது, பெண் மீட்பு
"வெளியே சொன்னால் கொலை செய்திடுவேன்.." மயிலாடுதுறையில் 53 வயது பெண்ணை மிரட்டிய அரசியல் பிரமுகர் சிறையிலடைப்பு!
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget