மேலும் அறிய

விழுப்புரத்தில் போலி சிம் கார்டு மோசடி; 4 பேர் கைது - சைபர் கிரைம் போலீசார் அதிரடி

100-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கி அதனை வேறு நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளதும், ஆன்லைன் மூலம் பணம் மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தனிநபரின் ஆதாரை கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலி சிம் கார்டு மோசடியில் ஈடுபட்ட 4 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பாரதி நகரில் வசித்து வரும் வெண்னி என்பவர் தனியார் நிறுவனத்தில் டெலிகாலிங் வேலை செய்து வருகிறார். அதற்காக அவருக்கு சிம் கார்டுகள் தேவைப்பட்டதால் சித்தணி கிராமத்தை சேர்ந்த ராஜ், அன்பரசு, சதீஷ்குமார், தமிழ்ச்செல்வன், சத்தியமூர்த்தி, கிருபா ஆகியோர் மூலமாக 10-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கியுள்ளார். இதற்காக தன்னுடைய கைரேகையை பயன்படுத்தியதோடு அவர்களுக்கு தனது ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களையும் கொடுத்துள்ளார்.

இதனை ராஜ் உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து தவறாக பயன்படுத்தி 100-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கி அதனை வேறு நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளதும், அந்த நபர்கள், அந்த சிம் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணம் மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வெண்ணி, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் ராஜ், அன்பரசு, சதீஷ்குமார், தமிழ்செல்வன் ஆகிய 4 பேரும் சித்தணியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற 4 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் 100-க்கும் மேற்பட்ட புகைப்படம், ஆதார் மற்றும் கைரேகைகளை பயன்படுத்தி சிம் கார்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சத்தியமூர்த்தி,  கிருபா ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget