ஒரு மாவட்டமே மோசடியில் சிக்கியது எப்படி?... மக்களை காப்பாற்றப் போவது யார்?
சமூக வலைதளங்களில் வலம்வரும் கிராமப் புறங்களை சேர்ந்தவர்களை குறிவைத்து இணையவழி மோசடி கும்பல் மோசடியை அரங்கேற்றி வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் இணையவழி மோசடி
ஒவ்வொவொரு நாளும் இணைய வழியில் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. அவற்றை சைபர் க்ரைம் போலீஸார் கண்காணித்து தடுத்து வந்தாலும் சைபர் குற்றங்கள் அதிகரித்துதான் வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இணைய வழியில் பல்வேறு விதமாக மோசடிகள் நடக்கின்றன. இதில் படித்த இளைஞர்கள்தான் சிக்கி கொள்கிறார்கள்.
ஆன்லைன் ஆஃப் மூலம் மோசடி
ஆன்லைன் ஆப் மூலம் வேலை உள்ளது. இதில் உங்களுக்கு இரு மடங்காக வருவாய் கிடைக்கும். ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும், கிரிப்டோ கரன்ஸி வாங்குங்கள், இந்த டாஸ்க்கை முடித்தால் ஏகப்பட்ட பணம், பிட் காயினில் அதிக வருமானம் என்று பல்வேறு இணைய வழி மோசடி நடக்கிறது.
கிராமப்புற மக்களை குறிவைக்கும் இணையவழி மோசடி கும்பல்
சமூக வலைதளங்களில் வலம்வரும் கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்களில் சற்று வசதியாக உள்ளவர்களின் விவரங்களை ‘இணையவழி திருடர்கள்’ சேகரிக்கின்றனர். அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்று மிகவும் நுணுக்கமாக அறிந்து கொண்டு ஆசைவார்த்தை காட்டி மோசடி செய்து வருகிறார்கள்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மோசடி விவரம்:-
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 916 அளவுக்கு மோசடி செய்யப் பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில், ரூ.21 லட்சத்து 26 ஆயிரத்து 305 முடக்கப்பட்டது. இவற்றில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 813 மீட்கப்பட்டு புகார் தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு ரூ. 2 கோடியே 33 லட்சத்து 87 ஆயிரத்து 661 மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில், ரூ.1 கோடியே 46 லட்சத்து 68 ஆயிரத்து 38 பணம் முடக்கப்பட்டது. இதில், ரூ. 20 லட்சத்து 6 ஆயிரத்து 13 மீட்கப்பட்டு புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில் ரூ. 3 கோடியே 74 லட்சத்து 93 ஆயிரம் மோசடி செய்யப்பட்டதாக புகார் பெறப்பட்டது. தொடர் விசாரணையில் புகாரில் குறிப்பிட்ட பண அளவைத் தாண்டி ரூ. 4 கோடியே 82 லட்சத்து 30 ஆயிரம் முடக்கப்பட்டது. இதில், ரூ.18 லட்சத்து 3 ஆயிரத்து 22 மீட்கப்பட்டு புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2024-ம் ஆண்டு நிலவரம் சைபர் க்ரைம் போலீசில் கடந்தாண்டு மட்டும் 93 புகார்கள் பதிவு செய்யப்பட்டது.
இப்புகாரின் மூலம் ரூ.10 கோடியே 96 லட்சத்து 89 ஆயிரத்து 779 பணத்தை புகார்தாரர்கள் இழந் துள்ளனர். இத்தொகையில் ரூ.10 கோடியே 50 லட்சத்து 55 ஆயிரத்து 575 அளவிலான தொகை முடக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையின் வடக்கு சரகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரத்து 491 பணம் மீட்கப்பட்டு உரியவர் களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கம்போடியா, தாய்லாந்துக்கு தப்பிச் சென்ற 3 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகமான தொகை அதிகரித்து வருவதை புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது.
ஒவ்வொரு நாளும் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதில் அதிகமாக இளைஞர்கள் பள்ளி மாணவ மாணவிகள் சிக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக வேலை வாய்ப்பு ஆன்லைன் டிரேடிங் உள்ளிட்டவற்றின் சிக்கிக் கொள்கின்றனர். telegram இல் டாஸ்க் முடித்தால் இரண்டு மடங்கு பணம் தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குவிந்து வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

