![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
10 ரூபாய்க்கு முடி திருத்தம் செய்ய சொல்லி தொழிலாளி மீது தாக்குதல் - SDPI கட்சி நிர்வாகிகள் மீது புகார்
செஞ்சி அருகே 10 ரூபாய் க்கு முடி திருத்தம் செய்ய சொல்லி முடிதிருத்தும் தொழிலாளியை காவல்துறை உட்பட முஸ்லீம் அமைப்பை சேர்ந்த 10 க்கும் மேற்ப்பட்டவர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதால் பரப்பரப்பு
![10 ரூபாய்க்கு முடி திருத்தம் செய்ய சொல்லி தொழிலாளி மீது தாக்குதல் - SDPI கட்சி நிர்வாகிகள் மீது புகார் Villupuram: Attack on a worker for doing a haircut for 10 rupees in Chennai - Complaint against SDPI party executives 10 ரூபாய்க்கு முடி திருத்தம் செய்ய சொல்லி தொழிலாளி மீது தாக்குதல் - SDPI கட்சி நிர்வாகிகள் மீது புகார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/23/cfe17642bae6d5f1caf26736e59b794c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த NR பேட்டை பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவர் சிவகிருஷ்ணன். அதே பகுதியை சேர்ந்த ஜெயசீலன் மற்றும் SDPI கட்சியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பத்து ரூபாய்க்கு முடி திருத்தம் செய்ய வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். இதற்கு முடி திருத்தம் செய்யும் சிவகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் 10 ரூபாய்க்கு முடி திருத்தம் செய் இல்லையென்றால் கடையை காலி செய்ய வேண்டும் என கூறி பலமுறை தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து சிவகிருஷ்ணன் செஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் கடை முடித்து திரும்பும் வேளையில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது ஜெயசீலன் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் அந்த கடைக்காரரை சரமாரியாக தாக்கி கடையை காலி செய்யுமாறு கூறி உள்ளனர். இதனால் உடனடியாக சிவகிருஷ்ணன் செஞ்சி காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் என்பவர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை தாக்கி ஜெயசீலன் உள்ளிட்டோருக்கு ஆதரவாகப் பேசி அவரை அனுப்பி உள்ளார். மேலும் சிவ கிருஷ்ணனிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர்.
மேலும் சிவக்கிருஷணனை காவல் நிலையத்திற்கு வரவழைத்த காவல்துறை உதவி ஆய்வாளர் முருகானந்தம் எதற்கு தொடர்ந்து புகார் கொடுத்துட்டு இருக்க என கூறி தகாத வார்த்தைகளால் திட்டிய உதவி ஆய்வாளர் தான் கையில் அணிந்திருந்த காப்பால் சிவ கிருஷ்ணனை கடுமையாக தாக்கி உள்ளார். இதனால் காயமடைந்த சிவக்கிருஷ்ணன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் தனது மகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய முஸ்லீம் அமைப்பை சேர்ந்தவர்கள் மீதும் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீது விசாரணை மேற்க்கொள்ள வேண்டும் என கூறி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிவகிருஷ்ணன் மற்றும் தனது தாய் மற்றும் சகோதரி உடன் புகார் மனு அளித்தார். முடித்திருத்தம் செய்யும் தொழிலாளி மீது முஸ்லீம் அமைப்பினர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)