மேலும் அறிய

watch video: 'நான் தான் போலீஸ், மாமூல் கொடு’ .... டிப்டாப் ஆசாமியின் மிரட்டல் வீடியோ..!

ஆரணி அருகே போலீசார் எனக்கூறி மது அருந்தும் நபர்களிடம் டிப்டாப் ஆசாமி மாமூல் கேட்டு மிரட்டும் வீடியோ. டிப்டாப் ஆசாமி கைது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெட்டியாந்தொழுவம் பகுதியில் உள்ள மலை குன்று மற்றும் காப்புகாட்டில் கடந்த சில தினங்களாக கள்ளசாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தனர். மேலும் இந்த இடம் போதை ஆசாமிகள் மது குடிக்கும் கூடாராக மாறி வருகின்றது. இதனைக்குறித்து பல்வேறு ஊடகங்களில், செய்திகள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து  கள்ளசாராயாம் விற்பனை செய்வதாககூறி 2 நபர்களை ஆரணி தாலுக்கா காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் ஆரணி அருகே அடையபுலம் ஊராட்சிக்குபட்ட என்.கே.தாங்கல் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் வயது (25) இவர் தன்னுடைய நண்பர்களுடன் வெட்டியாந் தொழுவம் காப்பு காட்டில் மது அருந்து கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தில் திடீரென ஒரு டிப்டாப் ஆசாமி ஒருவர் மது அருந்தும் நபர்களிடம் மிரட்டி மாமூல் கேட்டதாக கூறப்படுகிறது.

 

 

அப்போது மது குடித்து இருந்த நபர்கள் நீங்கள் யார் என்று கேட்டுள்ளனர். அப்போது அந்த டிப்டாப் ஆசாமி நான் காவல்துறை என்று கூறியுள்ளார். மேலும் அங்கு விஸ்வநாதன் என்பவர் மது அருந்தி உள்ளார். அப்போது அந்த டிப்டாப் ஆசாமி விஸ்வநாதன் வைத்திருந்த சுமார் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பிடுங்கி கொண்டு நீ காவல்நிலையத்திற்கு வந்து இது உன்னுடைய பணம்தானா என உறுதி படுத்தி விட்டு பெற்று கொள்ளுமாறு மிரட்டி பணத்தை எடுத்து கொண்ட அந்த டிப்டாப் ஆசாமி அங்கிருந்து சென்று விட்டார். இதனையடுத்து, பணத்தை பறிக்கொடுத்த விஸ்வநாதன் ஆரணி தாலுக்கா காவல்நிலையத்திற்கு சென்று தன்னுடைய பணத்தை கொடுங்கள் என்று கூறியுள்ளார். அப்போது அங்கு இருந்த காவலர்கள் எந்த பணம் யார் பெற்று வந்தார் என கேட்டுள்ளனர். அப்போது விஸ்வநாதன் நடந்தவற்றை பற்றி கூறியுள்ளார். இதனைக் கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

 


watch video: 'நான் தான் போலீஸ், மாமூல் கொடு’ .... டிப்டாப் ஆசாமியின் மிரட்டல் வீடியோ..!

 

மேலும், விஸ்வநாதன் அங்கு மது அருந்தும் நபர்களை மிரட்டும் ஆசாமியை அங்கிருந்த நபர்கள் வீடியோ எடுத்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் வீடியோவை கொண்டு விசாரணை மேற்கொண்ட போது அந்த டிப்டாப் ஆசாமி காவல்துறையினரிடம் வசமாக சிக்கினார். பின்னர் அந்த டிப்டாப் ஆசாமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த ஆசாமி ஆரணி அருகே பையூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ஓட்டுநர் பெருமாள் வயது (40) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பெருமாளை காவல்துறையினர் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
T20 World Cup: வார்த்தை போர்! தேவையில்லாத பில்டப் கொடுக்குறீங்க - வங்கதேச அணியை விமர்சனம் செய்த சேவாக்!
T20 World Cup: வார்த்தை போர்! தேவையில்லாத பில்டப் கொடுக்குறீங்க - வங்கதேச அணியை விமர்சனம் செய்த சேவாக்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
T20 World Cup: வார்த்தை போர்! தேவையில்லாத பில்டப் கொடுக்குறீங்க - வங்கதேச அணியை விமர்சனம் செய்த சேவாக்!
T20 World Cup: வார்த்தை போர்! தேவையில்லாத பில்டப் கொடுக்குறீங்க - வங்கதேச அணியை விமர்சனம் செய்த சேவாக்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மணல் மாஃபியா கும்பலுக்கு உடந்தை? 25 போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் - திருச்சி எஸ்.பி. அதிரடி
Trichy: மணல் மாஃபியா கும்பலுக்கு உடந்தை? 25 போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் - திருச்சி எஸ்.பி. அதிரடி
Breaking News LIVE: 6 பேரல் மெத்தனால் சப்ளை செய்த படிப்பை பாதியில் விட்ட பொறியியல் பட்டதாரி
Breaking News LIVE: 6 பேரல் மெத்தனால் சப்ளை செய்த படிப்பை பாதியில் விட்ட பொறியியல் பட்டதாரி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
CUET UG Results: தொடர் சர்ச்சையில் என்டிஏ; க்யூட் தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா?
CUET UG Results: தொடர் சர்ச்சையில் என்டிஏ; க்யூட் தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா?
Embed widget