மேலும் அறிய

ரயிலில் மலர்ந்த காதல் திருமணம்...மனைவியை துண்டு துண்டாக வெட்டி ரயிலில் கூலாக பயணம் செய்த கணவர்!

பாபநாசம் திரைப்பட பாணியில் தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய எழுத்தாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொதுவாக தம்பதிகளுக்கு இடையே சண்டைகள் வருவது வழக்கமான ஒன்று. அந்த சண்டையில் சில நேரங்களில் கொலை வரைக்கும் சென்றுவிடுகிறது. அந்தவகையில் தற்போது ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் கிட்டதட்ட பாபநாசம்(திர்ஷ்யம்) திரைப்படம் கதை போல உள்ளது. அது என்ன சம்பவம்? எப்படி நிகழ்ந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம் மீருட் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் நிராலா. இவர் அங்கு எழுத்தாளராக இருந்து வருகிறார். அத்துடன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல தகவல்களை கேட்டு பெற்று வரும் ஆர்வலராகவும் இருந்து வருகிறார். இவர் அடிக்கடி ரயிலில் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக லக்னோ மற்றும் அலாகாபாத் ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி ரயிலில் சென்று வந்துள்ளார். அந்தச் சமயத்தில் லக்னோ பகுதியில் உள்ள ஒரு வர்த்தக தொழில் செய்யும் நபரின் குடும்பம் இவருக்கு பழக்கமாகியுள்ளது. அந்த குடும்பத்தில் இருந்த ரூபி குப்தா இவருக்கு பழக்கமாகியுள்ளார். அவருடைய நம்பரை ரயில் பயணத்தின் போது வாங்கி இருவரும் பேச தொடங்கியுள்ளனர். 

நாளைடைவில் இது காதலாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் சமீபத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் 20 லட்சம் ரூபாய் பணம் தொடர்பாக இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. 


ரயிலில் மலர்ந்த காதல் திருமணம்...மனைவியை துண்டு துண்டாக வெட்டி ரயிலில் கூலாக பயணம் செய்த கணவர்!

அதைத் தொடர்ந்து சில மணி நேரத்திற்கு பிறகும் இருவருக்கும் இடையே இருந்த மோதல் தீராமால் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீபக் நிராலா தன்னுடைய மனைவி ரூபியை ஒரு இரும்பு கம்பியால் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் பலத்த காயம் அடைந்த ரூபி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த தீபகிற்கு ஒரு யோசனை வந்துள்ளது. அவர் தன்னுடைய மனைவியை துண்டு துண்டாக வெட்டி ஒரு சாக்கு பையில் போட்டு கொஞ்சம் தொலைவில் உள்ள ஒரு சாக்கடையில் வீசியுள்ளதாக தெரிகிறது. 

அதன்பின்னர் திர்ஷ்யம் படம் பாணியில் ஒரு டூர் திட்டம் ரெடி செய்து தீபக் நிராலா தன்னுடைய நண்பர்களுடன் ஆக்ஸ்ட் 23ஆம் தேதி முதல் சுற்றுலா சென்றுள்ளார். அதில் ரிசிகேஷ், ஹரிதுவார் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளார். இறுதியாக லக்னோவிலுள்ள தன்னுடைய மாமியார் வீட்டிற்கும் சென்றுள்ளார். இப்படி செய்தால் தன் மீது எந்தவித சந்தேகமும் வராது என்று நடந்துள்ளார். அதன்பின்னர் தன்னுடைய மனைவியை காணவில்லை என்ற புகாரும் காவல்நிலையத்தில் அளித்துள்ளார்.


ரயிலில் மலர்ந்த காதல் திருமணம்...மனைவியை துண்டு துண்டாக வெட்டி ரயிலில் கூலாக பயணம் செய்த கணவர்!

அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல்துறையினர் மூன்று வாரங்களுக்கு பிறகு எழுத்தாளர் தீபக் நிராலா தன்னுடைய மனைவியை கொலை செய்ததை கண்டறிந்துள்ளனர். அதன்பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அத்துடன் அவர் கொலைக்கு பயன்படுத்த ஆயுதங்களையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். தன்னுடைய மனைவியை எழுத்தாளர் ஒருவர் திரைப்பட பாணியில் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: நெல்லையை நடுங்க வைக்கும் பழிக்குப்பழி கொலைகள்- பதற்றம் நீடிப்பதால் 8 மாவட்ட போலீஸ் குவிப்பு!

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Embed widget