மேலும் அறிய

Crime : போதை மாத்திரைக்கு பணம் கொடுக்காத தாத்தா.. பேரன் செய்த கொடூரம்.. அதிர்ந்த கிராமத்தினர்..

உத்தரப்பிரதேசத்தில் போதை மருந்துக்கு பணம் கொடுக்க மறுத்த தாத்தாவை பேரன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் போதை மருந்துக்கு பணம் கொடுக்க மறுத்த தாத்தாவை பேரன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சஹ்ரான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிருவா. இவர் விவசாயி. இவர் சந்தவுலி என்ற கிராமத்தில் வசித்துவந்தார். இவருக்கு சோனு என்ற பேரன் ஒருவர் இருந்தார். இந்நிலையில் ஞாயிறு இரவன்று சோனு தனது தாத்தா பிருவாவிடம் போதைப்பொருள் வாங்க பணம் கேட்டுள்ளார். அதன் நிமித்தமாக சோனுவுக்கும் பிருவாவிற்கும் சண்டை நடந்ந்துள்ளது. ஆத்திரத்தில் சோனு தனது தாத்தாவின் கழுத்தை ஒரு கயிற்றால் இருக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பியோடினார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 

இதற்கிடையில் சோனுவை ஒரு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இது எல்லா செய்திகளைப் போல் நாம் கடந்து சென்று விடலாம். ஆனால் நமக்குத் தெரிந்தது ஒரு சோனு மட்டும் தான். இதுபோன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் இன்று போதையின் பாதையின் சிக்கித் தவிக்கின்றனர்.

 போதை மருந்துகளை உட்கொள்வதன் காரணமாக ஏற்படும் கோளாறு என்பது பொது சுகாதாரப் பிரச்சினையாக -- குறிப்பாக இளைஞர்கள் மற்றும் விடலைப் பருவத்தினரின் பிரச்சினையாக உள்ளது. உலகம் நவீன வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் இதுபோன்ற பிரச்சினைகள் மிக அதிகமாக உள்ளன. போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் போக்கின் காரணமாக தற்கொலைகளும் அதிகரித்துள்ளன. போதை மருந்து உட்கொள்வதற்கும் மாரடைப்பு, புற்றுநோய், சாலைப் போக்குவரத்து விபத்தின் காரணமாக ஏற்படும் காயங்கள், மன நோய் போன்ற தொற்றுநோய் அல்லாத பிற நோய்கள் ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளது. சூதாடுதல், பொருள்கள் வாங்குதல், கணினி மூலமாக தகாத தொடர்பு கொள்ளுதல், கணினி மூலமாக உடலுறவு சம்பந்தப்பட்ட கவர்ந்திழுக்கும் விஷயங்களைப் பார்த்தல், ஆன்லைன் மூலமாகக் கிடைக்கும் உறவுகளுடன் அளவுக்கு அதிகமான தொடர்பு கொள்ளுதல், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாதல் போன்ற பல்வேறு போதை தரும் பழக்கங்களில் இளைஞர்கள் சிக்கிக் கிடக்கின்றனர்.  போதை மருந்துப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக (Drug Deaddiction Program - DDAP) என்ற திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

பிள்ளைகளை கண்காணிப்பது அவசியம்:

போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் சிறார்கள் அதற்குத் தேவைப்படும் பணத்துக்காக, பொய்க் காரணங்களைச் சொல்லி, பணம் கேட்பார்கள் அல்லது வீட்டிலிருக்கும் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுக்க ஆரம்பிப்பார்கள். எனவே, வீட்டில் வைத்திருக்கும் பணம் திருடு போவது, தேவைக்கு அதிகமாகக் குழந்தைகள் பணம் கேட்பது போன்ற சமயங்களில் உஷாராக இருக்க வேண்டும். போதைப் பழக்கத்துக்கு அடிமையான குழந்தைகளின் முகமே அதைக்காட்டிக் கொடுத்துவிடும். அவர்களின் உதடுகள், பற்கள் கறைகளாக மாறியிருக்கும் அல்லது எப்போதும் சோர்வாகவோ, எரிச்சலாகவோ காணப்படுவார்கள்; எப்போதும் தனிமையில் இருப்பார்கள்

இது போன்ற மாற்றங்கள் தென்பட்டால், அவர்களைக் கண்காணிக்க வேண்டும். போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் சிறார்கள் அதற்குத் தேவைப்படும் பணத்துக்காக, பொய்க் காரணங்களைச் சொல்லி, பணம் கேட்பார்கள் அல்லது வீட்டிலிருக்கும் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுக்க ஆரம்பிப்பார்கள். எனவே, வீட்டில் வைத்திருக்கும் பணம் திருடு போவது, தேவைக்கு அதிகமாகக் குழந்தைகள் பணம் கேட்பது போன்ற சமயங்களில் உஷாராக இருக்க வேண்டும்.  போதைப் பழக்கத்துக்கு அடிமையான குழந்தைகளின் முகமே அதைக்காட்டிக் கொடுத்துவிடும். அவர்களின் உதடுகள், பற்கள் கறைகளாக மாறியிருக்கும் அல்லது எப்போதும் சோர்வாகவோ, எரிச்சலாகவோ காணப்படுவார்கள்; எப்போதும் தனிமையில் இருப்பார்கள்... இது போன்ற மாற்றங்கள் தென்பட்டால், அவர்களைக் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளுடன் மனம்விட்டுப் பேச வேண்டும். அவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களுடன் அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget