மேலும் அறிய

Crime: சோஷியல் மீடியா வலை.. காதல் என நம்பிய ஆசிரியை.. 3 டாக்டர்கள் செய்த கொடூரம்.. தொடரும் சைபர் அட்டூழியங்கள்..

உத்தரப்பிரதேசத்தில் சமூக வலைத்தளம் மூலம் பழகிய ஆசிரியை மூன்று மருத்துவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் சமூக வலைத்தளம் மூலம் பழகிய ஆசிரியை மூன்று மருத்துவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமூக வலைத்தளம் எந்த அளவிற்கு யாரென்று தெரியாத ஒருவரை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கிறதோ, அதே அளவிற்கு மிகவும் ஆபத்தானதாகவும் இருந்து வருகிறது. இணையதளம், சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு இடங்களில் பல்வேறு குற்றங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்ட மருத்துவர் மற்றும் அவரது நண்பர்களால் ஒரு ஆசிரியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி என்கிற பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் அதே பகுதியில் பள்ளி ஆசிரியராக இருந்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சமூக வலைத்தளம் மூலம்  மருத்துவர் சித்தார்த் அறிமுகமாகியுள்ளார். இருவரும் முதலில் நட்பாக பழக, நாளடைவில் இவர்களது பழக்கம் மொபைல் எண்களை பரிமாறி கொண்டு பேசும் அளவிற்கு உயர்ந்துள்ளது. 

தொடர்ந்து, இவர்களது பழக்கம் நெருக்கமாக மாற, ஒரு கட்டத்தில் அந்த மருத்துவர் ஆசிரியையிடம் தங்களை காதலிப்பதாக கூறியுள்ளார். முதலில் மறுத்த அந்த ஆசிரியை பின்பு தானும் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இருவரும் அவ்வபோது நேரில் பேசியும் பழகியும் வந்துள்ளனர். 

இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி அந்த ஆசிரியை மருத்துவர் சித்தார்த்தை சந்திக்க பஸ்திக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சித்தார்த் தான் பணிபுரியும் மருத்துவமனையில் ஆசிரியை அழைத்து சென்று, யாரும் இல்லாதபோது கட்டாயப்படுத்தி பாலியன் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் மருத்துவர் தனது மற்ற இரண்டு நண்பர்களை அழைத்ததாகவும், அவர்களும் அந்த பெண்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இதையடுத்து, அந்த ஆசிரியை இந்த சம்பவம் தொடர்பாக  மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பெண், பஸ்தியில் இருந்து லக்னோவுக்கு வந்து, செப்டம்பர் 27ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 IPC பிரிவுகள் 376-D, கும்பல் பலாத்காரம், 504 அவமதிப்பு மற்றும் 506 குற்றவியல் மிரட்டல் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு, டாக்டரை கைது செய்ததாகவும், சித்தார்த்தின் நண்பர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், "அந்த பெண் மருத்துவமனைக்குச் சென்றபோது, ​​மருத்துவர் அவளை தனது விடுதி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரும் மருத்துவர்களான அவரது இரண்டு நண்பர்களும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்” என்று புகார்தாரரை மேற்கோள் காட்டி போலீசார் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget