மேலும் அறிய

சிறுவர்களைப் பயன்படுத்தி இருசக்கர வாகனத் திருட்டு: தேனியில் அதிர்ச்சி!

15 வயது சிறுவர்களை பயன்படுத்தி  இருசக்கர வாகனத்தில் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது, மூன்று சிறார்கள் மீது வழக்குப்பதிவு.13 இரு சக்கர வாகனங்கள் மீட்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்த மணி என்பவர் சுற்றுலா வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரின் இரு சக்கர வாகனத்தை அவரது அலுவலகத்தில் முன்பாக சாலையில் நிறுத்திவிட்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு வெளியூர் சென்றுள்ளார். இந்த நிலையில் மணியின் இருசக்கர வாகனத்தை இரண்டு சிறுவர்கள் காலை ஆறு மணியளவில் தென்கரை வள்ளுவர் சிலை சாலையில் தள்ளி உருட்டி சென்றுள்ளனர். அப்பொழுது அவரின் நண்பரான மற்றொரு வாகன ஓட்டுநர் இரண்டு சிறுவர்கள் மணியின் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு செல்வது குறித்து மணிக்கு அலைபேசியில் அழைத்து கேட்டுள்ளார். அப்பொழுது மணியின் இருசக்கர வாகனம் அலுவலகத்தின் முன்பாக நிறுத்தி விட்டு வந்ததாகவும், தனது இருசக்கர வாகனத்தை யாரையும் எடுத்துச் செல்ல தான் கூறவில்லை என கூறியுள்ளார்.


சிறுவர்களைப் பயன்படுத்தி இருசக்கர வாகனத் திருட்டு: தேனியில் அதிர்ச்சி!

இதனைத் தொடர்ந்து மணியின் சக நண்பர்களான வாகன ஓட்டுநர்கள் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு சென்ற சிறுவர்களை பெரியகுளம் வடகரை மற்றும் தென்கரை பகுதியில் தேடியுள்ளனர். அப்பொழுது தென்கரைப் பகுதி பெரியகுளம் - தேனி சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாகனத்தை இயக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் வாகனத்தில் எரிபொருள் இல்லாத நிலையில் வாகனத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்ட போது அந்த சிறுவர்கள் மேலும் அவரது நண்பர் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வரவழைத்து அந்த வாகனத்தின் மூலம் தள்ளி சென்ற வாகனத்தையும் கொண்டு செல்ல திட்டமிட்ட போது வாகனத்தை தேடிச் சென்ற ஓட்டுநர்கள் சிறுவர்கள் மூவரை பிடித்த போது உதவி செய்ய வந்த சிறுவன் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார். இந்த நிலையில் இருசக்கர வாகனத்தை உருட்டி தள்ளிச் சென்ற இரண்டு சிறார்களை பிடித்த வாகன ஓட்டுநர்கள் விசாரணை செய்ததில் இரண்டு சிறார்களும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் பிடிபட்ட இரண்டு சிறார்களையும் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.


சிறுவர்களைப் பயன்படுத்தி இருசக்கர வாகனத் திருட்டு: தேனியில் அதிர்ச்சி!

இச்சம்பவத்தை அறிந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு உத்தரவின் பேரில் சிறார்களிடம் குற்றச் சம்பவங்களை கண்டறியும் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிது. 14 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு ஏற்படும் ஆசைகளைப் பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை திருடிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்தது. இச்சம்பவத்தில் தேனி அருகே உள்ள டோம்புச்சேரி  பகுதியைச் சேர்ந்த விக்ரம் (24 வயது) இளைஞர் செல்போன் மோகம், ஆடம்பர செலவு செய்வதற்கு பணம், இருசக்கர வாகனங்களை ஓட்டுவதில் ஆசை உள்ள சிறார்களை பயன்படுத்தி பெரியகுளம் பகுதியில் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் 30க்கும் ஏற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடி உள்ளதாக தெரியவந்துள்ளது.


சிறுவர்களைப் பயன்படுத்தி இருசக்கர வாகனத் திருட்டு: தேனியில் அதிர்ச்சி!

இதனைத் தொடர்ந்து சிறார்களை பயன்படுத்தி இருசக்கர வாகன திருட்டில்  ஈடுபட்ட விக்ரம் என்ற இளைஞரை தென்கரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் 13 இருசக்கர வாகனங்களை ஒரே நாளில் மீட்டுள்ளனர். சிறார்களை பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை திருடி சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட விக்ரம் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறார்கள் உட்பட நான்கு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறார்களை பயன்படுத்தி இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட விக்ரம் என்ற இளைஞரை பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிமன்ற காவல் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பிடிபட்ட மூன்று சிறார்களையும் காவல்துறையினர் சிறார் நீதிமன்றத்தில் நிறுத்திய பொழுது சிறார்கள் மூவரையும் சிறார் நீதிமன்ற நீதிபதி பிணையில் விடுவித்துள்ளார். இந்த நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு இதுபோன்ற சிறார்களை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் கும்பல் மாவட்டத்தில் உள்ளனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget