மேலும் அறிய

சிறுவர்களைப் பயன்படுத்தி இருசக்கர வாகனத் திருட்டு: தேனியில் அதிர்ச்சி!

15 வயது சிறுவர்களை பயன்படுத்தி  இருசக்கர வாகனத்தில் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது, மூன்று சிறார்கள் மீது வழக்குப்பதிவு.13 இரு சக்கர வாகனங்கள் மீட்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்த மணி என்பவர் சுற்றுலா வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரின் இரு சக்கர வாகனத்தை அவரது அலுவலகத்தில் முன்பாக சாலையில் நிறுத்திவிட்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு வெளியூர் சென்றுள்ளார். இந்த நிலையில் மணியின் இருசக்கர வாகனத்தை இரண்டு சிறுவர்கள் காலை ஆறு மணியளவில் தென்கரை வள்ளுவர் சிலை சாலையில் தள்ளி உருட்டி சென்றுள்ளனர். அப்பொழுது அவரின் நண்பரான மற்றொரு வாகன ஓட்டுநர் இரண்டு சிறுவர்கள் மணியின் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு செல்வது குறித்து மணிக்கு அலைபேசியில் அழைத்து கேட்டுள்ளார். அப்பொழுது மணியின் இருசக்கர வாகனம் அலுவலகத்தின் முன்பாக நிறுத்தி விட்டு வந்ததாகவும், தனது இருசக்கர வாகனத்தை யாரையும் எடுத்துச் செல்ல தான் கூறவில்லை என கூறியுள்ளார்.


சிறுவர்களைப் பயன்படுத்தி இருசக்கர வாகனத் திருட்டு: தேனியில் அதிர்ச்சி!

இதனைத் தொடர்ந்து மணியின் சக நண்பர்களான வாகன ஓட்டுநர்கள் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு சென்ற சிறுவர்களை பெரியகுளம் வடகரை மற்றும் தென்கரை பகுதியில் தேடியுள்ளனர். அப்பொழுது தென்கரைப் பகுதி பெரியகுளம் - தேனி சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாகனத்தை இயக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் வாகனத்தில் எரிபொருள் இல்லாத நிலையில் வாகனத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்ட போது அந்த சிறுவர்கள் மேலும் அவரது நண்பர் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வரவழைத்து அந்த வாகனத்தின் மூலம் தள்ளி சென்ற வாகனத்தையும் கொண்டு செல்ல திட்டமிட்ட போது வாகனத்தை தேடிச் சென்ற ஓட்டுநர்கள் சிறுவர்கள் மூவரை பிடித்த போது உதவி செய்ய வந்த சிறுவன் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார். இந்த நிலையில் இருசக்கர வாகனத்தை உருட்டி தள்ளிச் சென்ற இரண்டு சிறார்களை பிடித்த வாகன ஓட்டுநர்கள் விசாரணை செய்ததில் இரண்டு சிறார்களும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் பிடிபட்ட இரண்டு சிறார்களையும் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.


சிறுவர்களைப் பயன்படுத்தி இருசக்கர வாகனத் திருட்டு: தேனியில் அதிர்ச்சி!

இச்சம்பவத்தை அறிந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு உத்தரவின் பேரில் சிறார்களிடம் குற்றச் சம்பவங்களை கண்டறியும் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிது. 14 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு ஏற்படும் ஆசைகளைப் பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை திருடிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்தது. இச்சம்பவத்தில் தேனி அருகே உள்ள டோம்புச்சேரி  பகுதியைச் சேர்ந்த விக்ரம் (24 வயது) இளைஞர் செல்போன் மோகம், ஆடம்பர செலவு செய்வதற்கு பணம், இருசக்கர வாகனங்களை ஓட்டுவதில் ஆசை உள்ள சிறார்களை பயன்படுத்தி பெரியகுளம் பகுதியில் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் 30க்கும் ஏற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடி உள்ளதாக தெரியவந்துள்ளது.


சிறுவர்களைப் பயன்படுத்தி இருசக்கர வாகனத் திருட்டு: தேனியில் அதிர்ச்சி!

இதனைத் தொடர்ந்து சிறார்களை பயன்படுத்தி இருசக்கர வாகன திருட்டில்  ஈடுபட்ட விக்ரம் என்ற இளைஞரை தென்கரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் 13 இருசக்கர வாகனங்களை ஒரே நாளில் மீட்டுள்ளனர். சிறார்களை பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை திருடி சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட விக்ரம் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறார்கள் உட்பட நான்கு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறார்களை பயன்படுத்தி இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட விக்ரம் என்ற இளைஞரை பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிமன்ற காவல் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பிடிபட்ட மூன்று சிறார்களையும் காவல்துறையினர் சிறார் நீதிமன்றத்தில் நிறுத்திய பொழுது சிறார்கள் மூவரையும் சிறார் நீதிமன்ற நீதிபதி பிணையில் விடுவித்துள்ளார். இந்த நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு இதுபோன்ற சிறார்களை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் கும்பல் மாவட்டத்தில் உள்ளனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget