![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அரசு மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த சம்பவத்தில் திருப்பம் - மதுபானத்தில் சைனைட் கலந்து கொலை செய்தது விசாரணையில் அம்பலம்!
மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மது அருந்தி இருவர் உயிரிழந்ததாக எழுந்த புகாரின் சயனைடு மதுவில் கலந்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
![அரசு மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த சம்பவத்தில் திருப்பம் - மதுபானத்தில் சைனைட் கலந்து கொலை செய்தது விசாரணையில் அம்பலம்! Turnaround in the incident where two people died after drinking government liquor - The investigation revealed that cyanide was mixed in the liquor to kill them! அரசு மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த சம்பவத்தில் திருப்பம் - மதுபானத்தில் சைனைட் கலந்து கொலை செய்தது விசாரணையில் அம்பலம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/26aa3cf6487bb53b01f91cc7d7958d3e1686673011947186_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட தத்தங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் 55 வயதான பழனிகுருநாதன். இவர் மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் கொல்லம்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த 65 வயதான பூராசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பட்டறையில் பழனிகுருநாதன், பூராசாமி இருவரும் மாலை 5 மணிவரையில் வேலை செய்துள்ளனர். சிறிது நேரத்தில் பட்டறையில் பழனிகுருநாதன், பூராசாமி இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். மேலும் அவர்கள் அருகில் அரசு டாஸ்மாக் மதுபாட்டில் இரண்டு கிடந்துள்ளது. அதில் ஒன்றில் பாதி மதுபானமும், ஒரு பாட்டில் திறக்காமல் அப்படியே இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து அவர்கள் இருவரையும் மீட்ட உறவினர்கள் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பூர் காவல்துறையினர் கொள்ளம்பட்டறையில் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில் அரசு டாஸ்மாக் மதுபானம் குடித்த சிறிது நேரத்தில் இரண்டுபேரும் இறந்துள்ளனர். இருவருக்கும் குடும்பத்தில் எவ்வித பிரச்னையும் கிடையாது. இருவருக்கும் இணைநோய்கள் எதுவும் இல்லை. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், டாஸ்மாக் மதுபானத்தை குடித்ததால்தான் இருவரும் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்ஜீவ்குமார் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மயிலாடுதுறையில் 2 பேர் இறந்தது டாஸ்மாக் மதுபானம் குடித்ததில் இறந்தார்களா? அல்லது வேறு காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் பழனி குருநாதன், பூராசாமி ஆகிய இருவர் டாஸ்மார்க் மதுபானம் சாப்பிட்டதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், இவர்களின் இறப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய இருவரது உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கைப்பற்றப்பட்ட டாஸ்மாக் மது பாட்டில்களை தஞ்சாவூர் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்து காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மதுபானம் குடித்ததால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டிய விவகாரத்தில் மதுபானத்தில் சயனைடு கலந்துள்ளதாக தஞ்சாவூர் தடயவியல் மருத்துவ நிபுனர் குழு ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், டாஸ்மாக் மதுபானத்தால் உயிரிழப்பு நிகழவில்லை என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார். இதனை அறிந்த உறவினர்கள் இந்த பிரச்சனையை மாவட்ட ஆட்சியர் பொய்யான காரணங்களை கூறி திசை திருப்புவதாக குற்றம் சாட்டி மங்கையநல்லூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைமை அடுத்து மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் டாஸ்மாக் மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சொத்து பிரச்சினையில் மதுபானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்ததாக பழனி குருநாதனின் சகோதரர்களான ( பழனி குருநாதனின் தந்தையின் முதல் தாரத்து மகன்கள்) மனோகர், பாஸ்கர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்து மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)