மேலும் அறிய

‘எனது உடலை கணவரிடம் ஒப்படைக்க வேண்டாம்’ - மகனுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டத்தில், வீட்டிற்குள் அழுகிய நிலையில் மகனுடன் பிணமாக கிடந்த பெண்- கணவன், தந்தையிடம் உடலை ஒப்படைக்காதீர்கள் என கடிதம்

திருச்சி மாவட்டம் பாலகுறிச்சி அருகே உள்ள பெத்தக்கோன் பட்டியை சேர்ந்தவர் ஜெயபாரதி (வயது 36). இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரானந்தம் (42) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 8 வயதில் ஹரி என்ற மகன் உள்ளார். வீரானந்தம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் ஜெயபாரதி தனது மகனுடன் பொன்னமராவதியில் உள்ள வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது வீடு கடந்த சில தினங்களாக பூட்டியே கிடந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தாயும், மகனும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


‘எனது உடலை கணவரிடம் ஒப்படைக்க வேண்டாம்’ - மகனுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை

பின்னர் அவர்களின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவர் வீரானந்தம், வீட்டு செலவிற்காக ஜெயபாரதிக்கு பணம் அனுப்பாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மன விரக்தியில் இருந்த ஜெயபாரதி, மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஜெயபாரதி எழுதி வைத்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றினர். அதில், ”எங்கள் முடிவிற்கு யாரும் காரணமில்லை. என் குடும்ப சூழ்நிலை. எனது உடல்நிலை, எனது மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை தேடிக்கொண்டேன். எனது உடலை எனது தகப்பனாரிடமோ, கணவரிடமோ ஒப்படைக்க வேண்டாம். செத்த பிறகு கூட நான் யாருக்கும் செலவு வைக்க விரும்பவில்லை. 8 வருடமாக எனது கணவர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. என் மகனுக்கும் அவர் தந்தையாகவோ, எனக்கு கணவராகவோ அவர் இருந்ததில்லை. என்னுடைய மகனிடம் நீ போய் உங்கப்பாவிடம் இரு என சொன்னேன். ஆனால் அவன் கேட்காமல் என் கூடவே விஷமருந்தி விட்டார். இந்த வீட்டில் இருந்து ஒரு குண்டூசிகூட எனது கணவருக்கோ, தகப்பனார் வீட்டிற்கோ போகக்கூடாது” என எழுதி வைத்துளார். தாயும், மகனும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.