மேலும் அறிய

திருச்சி: லால்குடி காவல்நிலையம் முன்பு தீக்குளித்து சிறைகாவலர் தற்கொலை

சொத்து பிரச்சினையை முறையாக விசாரிக்காததால் போலீஸ் நிலையம் முன்பு சிறைக்காவலர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே உள்ள செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவருக்கு ராஜா (வயது 45), நிர்மல், சதீஸ் ஆகிய 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகனான ராஜா லால்குடி கிளை சிறையில் முதல்நிலை காவலராக உள்ளார். ராஜாவுக்கும், அவரது தம்பி நிர்மலுக்கும் சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 25-ந்தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு மோதலாகியது. இதில் 2 தரப்பினரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த ராஜாவின் மனைவி விஜயா, நிர்மலின் மனைவி ஜெனித்தா ஜாக்குலின் ஆகியோர் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து 2 தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொற்செழியன் விசாரணை நடத்தி மனு ரசீது வழங்கியுள்ளார். இந்த நிலையில் ராஜா, நிர்மல் இடையே நேற்று மதியம் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக ராஜா மீண்டும் லால்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தார். இதனிடையே போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என கூறி ராஜா போலீஸ் நிலையம் முன்பு நின்று தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ அவரது உடலில் பற்றி எரிந்ததால் அலறி துடித்தார். இதனைக் கண்ட போலீசார் அவரது உடலில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிக்சைக்குபின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்தார்.


திருச்சி: லால்குடி காவல்நிலையம் முன்பு தீக்குளித்து சிறைகாவலர் தற்கொலை

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லால்குடி போலீஸ் நிலையம் முன்பு சிறைக்காவலர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைகாவல் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொற்சொழியன் முறையாக விசாரணை செய்யவில்லை என்று நேற்து தீக்குளித்த ராஜா புகார் தெரிவித்திருந்த நிலையில், திருச்சி சரக்கு டிஐஜி சரவண சுந்தர் எஸ்.ஐ பொற்செழியனை  சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார்.  மேலும் ராஜா அவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget