மேலும் அறிய

கள்ளக்காதலிக்காக டிரைவர்கள் சண்டை; மோதலில் தொடங்கி கொலையில் முடிந்த சம்பவம்..!

திருச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை. இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனியை சேர்ந்தவர் சதீஷ் என்ற சக்திகுமார் (வயது 34). வேன் டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். சக்திகுமாரின் மனைவி விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். இதையடுத்து பெற்றோருடன் அவரது மகன் வசித்து வருகிறான். சக்திகுமார் அதே பகுதியில் மற்றொரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் திருவெறும்பூர் காந்திநகர், சுருளி கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (32). இவர் காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் டாக்டர்களுக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.  சக்திகுமார் மற்றும் முத்துப்பாண்டிக்கு பெண் சகவாசம் இருந்துள்ளது. மேலும் சக்திகுமார் வீட்டின் அருகே இருந்த ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன், முத்துப்பாண்டிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணுக்கும், சக்திகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணுடன் பழகுவது தொடர்பாக முத்துப்பாண்டியை சக்திகுமார் கண்டித்துள்ளார்.


கள்ளக்காதலிக்காக டிரைவர்கள்  சண்டை;  மோதலில் தொடங்கி கொலையில் முடிந்த சம்பவம்..!

மேலும், அதை கேட்காமல் முத்துப்பாண்டி தொடர்ந்து அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனால் இதுபற்றி அந்த பெண்ணின் அண்ணனிடம் கூறிவிடுவதாக முத்துப்பாண்டியை சக்திகுமார் மிரட்டியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து முத்துப்பாண்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் சக்திகுமாரின் வீட்டிற்கு சென்று அவரிடம் இனி அந்த பெண்ணுடன் பழகமாட்டேன் என்றும், அதனால் இப்பிரச்சினை குறித்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடம் கூற வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அப்போது முத்துப்பாண்டிக்கும், சக்திகுமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது முத்துப்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து முத்துப்பாண்டி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார், சக்திகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில்  9ஆம்  நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி  உலா
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில்  9ஆம்  நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி  உலா
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
"இதை மட்டும் பண்ணாதீங்க சிந்தனை திறன் குறையும்" மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அட்வைஸ்!
Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Embed widget