மேலும் அறிய

Crime: வந்தவாசியில் காணாமல் போன வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்பு - கொலை செய்ததாக 3 பேர் கைது

வந்தவாசி பகுதியில் காணாமல் போனதாக தேடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிற் பயிற்சி பணிபுரியும் வாலிபர் விவசாய கிணற்றிலிருந்து பிணமாக மீட்பு.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் தேவன் வயது (24). இவர் ஐ.டி.ஐ படித்துவிட்டு செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிற் பயிற்சி பெற்று வந்துள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கீழ்ப்பாக்கம் கிராமத்துக்குச் சென்றுவிட்டு இரவு பைக்கில் புறப்பட்டவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தேவனின் பைக், செல்போன், செருப்பு ஆகியவை விளாங்காடு-கீழ்நர்மா சாலை, சாத்தனூர் கூட்டுச் சாலை அருகே சாலையோரம் கிடந்துள்ளது. அருகில் ரத்தக்கறையும் இருந்துள்ளது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் தேவனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


Crime: வந்தவாசியில் காணாமல் போன வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்பு - கொலை செய்ததாக  3 பேர் கைது

அதனை தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் கார்த்தி வயது (34), அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கோகுல்ராஜ் வயது (21), கொவளை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சேகர் வயது (21) ஆகிய 3 நபரும் சேர்ந்து தேவனை அடித்து கொலை செய்து, விளாங்காடு கிராமத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவரது விவசாய கிணற்றில் உடலை வீசியது தெரியவந்துள்ளது. உடல் இருந்த கிணற்றுக்கு விரைந்து சென்ற காவல்துறை, கிணற்றில் கிடந்த தேவனின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட கார்த்தி, கோகுல்ராஜ், சேகர் ஆகிய 3 நபரையும் காவல்துறை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் கீழ்கொடுங்காலூர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் வேலூர் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், தீபா சத்ரியன், சுதாகர் (காஞ்சீபுரம்) ஆகியோர் தலைமையில் வந்தவாசி மற்றும் கீழ்க்கொடுங்காலூர், பையூர், கீழ்ப்பாக்கம், கொவளை ஆகிய கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

 


Crime: வந்தவாசியில் காணாமல் போன வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்பு - கொலை செய்ததாக  3 பேர் கைது

 

இதுகுறித்து காவல்துறையினர் 3 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவனின் உறவினர் வடிவேலு. இவருக்கு இதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி குடும்பத்தினர் ஏலச்சீட்டு பணம் தர வேண்டுமாம். அவர்கள் இழுத்தடிக்கவே, தேவனை ஞாயிற்றுக்கிழமை கீழ்ப்பாக்கத்துக்கு வரவழைத்த வடிவேலு, அவரை உடன் அழைத்துக் கொண்டு கார்த்தி குடும்பத்தினரிடம் சென்று சீட்டுப் பணம் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரவு பைக்கில் தேவன் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த கார்த்தி, கோகுல்ராஜ், சேகர் ஆகியோர் தேவனை வழிமடக்கி கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளது தெரியவந்தது.

 


Crime: வந்தவாசியில் காணாமல் போன வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்பு - கொலை செய்ததாக  3 பேர் கைது

கொலை செய்யப்பட்ட தேவனின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்பினர் கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் நேரில் சென்ற செய்யாறு கோட்டாட்சியர் வினோத்குமார், தேவனின் குடும்பத்துக்கு முதற்கட்டமாக 6 லட்சத்துக்கான காசோலை, அரிசி, மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை நிவாரணமாக வழங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget