மேலும் அறிய

மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்; நையப் புடைத்த இளைஞர்களில் ஒருவர் கைது

சேத்துப்பட்டு அருகே பள்ளி மாணவியை வீட்டிற்கு வா என அழைத்த ஆசிரியரை இளைஞர்கள் தாக்கிய வீடியோ வைரலானதை அடுத்து தலைமறைவாக இருந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனக்கரசு 42 தணிக்கவியல் ஆசிரியராக கடந்த 20 ஆண்டு காலமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்டு பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் தனக்கரசு இப்பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு அடிக்கடி வராமல் நின்று விடுவாராம். இந்த மாணவியை பள்ளியில் இருந்து விடுவிக்க டிசி கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவியும் டிசியை வாங்கும் நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதிக்கு முன்பு தனக்கரசு குடிபோதையில் மாணவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய் என்ன செய்கிறாய் வீட்டுக்கு வா என செல்போனில் பேசி உள்ளார்.


மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்; நையப் புடைத்த இளைஞர்களில் ஒருவர் கைது

 

அந்த மாணவியும் சார் நான் டி சி வாங்க போறேன் எனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறுகிறார். ஆனால் மீண்டும் வீட்டுக்கு வா என ஆசிரியர் அழைக்கிறார். அதற்கு மாணவி நான் ஏன் வரவேண்டுமென பேசுகிறார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி அந்த மாணவிக்கு வந்த செல்போன் உரையாடலை வைத்து இளைஞர்கள் சதீஷ்குமார் என்கிற சத்தியா மற்றும் கோகுல் வயது (24), மனோஜ் வயது (24), செல்வராஜ் வயது (23) சேது என்கிற சேதுராமன் வயது (24), சந்துரு வயது (24) ஆகிய ஆறு பேர் ஆசிரியர் தனக்கரசுவை தனியாக ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று முட்டி போட வைத்து அந்த மாணவியின் செல்போன் நம்பர் உனக்கு எப்படி கிடைத்தது. திருமணம் ஆகி உனக்கு குழந்தைகள் இல்லையா, உனக்கு அக்கா தங்கச்சி இல்லையா, நாங்களும் தான் குடிக்கிறோம் ஆனால் இப்படி செய்ய மாட்டோம் உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும் என கேட்டு இளைஞர்கள் ஆசிரியரை தாக்குகின்றனர்.


மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்; நையப் புடைத்த இளைஞர்களில் ஒருவர் கைது

அதில் அவரை தர குறைவாக பேசுகின்றனர். இது குறித்து அந்த இளைஞர்கள் ஆசிரியரை தாக்குவதை வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலான நிலையில் ஆசிரியர் தனகராசுவை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஆசிரியரை தாக்கிய ஆறு பேரை தேடி வந்தனர். அப்போது சேத்துப்பட்டு நான்கு வழி சாலை சந்திப்பில் ஆய்வாளர் ராஜாராம், துணை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தலைமறைவாக இருந்த சதீஷ் என்கின்ற சத்தியா போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அப்போது அவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போளூர் சிறையில் அடைத்தனர். மேலும் தரைமறைவாக உள்ள ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget