மேலும் அறிய

Crime: திருமணம் செய்து வைக்காத தந்தையை வெட்டி கொன்ற மகன்... திருவண்ணாமாலை அருகே அதிர்ச்சி

தானிப்பாடி பகுதியில் திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை சராமரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த குபேரபட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சகாதேவன் வயது (59), இவரது மனைவி அன்னக்கிளி வயது (55), இவர்களுக்கு மணிகண்டன் வயது (30), சக்திவேல் வயது (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அதில், கடைசி மகனான சக்திவேலு என்பவருக்கு குபேரபட்டிணம் கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே மாதத்தில் இருவரும் பிரிந்து சென்றனர்.  பின்னர் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, விவாகரத்து ஆனா பெண்ணுக்கு மற்றொரு நபருடன் திருமணம் நடைபெற்றது.

இதனால் மனவேதனை அடைந்த சக்திவேல், தனக்கு வேறு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக, அவரது தந்தை சகாதேவனுக்கும், சக்திவேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோன்று, சக்திவேல் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டு அவரது தந்தை சகாதேவன், தாய் அன்னக்கிளியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், திடீரென அரிவாளை எடுத்து தந்தை சகாதேவனை சராமாரியாக வெட்டியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் அன்னக்கிளி, அண்ணன் மணிகண்டன் ஆகியோர் தடுக்க முயன்றும் அவர்களால் தடுக்க முடியவில்லை. சக்திவேல் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த சகாதேவன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணெதிரே துடிதுடித்து உயிரிழந்ததை பார்த்த மனைவி அன்னக்கிளி, மகன் மணிகண்டன் கதறி அழுதார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து தானிப் பாடி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

 


Crime: திருமணம் செய்து வைக்காத  தந்தையை வெட்டி கொன்ற  மகன்... திருவண்ணாமாலை அருகே அதிர்ச்சி

 

தகவல் அறிந்த தானிப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சகாதேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தந்தையை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று, அங்குள்ள விவசாய நிலத்தில் பதுங்கியிருந்த சக்திவேலை தானிப்பாடி காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சக்திவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில், தந்தையை மகன் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tanushree Dutta Emotional | சொந்த வீட்டிலேயே டார்ச்சர்.. கதறி அழுத நடிகை! வெளியான பகீர் வீடியோ
TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Renault Triber Facelift: சந்தைக்கு வந்தது ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட்..! 10 லட்சம்தான்.. இத்தனை சிறப்புகளா?
Renault Triber Facelift: சந்தைக்கு வந்தது ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட்..! 10 லட்சம்தான்.. இத்தனை சிறப்புகளா?
ஜூலை 24 கடைசி தேதி! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா
ஜூலை 24 கடைசி தேதி! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா
IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!
IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!
MK Stalin Photo : ’கையில் வென்ஃப்லான் பேண்டேஜ்’ கண் கலங்க வைக்கும் முதல்வரின் மருத்துவமனை புகைப்படம்..!
’கையில் வென்ஃப்லான் பேண்டேஜ்’ கண் கலங்க வைக்கும் முதல்வரின் மருத்துவமனை புகைப்படம்..!
Embed widget