மேலும் அறிய

Crime: காரில் கடத்தப்பட்ட பைனான்சியர்- 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசார்

செய்யார் அருகே முன்விரோத தகராறில் பைனான்சியரை காரில் கடத்தி பணம் கேட்டு நாடகமாடிய 6 நபர்களை தனிப்படை காவல்துறையினர் 24 மணிநேரத்தில் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம் , நாட்டேரி கிராமம் , பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் வயது ( 43). இவர் உறவினர் வடிவேல், சுரேஷ் ஆகியோருடன் கூட்டாக சேர்ந்து சிறிய அளவில் பைனான்ஸ் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ராமச்சந்திரன் நேற்று முன்தினம் நாட்டேரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது ராணிப்பேட்டை மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஏற்கனவே கொடுக்கல் வாங்கலில் பழக்கமானவர் என்ற வகையில் பேசியுள்ளார். இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி பேசிக் கொண்டிருந்த ராமச்சந்திரன் 5 பேர் முகவரி கேட்பது போல் நடித்து திடீரென ராமச்சந்திரனை அடித்து காருக்குள் இழுத்துப்போடடு காரில் கடத்தி சென்றனர்.

காரில் வந்த நபர்களில் ஒருவர் ராமச்சந்திரன் இருச்சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு காரினை பின்தொடர்ந்தது சென்றுள்ளார். காரில் சென்றவர்கள் ராமச்சந்திரன் போனை ‌பிடுங்கி அவரின் சகோதரன் ரவிச்சந்திரனுக்கு போன் செய்து உங்களின் அண்ணனை கடத்தியுள்ளோம் அவரை உயிரோடு விட வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் தரவேண்டும் பணத்தை எப்போது எங்கே தரவேண்டும் என்று கூறுகிறோம் என கூறி சொல்போனை சுச் ஆப் செய்துள்ளனர்.  

 


Crime: காரில் கடத்தப்பட்ட பைனான்சியர்- 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசார்

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் இதுகுறித்து பிரம்மதேசம் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். ஓச்சேரி பைபாஸ் சாலையில் இருந்து மீண்டும் கடத்தி கொண்டு சென்ற அதே இடத்தில் ராமச்சந்திரனை விட்டுவிட்டு சென்றுள்ளனர். மேலும் அவருடைய இருசக்கர வாகனத்தையும் விட்டு சென்றுள்ளனர். மேலும் ராமச்சந்திரன் வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் மற்றும் 3 பவுன் தங்க சங்கிலியையும் கடத்தல் கும்பல் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த செய்யார் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தூசி காவல்நிலைய ஆய்வாளர் குமார் ஆகியோர் ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்தினர். அதன் பிறகு தனிப்படை அமைக்கப்பட்டு ராமச்சந்திரனை எங்கு இருந்து எங்கு கடத்தப்பட்டார் என அறிந்து கொள்ள அவர் சென்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று நடந்த சம்பவங்களை நேரடியாக காவல்துறையின விசாரித்தனர் காரில் தப்பிய ஆசாமிகள் ஏன் ராமச்சந்திரனை கடத்தினார்கள் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.


Crime: காரில் கடத்தப்பட்ட பைனான்சியர்- 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசார்

இந்நிலையில் ராமச்சந்திரனை விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதில் கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் வயது( 31) என்பவர் பைனான்ஸ் கேட்டதற்கு தர முடியாது என அசிங்கமாக பேசி அனுப்பியுள்ளார். அதனை மனதில் வைத்துக் கொண்டு ராமச்சந்திரனை எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என நினைத்து தனது நண்பர்களுடன் மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் வயது (37) திரு கரும்பூர் ராஜேந்திர பிரசாந்த் வயது (27 ), காஞ்சிபுரம் தாலுகா தாமல் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் வயது (24), தமிழரசன் ( 27) ஆகியோர் ஒன்று சேர்ந்து நெமிலி தாலுக்கா பிள்ளையார்பாக்கம் அடுத்த பொய்கைநல்லூர் பகுதியில் சேர்ந்த மோகன்ராஜ் வயத (24) என்பவரது காரில் திட்டமிட்டு கடந்த 24-ஆம் தேதி இரவு கடத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 


Crime: காரில் கடத்தப்பட்ட பைனான்சியர்- 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசார்

அப்போது தான் அவர்கள், ராமச்சந்திரன் குடும்பத்தார் பணம்பலம் உள்ளவரா என விசாரிக்கதான் பல லட்சங்கள் கேட்டு குழப்பி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து பழி தீர்ப்பதற்காக பல லட்சங்கள் கேட்டு நாடகம் ஆடியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து தனிப்படி போலீசார் மாமண்டூரில் பதுங்கி இருந்த பிரபாகரன் ரமேஷ் ராஜேந்திரன் பிரசாத் விக்னேஷ் தமிழரசன் உடந்தையாக இருந்த கார் டிரைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட 6 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget