மேலும் அறிய

Crime: நாளை திருமணம்.. மண்டபத்தில் வைக்கப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் திருட்டு

திருவண்ணாமலை நகர குற்றப் புலனாய்வு பிரிவில் தற்போதைய யாதவர் திருமண மண்டபத்தின் தலைவர் அரவாழி புகார் மனு அளித்துள்ளார்.

திருவண்ணாமலை திருவூடல் வீதியில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர் மற்றும் தண்டராம்பட்டு ஆகிய 4 தொகுதிகளில் உள்ள யாதவ குலத்திற்கு சொந்தமான யாதவர் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த திருமண மண்டபத்தில் யாதவர் மட்டுமின்றி மற்ற சமுதாயத்தினரும் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை பணம் கட்டி ரசீது பெற்று நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த திருமண மண்டபத்தை அதே சமுதாயத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் நிர்வகித்து வந்த நிலையில் தொடர்ச்சியாக அவர்களே நிர்வகித்து வருவதாக பலதரப்பட்ட மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். தற்பொழுது அந்த மண்டபத்தில் அறவாழி என்பவரை தலைவராக முறைப்படி தேர்ந்தெடுத்து நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தனது மகனின் திருமணத்திற்காக கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திருமண மண்டபத்தில் ரூபாய் 30,000 முன்பணமாக செலுத்தி ரசீது பெற்று நாளை காலை திருமணம் செய்ய உள்ளார்.

 


Crime: நாளை திருமணம்.. மண்டபத்தில் வைக்கப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் திருட்டு

 

இந்த நிலையில் நேற்று (22.05.23) தனது மகனின் திருமணத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களை சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கி மண்டபத்தில் உள்ள சமையல் அறையில் வைத்து பூட்டு போட்டு பூட்டி சாவியை முன்னாள் ராணுவ வீரர் எடுத்துச் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே மண்டபத்தை நிர்வகித்து வந்தனர். இரு தரப்பினருக்கும் தற்போதைய தலைவர் உள்ளிட்ட தலைவர் தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு நகர காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டு அதனுடைய வழக்கு நிலுவையில் உள்ளது.மண்டபத்தின் முன்னாள் பொருளாளரும், வழக்கறிஞரும், பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவருமான டி.எஸ். சங்கர் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்களான கீழ்நாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், அருண் பாண்டியன், ராஜேஷ் உள்ளிட்ட 7 பேர் நேற்று இரவு அத்துமீறி மண்டபத்திற்குள் நுழைந்து மண்டபத்தில் திருமணத்திற்காக திருமண வீட்டார் வாங்கி வைத்திருந்த மளிகை பொருட்கள் வைக்கப்பட்ட அறையை உடைத்து சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான அனைத்து மளிகை பொருட்களையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை நகர குற்றப் புலனாய்வு பிரிவில் தற்போதைய யாதவர் திருமண மண்டபத்தின் தலைவர் அரவாழி புகார் மனு அளித்துள்ளார்.

 


Crime: நாளை திருமணம்.. மண்டபத்தில் வைக்கப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் திருட்டு

 

இதுகுறித்து பேசிய தலைவர் அரவாழி; வழக்கறிஞர் சங்கர் தொடர்ச்சியாக இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும், தங்களை நிர்வாகம் செய்ய விடாமல் அவ்வப்போது இதுபோன்று தகராறு செய்து வருவதாகவும் குற்றம் காட்டும் அவர் தற்பொழுது திருமண வீட்டார் வாங்கி வைத்திருந்த மளிகை பொருட்களை திருடி சென்றதால் திருமண வீட்டார் செய்வதறியாமல் தவித்து வருவதாகவும், உடனடியாக காவல்துறை திருமண வீட்டாருக்கு மளிகை பொருட்களை பெற்று தருமாறும் மேலும் அத்துமீறி உள்ளே நுழைந்து மண்டபத்தில் மளிகை பொருட்களை திருடி சென்ற சங்கர் உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய மணமகனின் தந்தை; முறைப்படி மண்டபத்திற்கு பணம் கட்டி ரசீது பெற்றுள்ளதாகவும் நேற்று மாலை தான் வைத்து பூட்டிச் சென்ற மளிகை பொருட்களை திருடி சென்று தனக்கும் தனது வீட்டாருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் வேதனையுடன் கூறும் அவர் உடனடியாக மளிகை பொருட்களை கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Embed widget