மேலும் அறிய

போலீஸிடம் எஸ்கேப் ஆகி பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய கள்ள நோட்டு கும்பல்: சேஸ் செய்த போலீசாரிடம் சிக்கியது!

அவர்கள் மூன்று பேரும் காவல் துறையினர் போல் நடித்து கள்ளநோட்டுகளை மாற்றுவது, வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி பகுதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டுப்புடவை வியாபாரியான கனகராஜ் என்பவரின் காரை வழிமறித்த கும்பல் ஒன்று தாங்கள் போலீசார் என கூறி நாடகமாடி, கனகராஜிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடியது.

பாதிக்கப்பட்ட பட்டுப்புடவை வியாபாரி கனகராஜ், ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில். திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் தனிப்படை  அமைக்கப்பட்டு வழிப்பறிக் கொள்ளை நடைபெற்றதாக கூறப்படும் வெங்கிளி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனிப்படை காவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் சொகுசு கார் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தனிப்படை காவலர்கள் சொகுசு காரை துரத்திச் சென்று பிடிக்க முயன்றபோது காரில் இருந்த நபர்கள் காரை வேகமாக இயக்கி ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் வேகமாகச் சென்றனர். கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வீட்டின் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.


போலீஸிடம் எஸ்கேப் ஆகி பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய கள்ள நோட்டு கும்பல்: சேஸ் செய்த போலீசாரிடம் சிக்கியது!

காரில் இருந்தவர்கள் தப்ப முயன்ற போது, விபத்தை ஏற்படுத்தியதற்காக அப்பகுதியில் இருந்தவர்கள், அவர்களை தாக்கினர். அதற்குள் அங்கு வந்தடைந்த தனிப்படையினர், உடனடியாக பொது மக்களிடம் இருந்து காரில் வந்தவர்களை மீட்டு சோதனை மேற்கொண்ட போது. காரில் இரண்டு பைகள் இருப்பது தெரியவந்தது. அதில் 25 லட்சம் ரூபாய் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. 


போலீஸிடம் எஸ்கேப் ஆகி பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய கள்ள நோட்டு கும்பல்: சேஸ் செய்த போலீசாரிடம் சிக்கியது!

இதனை அடுத்து காரில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பெருமாள், வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன், சதீஷ் ஆகிய மூன்று பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்  அவர்கள் மூன்று பேரும் காவல் துறையினர் போல் நடித்து கள்ளநோட்டுகளை மாற்றுவது, வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. 


போலீஸிடம் எஸ்கேப் ஆகி பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய கள்ள நோட்டு கும்பல்: சேஸ் செய்த போலீசாரிடம் சிக்கியது!

மேலும் இவர்களுக்கு துணையாக செயல்பட்டுவந்த சரத், சதிஷ் , தினகரன் ஆகிய  மூன்று பேரையும் அவர்கள் பயன்படுத்திய  காரையும், அவர்களிடமிருந்து 9 செல்போன்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் காவல் துறையினர் துரத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் நேற்று  வழிப்பறி நடைபெற்றதாக புகார்  அளித்த கனகராஜ், குணசேகரன் ஆகியோரிடமும் கள்ள நோட்டுகள் மாற்றியது  தொடர்பாக காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Embed widget