மேலும் அறிய

போலீஸிடம் எஸ்கேப் ஆகி பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய கள்ள நோட்டு கும்பல்: சேஸ் செய்த போலீசாரிடம் சிக்கியது!

அவர்கள் மூன்று பேரும் காவல் துறையினர் போல் நடித்து கள்ளநோட்டுகளை மாற்றுவது, வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி பகுதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டுப்புடவை வியாபாரியான கனகராஜ் என்பவரின் காரை வழிமறித்த கும்பல் ஒன்று தாங்கள் போலீசார் என கூறி நாடகமாடி, கனகராஜிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடியது.

பாதிக்கப்பட்ட பட்டுப்புடவை வியாபாரி கனகராஜ், ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில். திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் தனிப்படை  அமைக்கப்பட்டு வழிப்பறிக் கொள்ளை நடைபெற்றதாக கூறப்படும் வெங்கிளி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனிப்படை காவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் சொகுசு கார் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தனிப்படை காவலர்கள் சொகுசு காரை துரத்திச் சென்று பிடிக்க முயன்றபோது காரில் இருந்த நபர்கள் காரை வேகமாக இயக்கி ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் வேகமாகச் சென்றனர். கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வீட்டின் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.


போலீஸிடம் எஸ்கேப் ஆகி பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய கள்ள நோட்டு கும்பல்: சேஸ் செய்த போலீசாரிடம் சிக்கியது!

காரில் இருந்தவர்கள் தப்ப முயன்ற போது, விபத்தை ஏற்படுத்தியதற்காக அப்பகுதியில் இருந்தவர்கள், அவர்களை தாக்கினர். அதற்குள் அங்கு வந்தடைந்த தனிப்படையினர், உடனடியாக பொது மக்களிடம் இருந்து காரில் வந்தவர்களை மீட்டு சோதனை மேற்கொண்ட போது. காரில் இரண்டு பைகள் இருப்பது தெரியவந்தது. அதில் 25 லட்சம் ரூபாய் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. 


போலீஸிடம் எஸ்கேப் ஆகி பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய கள்ள நோட்டு கும்பல்: சேஸ் செய்த போலீசாரிடம் சிக்கியது!

இதனை அடுத்து காரில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பெருமாள், வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன், சதீஷ் ஆகிய மூன்று பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்  அவர்கள் மூன்று பேரும் காவல் துறையினர் போல் நடித்து கள்ளநோட்டுகளை மாற்றுவது, வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. 


போலீஸிடம் எஸ்கேப் ஆகி பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய கள்ள நோட்டு கும்பல்: சேஸ் செய்த போலீசாரிடம் சிக்கியது!

மேலும் இவர்களுக்கு துணையாக செயல்பட்டுவந்த சரத், சதிஷ் , தினகரன் ஆகிய  மூன்று பேரையும் அவர்கள் பயன்படுத்திய  காரையும், அவர்களிடமிருந்து 9 செல்போன்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் காவல் துறையினர் துரத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் நேற்று  வழிப்பறி நடைபெற்றதாக புகார்  அளித்த கனகராஜ், குணசேகரன் ஆகியோரிடமும் கள்ள நோட்டுகள் மாற்றியது  தொடர்பாக காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget