மேலும் அறிய

ஒப்பந்ததாரரை கடத்தி பத்திரப்பதிவு செய்ய முயற்சி! ஜோலார்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்!

ஜோலார்பேட்டையில் ஒப்பந்ததாரரை தாக்கி காரில் கடத்தி கட்டாய பத்திரப்பதிவு செய்ய முயற்சி! கதறி துடித்த மூதாட்டி! பத்திரபதிவை நிராகரித்த சப் ரிஜிஸ்டர்!

ஜோலார்பேட்டையில் ஒப்பந்ததாரரை காரில் கடத்தி கட்டாய பத்திரப்பதிவு செய்ய முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடியானகுப்பத்தைச் சேர்ந்த சிலரிடம் 6.5 ஏக்கர் நிலத்தை விற்று தருவதாக கூறி மனைவி பெயரில் பவர் பட்டா செய்துள்ளார். 

ஆனால், நிலத்தை கொடுத்த சிலர் தங்களுக்கு அதற்குண்டான தொகை வேண்டும் என கேட்டு வந்த நிலையில் ரவிச்சந்திரன் அந்த நிலத்தை நாட்றம்பள்ளி அடுத்த மல்ல குண்டாவை சேர்ந்த குமார் (44) மின் டவர் அமைக்கும் ஒப்பந்ததாரருக்கு  நிலத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளார். ஆனால், குமார் அந்த நிலத்திற்கான முழு தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதன் காரணமாக ரவிச்சந்திரனுக்கும், குமாருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று குடியானக்குப்பத்திற்கு தனது குடும்பத்துடன் குமார் வந்திருப்பதை அறிந்த ரவிச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சென்று உனக்கு கிரயம் கொடுத்த சொத்தை மீண்டும் எனக்கு தரும்படி கூறியுள்ளார். ஆனால், குமாரோ நிலத்தை கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என்றால் கூடுதல் பணம் தர வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் குமாரை தாக்கி அங்கிருந்து ஜோலார்பேட்டை சப் ரிஜிஸ்டர் ஆபீஸிக்கு அழைத்து வந்தனர். 

இதனால் ஜோலார்பேட்டை சப் ரிஜிஸ்டர் ஆபீஸில் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது குமாரின் தாயார் தங்களை காரில் கடத்தி வந்து கையெழுத்து வாங்க முற்படுகின்றனர் கதறி அழுதார்.  இதனால் சப் ரிஜிஸ்டர் இரு தரப்பினரின் சம்மதம் இல்லாமல் பத்திர பதிவு செய்ய முடியாது என நிராகரித்துவிட்டார். 

இதுகுறித்து குமார் தரப்பினர் எஸ்பி அலுவலகத்திற்கு கொடுத்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீசார் சப் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு விரைந்தனர். பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர் 

அப்போது குமார் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், காரில் கடத்திச் சென்று கையெழுத்து வாங்க முற்பட்டதன் காரணமாகவும் தாக்கியதன் காரணமாகவும் ரவிச்சந்திரனின் மகனான விஷ்ணு மற்றும் சம்பத் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

நிலத்தை பத்திர பதிவு செய்து கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்த குமாரை  காரில் கடத்திச் சென்று மீண்டும் பத்திர பதிவு செய்ய முற்பட்ட சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
Embed widget