மேலும் அறிய

Crime: பெட்ரோல் போட்டவுடன் ஊழியரை அரிவாளுடன் மிரட்டும் நபர் - நாங்குநேரியில் பரபரப்பு

நாங்குநேரி பெட்ரோல் நிலையத்தில் ஊழியரிடம் வழிப்பறி செய்ய கொலை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்துள்ளது வாகைகுளம் கிராமம். இங்குள்ள நெல்லை - கன்னியாகுமரி தேசிய நான்கு வழிச் சாலையோரம் தனியார் பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. குறிப்பாக அதில் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் என பலரும் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்புவது வழக்கம். இதனால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடிய இடமாக இருக்கும். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு ஊழியர் முருகன்(45) என்பவர் அங்கு பணியில் இருந்து உள்ளார். அப்போது அங்கு ஒரு இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்து வண்டிக்கு பெட்ரோல் போட்டு உள்ளனர். ஊழியர் முருகன் பெட்ரோல் போட்டு முடிந்ததும் அந்த வாகனத்தின் பின்னால் இருந்த நபர் திடீரென இறங்கி வந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஊழியர் முருகனை வெட்ட அரிவாளுடன் கையை ஓங்கியவாறு பாய்ந்து சென்றுள்ளார்.

மேலும் அவரிடமிருந்து பணப்பையையும் பறிக்க முயன்றுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட அந்த ஊழியர் கையில் பணப்பையை பிடித்துக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி அருகில் இருந்த பெட்ரோல் நிலைய அலுவலகத்திற்குள் ஓடினார். உடனே அங்கிருந்த சக ஊழியர்கள் வெளியே வந்து பார்ப்பதற்குள் இரு சக்கர வாகனத்தில் இருந்த  நபர் வாகனத்தை எடுக்க அரிவாளுடன் பின்னால் விரட்டி சென்ற நபர் அதே இருசக்கர வாகனத்தில் ஏறி இருவரும் தப்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது  நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இது குறித்து நாங்குநேரி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து பெட்ரோல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த நாங்குநேரி காவல்துறையினர்  தலைமறைவான இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலை பெட்ரோல் நிலைய பகுதியிலேயே இருவர் அரிவாளை காட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இதே பெட்ரோல் நிலைய அலுவலகத்தில் ரூ1.5 லட்சம் மர்ம நபர்களால் திருடிய சம்பவம் நடந்தது.  ஆனால் அது இன்னும் துப்பு துலங்காத நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அங்கு ஊழியரிடம் வழிப்பறி மற்றும் கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் நெல்லை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையோரம் இத்தகைய பயங்கர வழிப்பறி கொலை முயற்சி சம்பவங்கள் தொடர்வதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். மேலும்  தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு போதிய பாதுகாப்பு அளித்து அச்சமின்றி பயணிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget