மேலும் அறிய

காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு - தூள்கிளப்பும் தூத்துக்குடி சைபர் க்ரைம்

செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும், அதற்கு அடிமையாகி பணத்தை இழந்து தங்கள் வாழ்க்கையை தொலைத்து தற்கொலை செய்வது வரை நிகழ்ந்துள்ளது. .

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 11,50,000/- மதிப்புள்ள 95 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. செல்போன்களை மீட்ட தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.


காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு - தூள்கிளப்பும் தூத்துக்குடி சைபர் க்ரைம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார். அதன்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களிடம் ஏற்கனவே மொத்தம் 680 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு - தூள்கிளப்பும் தூத்துக்குடி சைபர் க்ரைம்
  
தற்போது சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்டையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 11,50,000/- மதிப்புள்ள 95 செல்போன்களை கண்டு பிடித்து, அவற்றை பறிமுதல் செய்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.


காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு - தூள்கிளப்பும் தூத்துக்குடி சைபர் க்ரைம்

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், “செல்போன்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக கையாளவேண்டும், பள்ளி குழந்தைகளுக்கு செல்போனில் ஆன்லைன் வகுப்பு பயிலும் போது அவற்றை கட்டுப்பாடுடன் கையாள்வதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும், மேலும் குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனுக்கு போன் லாக் தேவையில்லை, குழந்தைகளுக்கு பெற்றோருக்கு தெரியாமல் இரகசியங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை, அது பெற்றோர்கள் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும், செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும், அதற்கு அடிமையாகி பணத்தை இழந்து தங்கள் வாழ்க்கையை தொலைத்து தற்போது தற்கொலை செய்வது வரை நிகழ்ந்துள்ளது. ஆகவே ஆன்லைன் ரம்மி விளையாடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், முகம் தெரியாத நபர்களிடம் பழகி பின்னர் குற்ற நிழ்வுகள் நடக்க வழிவகை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்கள் செல்போனுக்கு வரும் OTPயை கொடுக்க வேண்டாம், வங்கி ஒருபோதும் உங்கள் OTPயை கேட்காது. உங்களுக்கு வரும் OTPயை யாரிடமும் பகிராதீர்கள், அதன் மூலம் உங்கள் பணம் ஏமாற்றப்பட்டு மோசடி நடைபெறும், சமூக வலைதளங்களில் வரும் வேலை வாய்ப்பு சம்மந்தமான செய்திகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இதுபோன்ற விழிப்புணர்வு குறும்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. மேலும்  ‘மாற்றத்தை தேடி” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் காவல்துறையினர் பொதுமக்களிடையே நேரடியாக சென்று கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, ஆன்லைன் மோசடி போன்ற பல்வேறு விழிப்புணர்வு செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு இதுபோன்ற குற்ற நிகழ்வுகளில் இருந்து தற்காத்து கொண்டு தங்கள் பணத்தை பாதுகாத்து, பாதுகாப்பை மேம்படுத்திக் கொள்ளுமாறு” எனக் கூறினார்.

மேலும், இதுவரை ரூபாய் 79,50,000/- மதிப்புள்ள 775 காணாமல் போன் செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடித்த சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசாரை பாராட்டினார். நிகழ்வின்போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் சுதாகர், அச்சுதன் உட்பட சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமிக்கு பாலியல் கொடூரம் ; உடந்தையாக இருந்த பெண் உட்பட 3 பேர் கைது
ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமிக்கு பாலியல் கொடூரம் ; உடந்தையாக இருந்த பெண் உட்பட 3 பேர் கைது
காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

3 அதிமுக MLA ராஜினாமா ஆட்டத்தை தொடங்கிய தவெக அதிர்ச்சியில் SP வேலுமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Horse Trading : ‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? எதற்கு அரசியலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது..?
‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? சொல்ல காரணம் இதுதான்!
Junior NTR: அரைச்ச மாவையே அரைக்காதீங்க! கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
Junior NTR: அரைச்ச மாவையே அரைக்காதீங்க! கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
" அப்பா ஆட்சி நடப்பதாக உதயநிதி நினைக்கிறார் " அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பதிலடி
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
Embed widget