மேலும் அறிய

Fake Travel Agent: போலி டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி.!

இளைஞர்களுக்கு கனடா செல்வதற்கு விசா, பணி ஆணை மற்றும் விமான டிக்கெட் வழங்கிய நிலையில், விமான நிலையம் சென்ற போது அவை அனைத்தும் போலி என தெரியவந்தது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரை வெளிநாடு அனுப்புவதாக கூறி ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் அழகாபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் முத்தழகு மாதவி தம்பதியினர். இவர்கள் விநாயகா ஏஜென்சி என்ற பெயரில் டிராவல்ஸ் ஏஜென்சி பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இவர்கள் திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள இளைஞர்களை கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் பல லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளிநாட்டிற்கு அனுப்பாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது.
 
திருவாரூர் அருகே வடகண்டம் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் முத்தழகு மாதவி தம்பதியினருக்கு தெரிந்தவர் ஆவர். இவரிடம் கனடா நாட்டில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு தகுதியான இளைஞர்களை அழைத்து வரவும், குறைந்த பட்சம் ஒரு நபருக்கு மூன்று லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் இந்த தம்பதியினர் கமலக்கண்ணனிடம் கூறியுள்ளனர். இதனை நம்பி கமலக்கண்ணன் தன்னுடைய நண்பர்களை அணுகி உள்ளார். மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் கதிர்வேல் என்பவர் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை கமலக்கண்ணன் மூலமாக முத்தழகு மாதவி தம்பதியினரிடம் வழங்கியுள்ளார்.

Fake Travel Agent: போலி டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி.!
மேலும் இவர் மூலமாக ராஜேஷ், கண்ணன், ஆனந்த், நாவுக்கரசு, அண்ணாமலை, ஆகியோரும் பணத்தை வழங்கியுள்ளனர். இவர்கள் 5 பேர் மட்டும் இந்த தம்பதியினரிடம் 12 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் வெளிநாடு அனுப்பாமல் இருந்ததால் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் சரியான பதில் அளிக்காமல் பணம் கொடுத்தவர்களை ஏமாற்றி உள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து இவர்கள் தம்பதியினருக்கு நெருக்கடி கொடுத்த காரணத்தினால் இளைஞர்களுக்கு கனடா செல்வதற்கு விசா, மற்றும் பணி ஆணை மற்றும் விமான டிக்கெட் போன்றவை வழங்கியுள்ளனர். இதனைக் கொண்டு இளைஞர்கள் விமான நிலையம் சென்ற பொழுது இவை அனைத்தும் போலியானவை என தெரியவந்தது. இதனால் இளைஞர்கள் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.
 
மேலும் கடந்த 2 ஆண்டு காலமாக இளைஞர்கள் தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்டு வந்த நிலையில் அவர்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாகவும், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக காவல் துறையில் புகார் அளித்து உங்களை சிறையில் அடைத்து விடுவேன் என மிரட்டியதாகவும், சிலர் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி காரைக்குடிக்கு நேரடியாகச் சென்று முத்தழகு மாதவி தம்பதியினரிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் உடனடியாக பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார், அப்பொழுதும் பணத்தை திருப்பித் தராத தம்பதி மீது சிவகங்கை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் அதேபோன்று திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட இளைஞர்களும் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். உடனடியாக இந்த தம்பதியினரை கைது செய்து பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களின் பணத்தை மீட்டுத் தருமாறும் காவல் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இல்லை என்றால் சிவகங்கை மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget