மேலும் அறிய

மகன் கண் முன்பே தொழிலதிபர் வெட்டி படுகொலை - பட்டப் பகலில் தஞ்சையில் பயங்கரம்

போக்குவரத்து மிகுந்த பகுதியில் பட்டப் பகலில் இது போன்று படுகொலை சம்பவம் நடந்தது தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக தொழிலதிபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாரூரை சேர்ந்த தொழிலதிபர்

திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூரைச் சேர்ந்தவர் பாபு (48). தொழிலதிபர். திமுக பிரமுகர். இவர் காரைக்கால் துறைமுகத்தில் போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இவர் தஞ்சாவூரில் உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவில் பங்கேற்பதற்காக காரில் தனது மகன் பாலாவுடன் திருவாரூரில் புறப்பட்டு நேற்று மதியம் வந்து கொண்டிருந்தார்.

வழிமறித்து நின்ற கார்

தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் ஒரு கடை அருகில் காரை நிறுத்திவிட்டு பாலா மட்டும் இறங்கி சென்று மொய் கவர் வாங்கிவிட்டு மீண்டும் காரில் ஏறினார். அப்போது எதிரே வந்த கார் பாபுவின் காரை வழி மறித்து நின்றது. மேலும் காரில் இருந்தவர்கள் சத்தமாக ஹாரனை எழுப்பி உள்ளனர். 

மகன் கண் முன்பே தந்தை வெட்டி படுகொலை

இதனால் தன் காரை விட்டு பாபு இறங்கியுள்ளார். அப்போது வழிமறித்து நின்ற காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் அரிவாளால் பாபுவை சரமாரியாக அவரது மகன் பாலா கண் முன்பு வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.  இதில் படுகாயம் அடைந்து சாலையில் விழுந்த தனது தந்தை பாபுவை கண்டு பாலா அலறி துடித்துள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பாபு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை

தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஆசிஷ் ராவத், ஏ டி எஸ் பி ஜெயச்சந்திரன், டிஎஸ்பிக்கள் நித்யா, ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொழில் போட்டி காரணமாக தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருவாரூர் மாவட்டம், வைப்பூர் காவல் நிலையத்தில் பாபு ஏற்கனவே புகார் செய்திருப்பதும், அதன் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த கொடூர கொலையால் பரபரப்பு

போக்குவரத்து மிகுந்த பகுதியில் பட்டப் பகலில் இது போன்று படுகொலை சம்பவம் நடந்தது தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை மாரியம்மன் கோயில் பகுதி எப்போதும் வாகன போக்குவரத்தால் நெரிசல் மிகுந்த பகுதி. இதில் நேற்று அதிகளவு முகூர்த்தங்கள் வேறு. இப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் அனைத்திலும் திருமண நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. இதனால் வழக்கத்தை விட அதிகளவு போக்குவரத்து இருந்துள்ளது. அப்படிப்பட்ட நேரத்தில்தான் இந்த கொலை சம்பவம் கொடூரமாக நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்..  ஆடிப்போன எம்.ஆர்.கே
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே
பாமக உட்கட்சி பூசல்.. சுற்றுப்பயணத்தை கையில் எடுத்த அன்புமணி.. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
பாமக உட்கட்சி பூசல்.. சுற்றுப்பயணத்தை கையில் எடுத்த அன்புமணி.. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
பிளே ஆப்க்கு முன்பாக ஆர்.சி.பி அடைக்க வேண்டிய ஓட்டை என்ன ? நிபுனர்கள் கருத்து
பிளே ஆப்க்கு முன்பாக ஆர்.சி.பி அடைக்க வேண்டிய ஓட்டை என்ன ? நிபுனர்கள் கருத்து
IND vs ENG: ஸ்ரேயாஸ் இல்லாம போறீங்களா? மிடில் ஆர்டரில் என்ன செய்யப்போகிறது இந்தியா? ரசிகர்கள் ஆதங்கம்
IND vs ENG: ஸ்ரேயாஸ் இல்லாம போறீங்களா? மிடில் ஆர்டரில் என்ன செய்யப்போகிறது இந்தியா? ரசிகர்கள் ஆதங்கம்
Embed widget