மேலும் அறிய

மயான பாதைக்கு வழிவிடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் - 4 மாவட்ட காவல்துறையினர் குவிப்பு

’’மேலும் நிலைமை தீவிரம் அடையாமல் இருப்பதற்காக திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட காவல்துறையினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’’

திருவண்ணாமலை மாவட்டம் கலச்பாக்கம் அடுத்த வீரலூர் கிராமத்தில் அருந்ததியர் மயானம் உள்ள பகுதியில் போதிய வசதிகள் இல்லை எனவும் நீண்டதூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் பொதுமக்களின் நலன் கருதி மாற்றுப்பாதயில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இருதரப்பினரையும் அழைத்து வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பல முறை சமரச கூட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் நேற்று அருந்ததியர்கள் வசிக்கும் பகுதியில் உடல் நலக்குறைவால் பெண் ஒருவர் இறந்தார். அவரது சடலத்தை நேற்று மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல முடிவு செய்திருந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் ஏற்கனவே செல்லும் பாதையில் தான் மயானத்திற்கு சடலத்தை கொண்டு செல்ல வேண்டும் வேண்டும் எனவும், புதிய பாதையில் செல்ல கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சாலையின் குறுக்கே முள்வேலிகளை அமைத்ததாக கூறப்படுகிறது. 

மயான பாதைக்கு வழிவிடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் - 4 மாவட்ட காவல்துறையினர் குவிப்பு

இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் தகவல் அறிந்த எஸ்பி பவன் குமார். ஆரணி கோட்டாட்சியர் கவிதா, போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டும். மாற்றுப்பாதையில் சடலத்தை கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பொது மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் சடலத்தை கொண்டு செல்ல மாற்றுப்பாதையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இரு தரப்பினரிடையே மோதல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டதால் பிரச்னைகளை தீர்க்க இருதரப் பினரையும் அழைத்து சமரசபேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த டிஐஜி ஆனி விஜயா நேற்றிரவு 7 மணியளவில் அங்கு வந்தார். அவரது தலைமையில் எஸ்பி பவன் குமார், கோட்டாட்சியர் கவிதா மற்றும் அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், அருந்ததியர்கள் வசிக்கும் பகுதியில் வீடுகள், வாகனங்களை சேதப்படுத்தியவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிகை எடுப்பதாகவும், ஏற்கனவே செல்லும் மயான பாதை விரைவில் சீரமைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்து தரும் வரை மாற்றுப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படும் என டிஐஜி தெரிவித்தார். அதற்கு மற்றொரு தரப்பினர் முழு சம்மதம் தெரிவிக்காததால் தொடர்ந்து இழுபறி நீடித்துவருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மயான பாதைக்கு வழிவிடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் - 4 மாவட்ட காவல்துறையினர் குவிப்பு

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் பேசுகையில், நேற்று எங்களை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திடீரென தாக்க வந்தனர் நாங்கள் அனைவரும் வீட்டினுள் சென்று கதவுகளை பாடிக்கொண்டும் வெளியில் உள்ள கண்ணாடிகள் மற்றும் கதவுகள் வாகனங்கள் உள்ளிட்டவைகளை கற்களால் தாக்கினர் பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி எங்களை தாக்கினர். மேலும் எங்கள் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது மற்றும் குடிநீர் தண்ணீர் இதுவரை வழங்கவில்லை நாங்கள் நேற்று இரவு முதல் உண்பதற்கு உணவு இன்றியும் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும் தவித்து வருகிறோம் வெளியே சென்று உணவுகள் வாங்கி வரலாம் என்று நினைத்தாலும் எங்களை பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் நாங்கள் எங்கள் பகுதியில் உள்ளோம் என்று தெரிவித்தனர்

இந்த நிலையில் இருதரப்பினரிடையே நடைபெறும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் டிஐஜி தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் சரவணன், வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் ஆகியோர் அமைதியை ஏற்படுத்தும் குழுவினை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் நிலைமை தீவிரம் அடையாமல் இருப்பதற்காக திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட காவல்துறையினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget