மேலும் அறிய

ஒமிக்ரானில் இருந்து குணமடைந்த நபர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து எறிந்ததால் பரபரப்பு

தடுப்புகளை உடைத்து எறிந்த நபர் மீது 269 ,271 ஆகிய இரண்டு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான பெண் மத்திய ஆப்பிரிக்கா காங்கோ நாட்டில் இருந்து கடந்த 12 ஆம் தேதி சொந்த ஊரான ஆரணிக்கு வந்தார். அப்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு ஓமிக்ரான் அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து அந்த பெண்ணுக்கு ஓமிக்ரான், பரிசோதனை செய்ததில் ஓமிக்ரான் தொற்று உறுதியானது.

ஒமிக்ரானில் இருந்து குணமடைந்த நபர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து எறிந்ததால் பரபரப்பு

இந்நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஓமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அந்த பெண்ணின் தந்தைக்கு  ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஓமிக்ரான் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில நாட்களில் குணமடைந்ததால் இருவரையும் மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்தது.

ஒமிக்ரானில் இருந்து குணமடைந்த நபர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து எறிந்ததால் பரபரப்பு

இதையடுத்து ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட பெண்ணின் 32 வயதான  சகோதரருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஆரணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஆரணி அருகே பையூர் பகுதியில் அவர்கள் வசிக்கும்  தெருவைச் சுற்றி சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறையினர் தடுப்பு வேலி அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பெண்ணின் குடும்பத்தினருடன் தொடர்பு உள்ளவர்களையும் பரிசோதனை செய்து வருகின்றனர். 

ஒமிக்ரானில் இருந்து குணமடைந்த நபர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து எறிந்ததால் பரபரப்பு

Tamil News| சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை...! புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு - வடமாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

மேலும் ஓமிக்ரான் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட காங்கோ நாட்டில் இருந்து வந்த பெண் மற்றும் அவரது தந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வந்த பின்னர் தெருவில் உள்ள தடுப்பை அந்த பெண்ணின் தந்தை உடைத்து எறிந்தார். அதனைப் பார்வையிட்ட கோட்டாட்சியர் கவிதா உத்தரவின் பேரில் பையூர் கிராம நிர்வாக அலுவலர் லோகேஷ் காங்கோ நாட்டில் இருந்து வந்த பெண்ணின் தந்தை மீது ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை செய்த ஆரணி கிராமிய காவல் நிலைய காவல்துறையினர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மீது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தொற்று நோயை  பரப்பும் சட்டப்பிரிவு 269 மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிக்கு கீழ்ப்படியாமைக்கான சட்டப்பிரிவு 271 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பிள்ளைகள் அனைவரும் மதம் மாறி திருமணம் செய்ததால் அதிருப்தி - 2 கோடி மதிப்புள்ள வீட்டை முருகன் கோயிலுக்கு எழுதி வைத்த முதியவர்

தலைப்பு செய்திகள்

" என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு " – போட்டோ அனுப்பி மிரட்டிய இன்ஸ்டா காதலன்
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
Embed widget