மேலும் அறிய

சேலம்: தலையில் வெட்டப்பட்ட அரிவாளுடன் மருத்துவமனைக்கு வந்த நபர் - சேலத்தில் பரபரப்பு

ஹோட்டலில் வைத்திருந்த பாக்கியை திருப்பி தராததால் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பக்கநாடு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (26). இவர் தனது நண்பரான கட்டிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் சவுந்தரராஜன் (22) ஆகியோருடன் நேற்று இரவு 9 மணிக்கு குண்டத்துமேடு டாஸ்மாக் கடையின் எதிரே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, முருகேசனின் நண்பர் சக்திவேல் (26) என்பவரும் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். இந்த நிலையில் சக்திவேல் மற்றும் முருகேசனுக்கு இடையே ஏற்கனவே பணம் விஷயத்தில் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பிறகு ஆத்திரம் அடைந்த சக்திவேல் மதுபோதையில் வீட்டிற்கு சென்று ஆடு அறுக்கும் அரிவாளை எடுத்துவந்து முருகேசனை வெட்டினார். அப்போது அதனை தடுக்க முயன்ற மணிகண்டனையும் வயிற்றில் குத்தினார். மேலும் சௌந்தரராஜனின் தலையிலும் வெட்டினார். இந்தச் சூழலில் முருகேசனும், மணிகண்டனும் எடப்பாடி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சவுந்தரராஜன் தலையில் அரிவாளால் வெட்டுப்பட்ட நிலையில் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் பார்த்து ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சவுந்தரராஜனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தலையிலிருந்து அரிவாளை எடுக்காத நிலையில் மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அரிவாளை அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற முடிவு செய்துள்ளனர்.

அதேசமயம் அப்படி செய்யும்போது உயிரிழக்கும் அபாயமும் இருப்பதால் மருத்துவர்கள் தீவிர ஆலோசனைக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். இதுகுறித்து ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

சேலம்: தலையில் வெட்டப்பட்ட அரிவாளுடன் மருத்துவமனைக்கு வந்த நபர் - சேலத்தில் பரபரப்பு

விசாரணையில், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆவடத்தூர் கிராமம் குண்டத்துமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல். இவர் ஹோட்டல் நடத்திவருகிறார். சக்திவேலின் கடையில் முருகேசன் ரூ. 2 ஆயிரத்து 500 பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இச்சமயத்தில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் ஒன்றாக மது அருந்தியபோது இந்த விபரீதம் நடந்ததாக தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட சௌந்தரராஜனை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget