மேலும் அறிய

மூதாட்டி கடையில் இருந்து 50 கிலோ தக்காளி திருட்டு; சேலத்தில் அதிர்ச்சி

இரண்டு பெட்டிகளில் வைத்திருந்த 50 கிலோ தக்காளி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி கிலோ 100 ரூபாய் தாண்டி விற்கப்படுவதால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். சேலத்தில் உள்ள சந்தைகளில் தக்காளி ஒரு கிலோ 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சேலம் மாநகர் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் பகுதியில் உள்ள சாலையோரத்தில் தக்காளி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் சிவகாமி அம்மாள் (52), இவர் வியாபாரம் முடித்துவிட்டு இரவு இரண்டு பெட்டிகளில் இருந்த தக்காளியை அங்கேயே பாதுகாப்பாக சாக்குபையில் மூடி வைத்துவிட்டு தூங்க வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அதிகாலை எழுந்து சிவகாமி வியாபாரம் செய்யும் கடையின் இடத்திற்கு வந்துள்ளார்.

மூதாட்டி கடையில் இருந்து 50 கிலோ தக்காளி திருட்டு; சேலத்தில் அதிர்ச்சி

அப்போது அங்கு இரண்டு பெட்டிகளில் வைத்திருந்த 50 கிலோ தக்காளி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தக்காளியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் சிவகாமி புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஜெயதேவி மற்றும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தக்காளியை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகாமி மூதாட்டி கடையிலேயே இரண்டாவது முறையாக தக்காளி திருட்டுப் போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூதாட்டி கடையில் இருந்து 50 கிலோ தக்காளி திருட்டு; சேலத்தில் அதிர்ச்சி

இதுகுறித்து சிவகாமி கூறுகையில், "கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தக்காளி விற்பனை செய்து வருகிறேன். தினமும் வியாபாரத்தை முடித்துவிட்டு கடை அமைந்துள்ள பகுதியில் தக்காளி கிரேடுகளுடன் வைத்துவிட்டு செல்வேன். மக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதாலும், காவலர் கண்காணிப்பு அறை மற்றும் காவலர் சிசிடிவி கேமரா இருப்பதால் பயமின்றி வீட்டிற்கு செல்வேன். இதேபோன்றுதான் நேற்று முன்தினம் கடையில் உள்ள தற்காலிகளை எடுத்து வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றேன். ஆனால் அதிகாலை வந்து பார்த்தபோது இரண்டு கிரேடுகளில் வைத்திருந்த 50 கிலோ தக்காளி மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற விட்டனர். இதன் மதிப்பு ரூபாய் 7,000 ஆகும். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தேன். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தக்காளி விலை அதிகம் உள்ளது. இது போன்ற காரியங்களில் சிலர் ஈடுபடுகின்றனர். அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எங்களிடம் இருந்து திருடிச் சென்றவர்களை காவல்துறையினர் கண்டறிந்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget