மேலும் அறிய

சீர்காழியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்ற கும்பல் கைதா? நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஒரே பதிவெண் கொண்ட இரண்டு காரை காவல்துறையினர் பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஒரே பதிவெண் கொண்ட இரண்டு காரை காவல்துறையினர் பறிமுதல் செய்து போலி எண் கொண்ட காரை பயன்படுத்திய நான்கு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.

ஒரே பதிவெண் கொண்ட இரண்டு கார்கள்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் பிள்ளைத்திருவாசல் வாஞ்சி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் என்பவரின் மகன் செல்வராஜ். இவர் தனக்கு சொந்தமான. PY 01 VB 1491 என்ற பதிவு எண் கொண்ட சாம்பல் நிறம் கொண்ட டொயோட்டா இன்னோவா சொகுசு காரில் கடந்த அக்டோபர் 4 -ம் தேதி மதியம் சுமார் 12.30 மணியளவில்   பாண்டிச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு சீர்காழி புறவழி சாலை வழியாக திரும்பி தனது சொந்த ஊரான காரைக்காலுக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் சீர்காழி பையாஸ் சாலையில் செல்லும் போது ஐயப்பனின் காருக்கு முன்பாக அவரின் காரின் பதிவு எண்ணில் அதே கலரில் மற்றொரு டொயோட்டா இன்னோவா கார் சென்று கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.


சீர்காழியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்ற கும்பல் கைதா? நடந்தது என்ன?

கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்ற குற்றவாளிகள்

அதனை அடுத்து அந்த காரினை பின் தொடர்ந்து சென்று சீர்காழி புறவழி சாலையில் அமைந்துள்ள ஆனந்தபவன் ஹோட்டல் எதிரில் அந்த காரினை வழி மறித்துள்ளார். பின்னர் அந்த காரில் இருந்தவர்களிடம் தனது காரின் பதிவெண்ணை உங்கள் காருக்கு பயன்படுத்துகிறீர்களே? என்று கேட்டுள்ளார். அப்போது மற்றோர் மேற்படி காரில் இருந்து இறங்கி வந்த நான்கு நபர்கள் அய்யப்பனை தகாத வார்த்தைகளால் திட்டி கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து,  அங்கிருந்து அவர்கள் வந்த போலி பதிவெண் கொண்ட டொயோட்டா இன்னோவா  காரில் தப்பி சென்றுள்ளனர்.


சீர்காழியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்ற கும்பல் கைதா? நடந்தது என்ன?

வாகன தணிக்கையில் சிக்கிய குற்றவாளிகள்

இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பாக ஐய்யப்பன்  நடவடிக்கை எடுக்க கோரி சீர்காழி காவல் நிலைத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்டு  வழக்கு பதிவு செய்த சீர்காழி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு, தப்பிச்சென்ற குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த சூழலில் சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலசந்திரன் மற்றும் காவலர்கள் சீர்காழி கோயில்பத்து புறவழிச் சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அவ்வழியாக பதிவெண் பலகை இல்லாமல் வந்த சாம்பல் நிற டொயோட்டா இன்னோவா காரினை நிறுத்தி மேற்படி வாகனத்தின் பதிவெண் குறித்து கேட்ட போது அவ்வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். பின்னர், மேற்படி வாகனத்தை சோதனை செய்ததில் காரின் முன் பக்கம் ஓட்டுனர் இருக்கைக்கு கீழ் PYO1 VB 1491 என்ற பதிவெண் பொறிக்கப்பட்ட பதிவெண் பலகை இருந்துள்ளது.


சீர்காழியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்ற கும்பல் கைதா? நடந்தது என்ன?

குற்றவாளிகள் விபரம்

இது தொடர்பாக மேற்படி காரில் வந்த 4 நபர்களை விசாரணை செய்ததில், தங்கள் வாகனத்திற்கு மற்றொரு வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட பதிவெண்ணில் போலியாக பதிவெண் பலகை தயார் செய்து பயன்படுத்தி வந்ததும், அய்யப்பன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சீர்காழி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கில் தொடர்புடையவர்களான சீர்காழியை அடுத்த கீழ அகணி கோயில்பத்து கிராமத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவரது மனோ, சீர்காழி PK ரோடு பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் சச்சிதானந்தம், சீர்காழியை அடுத்த திருக்கருக்காவூர் வடக்குத் தெருவை சேர்ந்த செல்வம் மகன் பாலகுரு, கீழத்தேனுர் வீரபாண்டியன் மகன் மதன் சிங் ஆகிய நான்கு பேர் என்பதும் தெரியவந்து. அதனை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்,  பதிவெண் மாற்றப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்து, குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைத்தனர். 


சீர்காழியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்ற கும்பல் கைதா? நடந்தது என்ன?

வழக்கு தொடர்பாக எழும் பல்வேறு கேள்விகள்

மேலும் இந்த காரை பயன்படுத்தி இதுவரை என்னென்ன குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்? பிடிபட்ட போலி பதிவெண் எண்  கொண்ட காரின் உண்மையான பதிவின் என்ன? அல்லது போலி பதிவினை கொண்ட காரை கொண்டு கொலை, கொள்ளை,  உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுப்பட்டார்களா? அல்லது பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றார்களா?  கைதானவர்கள் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? உள்ளிட்ட எவ்விதமான தகவலும் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Tata Sierra: சியாரா பேஸ் வேரியண்டின் விலை? என்ன அம்சங்கள், வசதிகளை எதிர்பார்க்கலாம்? டாடா கார் அசத்துமா?
Tata Sierra: சியாரா பேஸ் வேரியண்டின் விலை? என்ன அம்சங்கள், வசதிகளை எதிர்பார்க்கலாம்? டாடா கார் அசத்துமா?
Senyar storm: அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
Internet: இந்தியாவில் இணைய வசதி அறிமுகமானது எப்போது? இன்டர்நெட் இன்றி இஸ்ரோ இயங்கியது எப்படி?
Internet: இந்தியாவில் இணைய வசதி அறிமுகமானது எப்போது? இன்டர்நெட் இன்றி இஸ்ரோ இயங்கியது எப்படி?
Embed widget