மேலும் அறிய

ஐயா எங்க வீட்டில் இருந்த நகை எல்லாம் களவு போயிடுச்சி: பொய் புகார் அளித்த தம்பதி - கண்டுபிடித்த போலீஸ்!

மயிலாடுதுறை அருகே வீட்டில்  வைத்திருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றதாக பொய் புகார் அளித்த கணவன் மனைவி மீது குத்தாலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வீட்டில்  வைத்திருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றதாக பொய் புகார் அளித்த கணவன் மனைவி மீது குத்தாலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் திருட்டு போனதாக பொய் புகார் 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மூவலூர் பகுதியை சேர்ந்தவர் 44 வயதான மணிகண்டன். இவர், கடந்த 2 -ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் வெளிப்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்று  பீரோவில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகைகள் மற்றும் 1,10,000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டதாக குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

Vinayagar Chaturthi 2024: ஆசிய கண்டத்திலேயே மிக உயரமான 32 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன விநாயகர் சிலை வழிபாடு !


ஐயா எங்க வீட்டில் இருந்த நகை எல்லாம் களவு போயிடுச்சி: பொய் புகார் அளித்த தம்பதி - கண்டுபிடித்த போலீஸ்!

காவல்துறையினர் தீவிர விசாரணை 

புகாரை பெற்று கொண்டு குத்தாலம் காவல் துறையினர் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தனிப்படை போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையில் திருட்டுப் போனதாக கூறப்பட்ட சம்பவம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதை கண்டறிந்தனர். இதுபோன்று பொய் புகார்கள் அளித்து வேறு வழக்குகளில் மீட்கப்படும் தங்க நகைகள் மீது இவர்கள் உரிமை கோரி அவற்றை பெற்று விடலாம் என்ற தவறான எண்ணத்தில் இது போன்ற செயலில் இவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவதாகவும், அவர்களிடம் முழுமையான விசாரணைகளுக்குப் பிறகு ஏன் அவர்கள் இவ்வாறான பொய் புகார் அளித்தார்கள் என உண்மை நிலை தெரிய வரும் என காவல்துறை வட்டாரத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

எங்கள் அன்பு முதல்வா.. பள்ளிக்கூடம் கட்டி தாங்க... கொடை ரோடு அரசு பள்ளி மாணவர்கள் பாடல் வைரல்

கணவன் மனைவி மீது குற்ற வழக்கு பதிவு 

தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகிய இருவரும் 2 சவரன் தங்க நகைகள் மற்றும் 74,000 ரூபாய் ரொக்க பணத்தை தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாகவும், மீதமுள்ள 9 சவரன் தங்க நகைகள் அடமானத்தில் வைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து தொடர்பாக  குத்தாலம் காவல்துறையினர் பொய்யான புகார் அளித்தமைக்காக மணிகண்டன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்தனர்.

GST Credt Card: கிரெடிட்/டெபிட் கார்ட் பயனர்களுக்கு ஆப்பு - ரூ.2000-க்கு 18% ஜிஎஸ்டி வரி, மத்திய அரசின் அதிரடி திட்டம்


ஐயா எங்க வீட்டில் இருந்த நகை எல்லாம் களவு போயிடுச்சி: பொய் புகார் அளித்த தம்பதி - கண்டுபிடித்த போலீஸ்!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை 

மேலும் விசாரணையின் போது மணிகண்டன் தம்பதியினர் தாமாக முன்வந்து ஒப்படைத்த 2 சவரன் தங்க நகைகள் மற்றும் 74,000 ரூபாய் பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுபோன்று பொய் புகார் அளிப்பவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்து, பொய் புகார் என விரைந்து கண்டு பிடித்த காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Embed widget