மேலும் அறிய

திருச்சி : மயங்கி விழுந்ததாக நாடகம் : தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது..

திருச்சி தென்னூரில் தந்தையை கொலை செய்துவிட்டு, மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடி இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி தென்னூர் சின்னச்சாமி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 52). முறுக்கு வியாபரம் செய்து வந்தார். இவருடைய மனைவி சாந்தி (50). இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மூத்த மகன் விஜயகுமார் (26) சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை முருகனை காணவில்லை என்று கூறி விஜயகுமார் அக்கம், பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது, வீட்டின் அருகில் உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் முருகன் இறந்து கிடந்தார். உடனே தனது தந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்த அவர், இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்தார். உறவினர்களுக்கும் தனது தந்தை மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தார். முருகனின் உடலை குளிர்பதன பெட்டியில் வைத்து மாலை அணிவித்து, அனைவரும் அழுதுகொண்டிருந்தனர். ஆனால் முருகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார், திடீரென வந்ததை பார்த்ததும் துக்கவீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு, குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த முருகனின் உடலை போலீசார் ஆய்வு செய்தனர்.


திருச்சி : மயங்கி விழுந்ததாக நாடகம் : தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது..

இதனை தொடர்ந்து  அவருடைய உடலில் காயங்கள் இருந்தன. இதுபற்றி, விஜயகுமாரிடமும், வீட்டில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மதுபோதைக்கு அடிமையான முருகன் தினந்தோறும் குடித்துவிட்டு குடும்பத்தில் உள்ளவர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதுடன், அவர்களை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். அதுபோல், நேற்று முன்தினம் இரவும் முருகன் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். இதை விஜயகுமார் கண்டித்தபோது, அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது தந்தையின் வயிற்றில் 2 இடங்களில் குத்தியதாக தெரிகிறது. இதில் கீழே விழுந்ததில் முருகனுடைய தலையில் அடிபட்டு மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த விஜயகுமார், தந்தையின் உடலை அருகில் உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். 


திருச்சி : மயங்கி விழுந்ததாக நாடகம் : தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது..

பின்னர் நேற்று காலையில் தந்தையை தேடுவது போல் நாடகமாடிய அவர், ஆற்றின் அருகே முருகன் மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக கூறி, அவருடைய உடலை மீண்டும் எடுத்து வந்து, வீட்டில் இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் முருகனின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் விஜயகுமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜயகுமாரை கைது செய்தனர். தந்தையை கொலை செய்துவிட்டு மகனே நாடகமாடிய சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ukraine's Planned Attack: ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
Poonamallee-Paranthur Metro: பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ukraine's Planned Attack: ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
Poonamallee-Paranthur Metro: பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
Gold Rate 2nd June: மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
Sellur Raju on DMK: போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்
போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்
IPL Final RCB vs PBKS: 18 ஆண்டு தவம்.. ஆர்சிபி - பஞ்சாப் இதுவரை எப்படி? ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?
IPL Final RCB vs PBKS: 18 ஆண்டு தவம்.. ஆர்சிபி - பஞ்சாப் இதுவரை எப்படி? ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?
Embed widget