மேலும் அறிய

Watch video: நிறுத்து! நிறுத்து! சவம் போற ரோட்டுல பஸ் போகக் கூடாது.. நடுரோட்டில் ரகளை செய்த போதை ஆசாமி!

வேலூர் அருகே இறுதி ஊர்வலத்தில் குடிபோதையில் பேருந்தை நிறுத்தி கண்ணாடியை உடைத்து ரகளை செய்த போதை ஆசாமி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த ஜி.ஆர்.பாளையத்தில் முதியவர் ஒருவர் இறந்துள்ளார். அவருடைய இறுதி ஊர்வலம் நடைப்பெற்றது. இந்த துக்க நிகழ்ச்சிக்கு ஊசூர் கொல்லை மேட்டை சேர்ந்த செந்தில்குமார் வயது (39)-என்பவர் தனியார் போக்குவரத்து கம்பெனிகளில் கூலிவேலை செய்பவர் வந்திருந்தார். இவர் குடிபோதையில் இருந்த செந்தில்குமார் இறுதி ஊர்வலத்தில் ஆட்டம் போட்டுவந்ததுள்ளார். அப்போது வேலூரில் இருந்து ஜி.ஆர்.பாளையத்துக்கு அரசு பேருந்து சென்றுள்ளது.

 


Watch video: நிறுத்து! நிறுத்து! சவம் போற ரோட்டுல பஸ் போகக் கூடாது..  நடுரோட்டில் ரகளை செய்த போதை ஆசாமி!

 

அந்த அரசு பேருந்தின் ஓட்டுனர் நித்தியானந்தன் மற்றும் நடத்துனர் வெங்கட்ராமன் ஆகியோர் மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி  விட்டுக்கொண்டிருந்தனர்.அப்போது குடிபோதையில் இருந்த செந்தில்குமார் அரசு பேருந்தை பார்த்ததும் ஆவேசமடைந்து பேருந்து நடத்துனர் நித்தியானந்தத்திடம் ரகளை செய்து பேருந்தின் கதவினை கைகளால் பலமாக தட்டியும், கல் மற்றும் தடிகளை எடுத்து பேருந்து கண்ணாடியை உடைத்துள்ளார். மேலும் ஓட்டுனர் இருக்கை முன்னே இருந்த  வயர்களை பிடுங்கியும் ஹாரன் உயரையும் பிடுங்கியும் வீசியெறிந்தார். மேலும் பேருந்து ஓட்டுனர் நித்தியானந்தனை தடியால் தாக்கியதில் அவர் படு காயமடைந்தார்.

அதனைத்தொடர்ந்து நித்தியானந்தனை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் ஜிஆர் பாளையம் மக்கள் ஒன்று திரண்டு வெளியூரில் இருந்து வந்து பேருந்து கண்ணாடி உடைத்து, ஓட்டுனரை தாக்கியதால் எங்கள் ஊர் பெயர் கெடுகிறதே என்று செந்தில் குமாரை கண்டித்தனர். தகவல் அறிந்த அரியூர் சப் இன்ஸ்பெக்டர்கள் சாந்தகுமார், கேசவன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில்குமாரை பிடித்து விசாரித்தனர்.ஆனால் செந்தில்குமார் குடிபோதையில் என்ன பேசுகிறோமோ என்று  தெரியாமல் உளறியுள்ளார். குடிபோதையில் உள்ள நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்ல முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

 


Watch video: நிறுத்து! நிறுத்து! சவம் போற ரோட்டுல பஸ் போகக் கூடாது..  நடுரோட்டில் ரகளை செய்த போதை ஆசாமி!

அப்போது செந்தில்குமாரை அவரது உறவினர்கள் டூவீலரில் ஏற்றிக்கொண்டு பறந்துவிட்டனர்.இதைப்பார்த்த ஜிஆர் பாளையம் மக்கள் குற்றவாளியை கண்டிப்பாக தண்டிக்கவேண்டும் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு போலீசாரோ கண்டிப்பாக குற்ற வாளியை கைது செய்து தண்டிக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்து துறையினரை,அழைத்து பேருந்தை அரியூர் காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றனர். இதனிடையே ஓட்டுனர் நித்தியானந்தன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget