மேலும் அறிய

திருவண்ணாமலையில் பெண் கொலை... நகைக்காக கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை

விவசாய நிலத்தில் கை, கால், கழுத்து அறுபட்ட நிலையில் கொல்லப்பட்ட பெண் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி ஆகியவை திருடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த இருசப்பன் (55) இவரது மனைவி சாந்தி (47) இந்த தம்பதியினருக்கு தீபா என்ற ஒரு மகள் 11ம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த 2006ம் ஆண்டு இருசப்பன் நோய் வாய்பட்டு இறந்துள்ளார். தனது மகள் தீபாவுடன் தனியாக வசித்து வரும் சாந்தி குடும்ப வருவாய்க்காக கட்டட வேலை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் சாந்தி நேற்று கட்டட வேலைக்கு சென்று இரவு வீட்டுக்கு வந்த நிலையில் இரவு சுமார் 8.30 மணிக்கு சாந்திக்கு அவரது தொலைபேசிக்கு அழைப்பு வந்ததாகவும் அதன்பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது.  நீண்ட நேரம் ஆகியும் சாந்தி வீடு திரும்பாத காரணத்தால் அவரது மகள் தீபா தொடர்ந்து தாய் சாந்தியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சாந்தி தொலைபேசியை எடுக்காததால் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தாரின் உதவியுடன் இரவு முழுவதும் தாய் சாந்தியை மகள் தீபா தேடினார்.


திருவண்ணாமலையில் பெண் கொலை... நகைக்காக கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை

இந்நிலையில் இன்று காலையில் புதுப்பாளையம் கிராமத்தில் அருகே உள்ள பலராமன் என்பவரது விவசாய நிலத்தில் கை, கால் மற்றும் காது, கழுத்து கொடூரமான முறையில் அறுக்கபட்ட நிலையில் சாந்தி சடலமாக கிடந்ததுள்ளார். 

தகவல் அறிந்து வந்த ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் மற்றும் கண்ணமங்கலம் காவல்துறையினர் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கைரேகை டி.எஸ்.பி சுந்தராஜன் சம்பவ இடத்தில் கைரேகை தடயங்களை சேகரித்தார். மேலும் குற்றவாளியை பிடிப்பதற்கு  மோப்ப நாய் ’மீயான்’ வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் சோதனையும் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் பெண் கொலை... நகைக்காக கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை

இக்கொலை சம்பவம் குறித்து கண்ணமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் குறித்து டி.எஸ்.பி கோடீஸ்வரன் தெரிவிக்கையில்,

புதுப்பாளையம் கிராமத்தில் சடலமாக இருந்த சாந்தியின் உடலில் கழுத்து, கால், கை, காது, மூக்கு ஆகியவை அறுக்கப்பட்ட நிலையில், அவர் அணிந்து இருந்த தங்க கம்மல், மூக்குத்தி அறுத்து எடுக்கப்பட்டுள்ளது. சாந்தி அணிந்திருந்த நகையை கொள்ளை அடிப்பதற்காக கொலை நடந்திருக்கலாம் எனவும் கொலை நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சாந்தியின் தொலைபேசியில் உள்ள எண்களை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறினார். புதுப்பாளையம் கிராமத்தில் பெண் கொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
" கட்டுப்பாடு இல்லாத பாலியல் உணர்ச்சி " ஆண் உறுப்பை அறுத்த நபர்
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
CM VIJAY CABINET LIST : விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
Annamalai Rajini: ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
CM Vijay: அதிமுக-வை ஒரு ஆளாய் கூட மதிக்காத விஜய்! ஆதங்கப்படும் இரட்டை இலை விசுவாசிகள்!
CM Vijay: அதிமுக-வை ஒரு ஆளாய் கூட மதிக்காத விஜய்! ஆதங்கப்படும் இரட்டை இலை விசுவாசிகள்!
Honda Livo பைக்கில் லாங் ட்ரிப் போலாமா? சென்னை டூ விருதுநகர் - ஓர் உண்மை அனுபவம்
Honda Livo பைக்கில் லாங் ட்ரிப் போலாமா? சென்னை டூ விருதுநகர் - ஓர் உண்மை அனுபவம்
Stalin vs Vaiko : நான் அப்பவே சொன்னேன்.! வைகோவை சேர்க்காதீங்கனு.. இப்ப அனுபவியுங்க - குஷியில் கேஎஸ்ஆர்
நான் அப்பவே சொன்னேன்.! வைகோவை சேர்க்காதீங்கனு.. இப்ப அனுபவியுங்க - குஷியில் கேஎஸ்ஆர்
Car Sale: கோடை வெயிலில் கல்லா கட்டியது யார்? மாருதி Vs ஹுண்டாய் Vs மஹிந்த்ரா - எந்த கார் நம்பர் ஒன்? EV எப்படி?
கோடை வெயிலில் கல்லா கட்டியது யார்? மாருதி Vs ஹுண்டாய் Vs மஹிந்த்ரா - எந்த கார் நம்பர் ஒன்? EV எப்படி?
Embed widget