மேலும் அறிய

'கர்ப்பத்தை கலைத்து விடு' பட்டதாரி இளம்பெண்ணை கர்ப்பமாக்கி மோசடி - ஜிம் உரிமையாளர் கைது

கடந்த 2024ம் ஆண்டு மார்ச்.15ம் தேதி, ஜிம் உரிமையாளரான சாக்கோட்டை பகுதியை சேர்ந்த பத்மகுமரன் (27) பட்டதாரி பெண்ணிடம், திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி பழகியுள்ளார்.

தஞ்சாவூர்: பட்டதாரி இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பணம், நகையை மோசடி செய்த ஜிம் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 31 வயது பட்டதாரி பெண். விவகாரத்து பெற்ற பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள ஒரு ஜிம்மில், பயிற்சிக்காக கடந்த ஆண்டு இந்த இளம்பெண் சேர்ந்துள்ளார். 

கடந்த 2024ம் ஆண்டு மார்ச்.15ம் தேதி, ஜிம் உரிமையாளரான சாக்கோட்டை பகுதியை சேர்ந்த பத்மகுமரன்,27,. பட்டதாரி பெண்ணிடம், திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி பழகியுள்ளார். மேலும், புதியதாக ஒரு ஜிம் திறக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும் என அந்த இளம்பெண்ணிடம், பத்மகுமரன் கேட்டுள்ளார். இதை நம்பி அந்தப் பெண்ணும், தனது நகைகளை அடகு வைத்து, 38 லட்சம் ரூபாயை, பத்மகுமரனின் வங்கி கணக்கில் அனுப்பியுள்ளனர். இந்த பணத்தை கொண்டு, பத்மகுமரன் செட்டிமண்டபம் பகுதியில் புதிய ஜிம் ஒன்றை திறந்தார். 

கடந்த, அக்டோபர் மாதம், மகாமக குளம் ஜிம்மில் இருந்த பத்மகுமரனிடம், இளம் பெண் திருமணம் தொடர்பாக கேட்ட போது, தனது தாயிடம் கேட்டு, உன்னை தான் திருமணம செய்துக்கொள்ளுவேன் என கூறி, அந்த இளம் பெண்ணிடம், பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டதால், இளம் பெண் கர்ப்பமானார். 

இதன்பிறகு, அந்த பெண்ணிடம், பத்மகுமரன் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண், பத்மகுமரனை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் அந்த இளம்பெண் முற்றிலுமாக தவிர்த்துள்ளார். இதையடுத்து பத்மகுமரனின் தாய் புனிதாதேவியை நேரில் சந்தித்து நடந்த விபரங்களை அந்த இளம் பெண் கூறியுள்ளார். அப்போது, புனிதாதேவி, என் மகன் உன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருவான். நீ கர்ப்பத்தை கலைத்து விடு என மிரட்டியுள்ளார்.  

இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண், கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில், புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு, பத்மகுமரன், இளம் பெண்ணிடம் வாங்கிய 38 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுப்பதாகவும், திருமணம் செய்துக் கொள்வதாகவும் உறுதி தெரிவித்துள்ளார். இதனால் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரை அந்த இளம்பெண் வழக்கை வாபஸ் பெற்றார். 

இந்நிலையில் கடந்த பிப்.23ம் தேதி, சுவாமிமலை முருகன் கோயிலுக்கு அந்த இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுவதாக கூறி பத்மகுமரன் வரவழைத்தார். அங்கு சென்ற அந்த இளம்பெண்ணிடம், கர்ப்பத்தை கலைத்து விட்டு இல்லையென்றால், கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.  

இதனால் மனமுடைந்த இளம்பெண் துாக்கமாத்திரையை சாப்பிட்டுள்ளார். இதையறிந்த அவரது தந்தை இளம் பெண்ணை, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதுார் அனைத்து மகளிர் போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது, இளம் பெண் பத்மகுரன், அவரது தாய் புனிதா தேவி மீது புகார் அளித்தார். 

புகாரின் பேரில், நேற்றுமுன்தினம் பத்குமரனை திருவிடைமருதுார் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget