மேலும் அறிய

தலையை சிதைத்து வெறியாட்டம்... நடு ரோட்டில் ஓட, ஓட விரட்டி முதியவர் வெட்டிக் கொலை

தஞ்சாவூர்: தஞ்சையில் வக்கீல் குமாஸ்தாவை ஓட, ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதை தடுக்க வந்த அவருடைய மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல்

தஞ்சை வடக்கு வாசல் சிரேஸ்சத்திரம் சாலையைச் சேர்ந்தவர் அற்புதம் (70). வக்கீல் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தார். அப்போது திடீரென்று வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் அற்புதத்தை அரிவாளால் வெட்ட முயன்றது. அப்போது அவர் அந்த கும்பலை பிடித்து தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்துள்ளார்.

ரோட்டில் ஓட, ஓட விரட்டி கொலை

அவர்களிடம் இருந்து தப்பிய அற்புதம் வடக்கு வாசல் நான்கு ரோட்டை நோக்கி ஓடிவந்துள்ளார். அவரது வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஓடி வந்த போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் அரிவாள் உட்பட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி தள்ளினர். முதியவர் என்று கூட நினைக்காமல் அந்த கும்பல் வெறியாட்டம் ஆடியது. வீடு புகுந்து கணவரை வெட்ட ஒரு கும்பல் வந்ததை கண்டு அற்புதத்தின் மனைவியும் சுபாங்கினி (65) பின்னாடியே ஓடி வந்துள்ளார். அவர் மர்ம நபர்களை தடுக்கும் போது அவரையும் ஈவுஇரக்கம் பார்க்காமல் தலையில் வெட்டி உள்ளனர்.

தலையை சிதைத்து வெறியாட்டம்

பின்னர் மர்ம நபர்கள் அற்புதத்தை நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி தலையை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேற்கு போலீசார் விசாரணை

இது குறித்து தகவலறிந்த தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத், டவுன் டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து காயமடைந்த சுபாங்கினியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த அற்புதத்தின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.  முதல் கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் நான்கு  மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் வக்கீல் குமாஸ்தா அற்புதத்தின் கொலை பின்னணியில் அவரது இரண்டாவது மருமகனுக்கு சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

வக்கீல் குமாஸ்தா கொலை வழக்கின் பின்னணி

வக்கீல் குமாஸ்தா அற்புதத்தின் இரண்டாவது மகள் மேனகா. இவரை சக்திவேல் என்பவர் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சக்திவேல், சசிகலா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். தன் மகளை மருமகன் சக்திவேல் ஏமாற்றியதால் இதனை அற்புதம் தட்டி கேட்டுள்ளார்.

இந்நிலையில் விவாகரத்து கேட்டு சக்திவேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதைடுத்து அற்புதம் சக்திவேல் இரண்டாவது மனைவியான சசிகலாவுக்கு வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் கூலிப்படையினர் வைத்து மாமனாரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சக்திவேலை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
Embed widget