மேலும் அறிய

எவ்வளவு சொல்லியும் அடங்காத கணவன்... மனைவி செய்த சம்பவம் - கும்பகோணத்தில் அதிர்ச்சி

ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த மற்றொரு பெண்ணுடன் அன்பரசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கள்ளக்காதலை கைவிடாத கணவன் தலையில் அம்மி குழலிக் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தார். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது42). இவருடைய மனைவி கலைவாணி (38). இவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் முடிந்து 12 வயது மற்றும் 9 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். 

திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் வேலைக்காக கும்பகோணத்திற்கு வந்து ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக அன்பரசன் திருபுவனம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த மற்றொரு பெண்ணுடன் அன்பரசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இதனை அறிந்த கலைவாணி தனது கணவரிடம் வேறு பெண்ணுடன் இருக்கும் கள்ளக்காதலை கைவிடமாறு தெரிவித்து தகராறு செய்து வந்துள்ளார். இதனால் பேக்கரி வேலையை விட்டு வந்த அன்பரசன் கடந்த 2 மாதங்களாக தச்சு தொழில் பார்த்து வந்துள்ளார். இருந்தாலும் அன்பரசன் அந்தப் பெண்ணுடனான தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து செல்போனில் பேசி தொடர்பை நீட்டித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று மாலையில் இந்த பிரச்சனை தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அன்று இரவு கலைவாணி, அன்பரசனிடம் கள்ளக்காதலை கைவிட்டு குடும்பத்தை மட்டும் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். அப்போது அன்பரசன் மற்றும் கலைவாணி மத்தியில்  தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சுமார் இரவு 10 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த அன்பரசன் தலையில் அம்மிக் குழவி கல்லை போட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அன்பரசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். 

இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து கலைவாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget