மேலும் அறிய

பிரியாணி சமைக்க பாத்திரம் கேட்டதால் மோதல்: திருமணம் நின்று போன பரிதாபம்!

தண்டரம்பட்டு அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 10 பேர் படுகாயம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் திருமணம் நின்றது

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள தரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இணையத்துல்லா வயது ( 45), இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது பதவி காலத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்திருந்த நிலையில் . இந்த முறைகேடு தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சையத் கவுஸ்கான் வயது (50) என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக முறைகேடு நிரூபிக்கப்பட்டதால் இணையத்துல்லாவுக்கு கோர்ட்டு மூலமாக அபராதம் விதிக்கப்பட்டது.  


அதனைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு பலமுறை காவல்துறை மற்றும் தாசில்தார் மூலமாக சமாதானம் மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் இவர்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. 

 


பிரியாணி சமைக்க பாத்திரம் கேட்டதால் மோதல்: திருமணம் நின்று போன பரிதாபம்!

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சையத் கவுஸ்கானை ஜமாத்தில் இருந்து விலக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து  சையத் கவுஸ்கானின் உறவினருக்கு அதே ஊரில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  திருமணத்திற்கு பிரியாணி சமையல் செய்வதற்காக  கவுஸ்கான் மற்றும் உறவினர்கள் ஜமாத்திற்கு சென்று சமையல் பாத்திரங்களை கேட்டுள்ளனர். அவர் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், திருமணத்தை நடத்தி தரும்படியும் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு ஜமாத்தார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. 

இந்த வாய்த்தகராறு பெரியதாகி கலவரமாக மாறியது. இருதரப்பினரும் கட்டைகள் மற்றும் கத்தி ஆகியவற்றுடன் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். இந்த கலவரத்தில் இணையதுல்லா உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 


பிரியாணி சமைக்க பாத்திரம் கேட்டதால் மோதல்: திருமணம் நின்று போன பரிதாபம்!


இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான ஆயுதப்படை காவல்துறையினர் அந்த கிராமத்தில் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. சம்பவம் நடைபெற்ற பகுதியை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, கூடுதல் கண்காணிப்பாளர்  அசோக்குமார், வெள்ளைத்துரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரண நடத்தினர். சாத்தனூர் காவல்துறையினர் இந்த கலவரம் தொடர்பாக 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சையத் கவுஸ்கான் உள்பட 13 பேரை கைது செய்தனர். மேலும் தரடாப்பட்டு கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த கலவரத்தின் காரணமாக  நடைபெற இருந்த திருமணம் நின்றது. அந்த கிராம பகுதியில் இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

முக்கிய வரலாற்றுச் சின்னம்.. முற்றிலுமாக சிதையும் நிலையில் வந்தவாசி கோட்டை.. மக்களின் கோரிக்கை என்ன?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கத்தினால் குத்துவேன்! - பெண்ணின் வாயை பொத்தி வாலிபர்கள் அட்டூழியம் - திருப்பத்தூரில் நடந்த பகீர் சம்பவம்
கத்தினால் குத்துவேன்! - பெண்ணின் வாயை பொத்தி வாலிபர்கள் அட்டூழியம் - திருப்பத்தூரில் நடந்த பகீர் சம்பவம்
ஊருக்கு நாலு பேர் இருந்துட்டு எங்களையே மிரட்டுறீங்களா? காங்கிரஸாருக்கு எதிராக திரண்ட திமுகவினர்! சீர்காழியில் பரபரப்பு‌...
ஊருக்கு நாலு பேர் இருந்துட்டு எங்களையே மிரட்டுறீங்களா? காங்கிரஸாருக்கு எதிராக திரண்ட திமுகவினர்! சீர்காழியில் பரபரப்பு‌...
Watch Video: பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை செய்த அக்கிரமம்! எலி மருந்து குடித்த தங்கை! பரபரப்பு வாக்குமூலம்
அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை செய்த அக்கிரமம்! எலி மருந்து குடித்த தங்கை! பரபரப்பு வாக்குமூலம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
Minister Keerthana : வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
DMK ADMK ED: லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
DMK Cong: ”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
Embed widget