மேலும் அறிய

பிரியாணி சமைக்க பாத்திரம் கேட்டதால் மோதல்: திருமணம் நின்று போன பரிதாபம்!

தண்டரம்பட்டு அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 10 பேர் படுகாயம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் திருமணம் நின்றது

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள தரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இணையத்துல்லா வயது ( 45), இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது பதவி காலத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்திருந்த நிலையில் . இந்த முறைகேடு தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சையத் கவுஸ்கான் வயது (50) என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக முறைகேடு நிரூபிக்கப்பட்டதால் இணையத்துல்லாவுக்கு கோர்ட்டு மூலமாக அபராதம் விதிக்கப்பட்டது.  


அதனைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு பலமுறை காவல்துறை மற்றும் தாசில்தார் மூலமாக சமாதானம் மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் இவர்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. 

 


பிரியாணி சமைக்க பாத்திரம் கேட்டதால் மோதல்: திருமணம் நின்று போன பரிதாபம்!

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சையத் கவுஸ்கானை ஜமாத்தில் இருந்து விலக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து  சையத் கவுஸ்கானின் உறவினருக்கு அதே ஊரில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  திருமணத்திற்கு பிரியாணி சமையல் செய்வதற்காக  கவுஸ்கான் மற்றும் உறவினர்கள் ஜமாத்திற்கு சென்று சமையல் பாத்திரங்களை கேட்டுள்ளனர். அவர் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், திருமணத்தை நடத்தி தரும்படியும் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு ஜமாத்தார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. 

இந்த வாய்த்தகராறு பெரியதாகி கலவரமாக மாறியது. இருதரப்பினரும் கட்டைகள் மற்றும் கத்தி ஆகியவற்றுடன் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். இந்த கலவரத்தில் இணையதுல்லா உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 


பிரியாணி சமைக்க பாத்திரம் கேட்டதால் மோதல்: திருமணம் நின்று போன பரிதாபம்!


இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான ஆயுதப்படை காவல்துறையினர் அந்த கிராமத்தில் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. சம்பவம் நடைபெற்ற பகுதியை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, கூடுதல் கண்காணிப்பாளர்  அசோக்குமார், வெள்ளைத்துரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரண நடத்தினர். சாத்தனூர் காவல்துறையினர் இந்த கலவரம் தொடர்பாக 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சையத் கவுஸ்கான் உள்பட 13 பேரை கைது செய்தனர். மேலும் தரடாப்பட்டு கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த கலவரத்தின் காரணமாக  நடைபெற இருந்த திருமணம் நின்றது. அந்த கிராம பகுதியில் இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

முக்கிய வரலாற்றுச் சின்னம்.. முற்றிலுமாக சிதையும் நிலையில் வந்தவாசி கோட்டை.. மக்களின் கோரிக்கை என்ன?

தலைப்பு செய்திகள்

மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி
மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி
5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு... பெண்ணை வன்புணர்ச்சி செய்த நபருக்கு 10 ஆண்டு ஜெயில்...
5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு... பெண்ணை வன்புணர்ச்சி செய்த நபருக்கு 10 ஆண்டு ஜெயில்...
வீட்டு வாசலில் போதை ஆசாமி உறக்கம்... உயிர் பயத்தில் தவித்த தவித்த தாய், மகள்கள்...
வீட்டு வாசலில் போதை ஆசாமி உறக்கம்... உயிர் பயத்தில் தவித்த தவித்த தாய், மகள்கள்...
" மனைவியை வேறு ஒருவருடன் அந்த கோலத்தில் பார்த்த கணவர் " திருமணம் மீறிய உறவு !! நடந்தது என்ன ?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
TN Assembly: 5 வருடங்களுக்கான வெற்றி தமிழகம் விஷன்..! 10 முக்கிய தூண்கள் - சிஎம் விஜயின் ப்ளான் வெளியீடு
5 வருடங்களுக்கான வெற்றி தமிழகம் விஷன்..! 10 முக்கிய தூண்கள் - சிஎம் விஜயின் ப்ளான் வெளியீடு
CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!
CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!
Senior Citizens Bus Token : மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம்.! டோக்கன் வாங்க மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த போக்குவரத்து கழகம்
மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம்.! டோக்கன் வாங்க மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த போக்குவரத்து கழகம்
Kanniyakumari Special Train : எழும்பூர் டூ கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்.! காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ்- முன்பதிவு எப்போது.?
எழும்பூர் டூ கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்.! காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ்- முன்பதிவு எப்போது.?
Embed widget