மேலும் அறிய

பிரியாணி சமைக்க பாத்திரம் கேட்டதால் மோதல்: திருமணம் நின்று போன பரிதாபம்!

தண்டரம்பட்டு அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 10 பேர் படுகாயம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் திருமணம் நின்றது

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள தரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இணையத்துல்லா வயது ( 45), இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது பதவி காலத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்திருந்த நிலையில் . இந்த முறைகேடு தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சையத் கவுஸ்கான் வயது (50) என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக முறைகேடு நிரூபிக்கப்பட்டதால் இணையத்துல்லாவுக்கு கோர்ட்டு மூலமாக அபராதம் விதிக்கப்பட்டது.  


அதனைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு பலமுறை காவல்துறை மற்றும் தாசில்தார் மூலமாக சமாதானம் மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் இவர்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. 

 


பிரியாணி சமைக்க பாத்திரம் கேட்டதால் மோதல்: திருமணம் நின்று போன பரிதாபம்!

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சையத் கவுஸ்கானை ஜமாத்தில் இருந்து விலக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து  சையத் கவுஸ்கானின் உறவினருக்கு அதே ஊரில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  திருமணத்திற்கு பிரியாணி சமையல் செய்வதற்காக  கவுஸ்கான் மற்றும் உறவினர்கள் ஜமாத்திற்கு சென்று சமையல் பாத்திரங்களை கேட்டுள்ளனர். அவர் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், திருமணத்தை நடத்தி தரும்படியும் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு ஜமாத்தார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. 

இந்த வாய்த்தகராறு பெரியதாகி கலவரமாக மாறியது. இருதரப்பினரும் கட்டைகள் மற்றும் கத்தி ஆகியவற்றுடன் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். இந்த கலவரத்தில் இணையதுல்லா உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 


பிரியாணி சமைக்க பாத்திரம் கேட்டதால் மோதல்: திருமணம் நின்று போன பரிதாபம்!


இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான ஆயுதப்படை காவல்துறையினர் அந்த கிராமத்தில் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. சம்பவம் நடைபெற்ற பகுதியை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, கூடுதல் கண்காணிப்பாளர்  அசோக்குமார், வெள்ளைத்துரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரண நடத்தினர். சாத்தனூர் காவல்துறையினர் இந்த கலவரம் தொடர்பாக 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சையத் கவுஸ்கான் உள்பட 13 பேரை கைது செய்தனர். மேலும் தரடாப்பட்டு கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த கலவரத்தின் காரணமாக  நடைபெற இருந்த திருமணம் நின்றது. அந்த கிராம பகுதியில் இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

முக்கிய வரலாற்றுச் சின்னம்.. முற்றிலுமாக சிதையும் நிலையில் வந்தவாசி கோட்டை.. மக்களின் கோரிக்கை என்ன?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

GK Mani removed from PMK: பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.! ராமதாசுக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த அன்புமணி
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.! ராமதாசுக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த அன்புமணி
Rohit Kohli: சொதப்பிய ரோகித்.. அசத்திய கோலி - பிசிசிஐ நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்
Rohit Kohli: சொதப்பிய ரோகித்.. அசத்திய கோலி - பிசிசிஐ நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்
Southern District Trains: தென்மாவட்ட மக்களே..! ஜன. 1 முதல் நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில் நேரம் மாற்றம்
Southern District Trains: தென்மாவட்ட மக்களே..! ஜன. 1 முதல் நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில் நேரம் மாற்றம்
Ramadoss vs Anbumani : பாமக கொடி, சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை.! வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ராமதாஸ்
பாமக கொடி, சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை.! திடீரென வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ராமதாஸ்
ABP Premium

வீடியோ

Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
TVK Ajitha ICU| ’’நான் திமுக கைக்கூலியா?’’ICU-வில் தவெக அஜிதா! தவெகவில் நடப்பது என்ன?
Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?
தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GK Mani removed from PMK: பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.! ராமதாசுக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த அன்புமணி
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.! ராமதாசுக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த அன்புமணி
Rohit Kohli: சொதப்பிய ரோகித்.. அசத்திய கோலி - பிசிசிஐ நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்
Rohit Kohli: சொதப்பிய ரோகித்.. அசத்திய கோலி - பிசிசிஐ நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்
Southern District Trains: தென்மாவட்ட மக்களே..! ஜன. 1 முதல் நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில் நேரம் மாற்றம்
Southern District Trains: தென்மாவட்ட மக்களே..! ஜன. 1 முதல் நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில் நேரம் மாற்றம்
Ramadoss vs Anbumani : பாமக கொடி, சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை.! வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ராமதாஸ்
பாமக கொடி, சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை.! திடீரென வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ராமதாஸ்
Tamilnadu Round Up: புதிய உச்சத்தில் தங்கம், அன்புமணிக்கு ராமதாஸ் வார்னிங், பக்தர்கள் 3 பேர் பலி - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: புதிய உச்சத்தில் தங்கம், அன்புமணிக்கு ராமதாஸ் வார்னிங், பக்தர்கள் 3 பேர் பலி - தமிழ்நாட்டில் இதுவரை
Train Ticket Price: இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது - எந்த ரயிலில் அதிகபட்சம்? கிலோ மீட்டருக்கு எவ்வளவு?
Train Ticket Price: இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது - எந்த ரயிலில் அதிகபட்சம்? கிலோ மீட்டருக்கு எவ்வளவு?
Tea Health: டீ பிரியர்களே உஷார்..! உடனே நிறுத்துங்க - மத்திய அரசு உத்தரவு - தேநீர் நிறுவனங்களில் மோசடி?
Tea Health: டீ பிரியர்களே உஷார்..! உடனே நிறுத்துங்க - மத்திய அரசு உத்தரவு - தேநீர் நிறுவனங்களில் மோசடி?
TVK Party: தொடரும் பரபரப்பு.. திருவள்ளூர் தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி.. அதிர்ச்சியில் விஜய்!
TVK Party: தொடரும் பரபரப்பு.. திருவள்ளூர் தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி.. அதிர்ச்சியில் விஜய்!
Embed widget