மேலும் அறிய

தென்காசி அருகே இருவரை இரும்புக்கம்பியால் தாக்கிய பஞ்சாயத்து தலைவர்

பழைய குற்றாலம் கார் பார்க்கிங் குத்தகை ஏலம் எடுப்பது  தொடர்பாக இருந்த முன்விரேதம் காரணமாக இருவரை இரும்பிக்கம்பியால் தாக்கிய பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறவினர்கள்.

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி பகுதியே சேர்ந்தவர் கோபிநாத்.  இவர் பழைய குற்றாலம் பகுதியில் கார் பார்க்கிங் நிலத்தை குத்தகை எடுத்து தொழில் செய்து வருகிறார். அதே போன்று ஆயிரப்பேரி பகுதியில்  கோவிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து நான்கு தலைமுறையாக நிர்வாகித்தும் வருகிறார். இந்த நிலையில் அவருக்கு சொந்தமான ஓர் இடத்தில் பஞ்சாயத்து கழிவுநீர் தேங்கி கிடந்துள்ளது. இதனால் அருகில் இருந்த மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் இருந்துள்ளது. மின்கம்பம் கீழே விழுந்து விபத்து ஏற்படும் முன் அதனை சரிசெய்ய வேண்டும் என அதனை சரிசெய்ய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை சுற்றி மண்ணை நிரப்பி அதனை சமப்படுத்தியதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த பஞ்சாயத்து தலைவர் சுடலையாண்டி என்பவர் எப்படி இந்த இடத்தில் நீங்கள் மின்கம்பத்தை சுற்றி சரி செய்யலாம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது திடீரென அந்த வழியாக பஞ்சாயத்து தலைவரின் மருமகன் மற்றும் மகன் வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து கோபிநாத்தின்  தலையில் பலமாக தாக்கியதாக தெரிகிறது. கோபிநாத்தின் உடனிருந்த அவரது வழக்கறிஞரையும் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக குற்றாலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


தென்காசி அருகே இருவரை இரும்புக்கம்பியால் தாக்கிய பஞ்சாயத்து தலைவர்

இதுகுறித்து கோபிநாத்தின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ஒரு வழக்கு விசயமாக அவரை சந்திக்க சென்றேன். ஆயிரப்பேரியில் கோவில் நிலத்தை குத்தகை எடுத்து பராமரித்து வருகின்றார். அந்த இடத்தில் பஞ்சாயத்து தலைவரின் உள் நோக்கத்துடன் ஊரின் கழிவு நீர் அனைத்தையும் அப்பகுதியில் விடுகின்றனர். அது கோவில் சொத்து அதனை பராமரிக்க வேண்டும் என கோபிநாத் ஏற்கனவே தென்காசி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. மீண்டும் அதே இடத்தில் கழிவு நீரை திறந்து விடுவதால் அங்குள்ள மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. பெரிய ஆபத்து ஏற்படும் நிலையில் அதனை சரிசெய்ய பிடிஓ விடம் அனுமதி பெற்று அதனை  மண் நிரப்பிக் கொண்டிருந்தோம். அப்போது அந்த இடத்திற்கு வந்த பஞ்சாயத்து தலைவர் தகாத வார்த்தையில் பேசி பிரச்சினை செய்ததோடு அவருடைய மருமகனுக்கு தொடர்பு கொண்டு வரச்சொல்லி காரில் இருந்து கம்பியை எடுத்து வந்து தாக்கினர். இருவருக்கும் அதில் பலத்த காயம் ஏற்பட்டது.  ஊராட்சி மன்றத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் இவர்கள் தான் காரணமாக இருக்கின்றனர். இவர்கள் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பஞ்சாயத்து தலைவர், அவரது மருமகன் மற்றும் மகன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இருவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
iPhone 16 Discount: ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Most Cheapest Cars India: சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
Embed widget